Monday, September 3, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஈழத் தமிழர் வரலாறு

Posted: 03 Sep 2007 06:50 PM CDT

சென்னை, செப். 4: 'தமிழ் பாசறை' என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தினகரன் நிருபரிடம் வி.சி.குகநாதன் கூறியதாவது:

ஈழத்தில் வாழும் தமிழர்களின் வரலாறு, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கதைகளை உள்ளடக்கிய வரலாற்று திரைப்படம் இது.
50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தேவா இசையில் 8 பாடல்கள் பதிவாகி இருக்கிறது. இதில் 3 பாடல்களை யார் கண்ணன், புகழேந்தி தங்கராஜ், செல்வராஜன் ஆகியோர் படம் பிடிக்கிறார்கள்.

ரியாஸ்கான் இலங்கை மன்னராக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஒரு மணி நேர படமாக தயாரிக்கப்பட்டு ஆங்கிலம், ஜெர்மன், கனடா, பிரஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.


நன்றி: தினகரன்

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

Posted: 03 Sep 2007 01:39 PM CDT

9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்று நோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

பிராண்ஸில் இரண்டு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் இணைந்தன

Posted: 03 Sep 2007 01:42 PM CDT

பிரான்ஸ் நாட்டு எரிசக்தி நிறுவனங்களான சூயஸ் மற்றும் அரசுக்குச் சொந்தமான காஸ் த பிரான்ஸ் ஆகியவற்றின் இணைப்பை வரவேற்றுள்ள பிரான்ஸின் பிரதமர் பிரன்ஸ்வா ஃபில்லான் அவர்கள், இதன் மூலம் பிரான்ஸ் நாட்டுக்கு சர்வதேச எரிசக்தி வணிகத்தில், வலுவான பிரசன்னம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தற்போது உலகின் இரண்டு முன்னணி எரிசக்தி நிறுவனங்களைக் தன்வசம் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இரண்டாவது நிறுவனம் என்று அவர் குறிப்பிட்டது அரசுக்குச் சொந்தமான மின்சக்தி விநியோக நிறுவனத்தையாகும்.

பிரஞ்சு அதிபர் நிக்கொலஸ் சர்கோசி அவர்களின் ஆதரவு பெற்ற ஒப்பந்தம் ஒன்றின்படி, இந்தப் புதிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகளை அரசாங்கம் தன்வசம் வைத்திருக்கும்.

பிபிசி தமிழ்

French GDF, Suez agree new energy merger | Reuters.co.uk
Suez and Gaz de France Announce Merger - WSJ.com

அமெரிக்க அதிபர் புஷ் இராக்கிற்கு திடீர் விஜயம்

Posted: 03 Sep 2007 01:34 PM CDT

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இராக் சென்றுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில் அவர் அங்கு செல்வது இதுவே முதல் முறை.

பாக்தாதிற்கு மேற்கேயுள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஒரு விமானப்படைத் தளத்தில் அவர் இறங்கினார். அங்கு அவர் மூத்த அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இராக்கில் தொடந்து நடைபெற்று வரும் வன்முறையை குறைக்கும் நோக்கில் அங்கு மேலும் பல ஆயிரம் துருப்புகளை அனுப்புவது குறித்து அமெரிக்கத் தளபதிகள் தங்களது மதிப்பீட்டை அமெரிக்க காங்கிரஸுக்கு அளிப்பதற்கு சிலநாட்கள் உள்ள நிலையில், புஷ் இராக் சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் அன்பார் மாகாணத்திற்கு சென்றிருப்பது, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினத் தலைவர்களை அல் கையீதாவிற்கு எதிராக, அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக திருப்பியதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது என்று பாக்தாதிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பிபிசி தமிழ்

AFP: Bush visits Asia as Iraq row rumbles at home
Bush: 'Fewer American forces' possible in Iraq - CNN.com

தில்லி தெருக்களில் பிச்சையெடுக்கும் முன்னாள் விளம்பர நடிகை.

Posted: 03 Sep 2007 11:53 AM CDT

32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.

வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.

மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.

பி/டி/ஐ செய்திகளிலிருந்து...
Former model found begging on the streets of Delhi

தமிழகம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு

Posted: 03 Sep 2007 08:21 AM CDT

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக தீவிரவாதிகள் தமிழகத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், கோயில்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

ஐ.நா பாராட்டும் ம.பி.முதல்வர்

Posted: 03 Sep 2007 08:18 AM CDT

ஐ.நா.சபையின் 21-ம் நூற்றாண்டு மேம்பாட்டு குறிக்கோள்களை எட்ட திறம்பட செயல்பட்டதாக மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகானுக்கு ஐ.நா. சபை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்தூரில் புதன்கிழமை நடைபெறும் விழாவில், ஐ.நா. நூற்றாண்டு மேம்பாட்டு பிரசாரப் பிரிவின் ஆசியத் தலைவர் மினார் பிம்பாலே சான்றிதழை வழங்குகிறார்.

பசி-வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, பாலின வேறுபாட்டை ஒழித்தல், பெண் சுதந்திரம், பெண்சிசுக்கொலை தடுப்பு, கர்ப்பிணிகள் உடல்நலம், மலேரியா, எய்ட்ஸ் மற்றும் இதரநோய்கள் தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச தரத்தில் மேம்பாட்டு வளர்ச்சிக்கான ஒருமித்த முயற்சி மேற்கொள்தல் ஆகிய குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்று இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்தது.

அக்டோபர் 17-ம் தேதி உலக வறுமை ஒழிப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இத்தகைய ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொண்டு வருகிறது.

தினமணி

கல்பாக்கம் வான்வெளியில் விமானங்களுக்குத் தடை!

Posted: 03 Sep 2007 08:15 AM CDT

இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் போர் விமானங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவின் அணுசக்தி மையங்களில் ஒன்றான கல்பாக்கம் வான் பகுதியில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த முடிவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்திய விமானப் படை ஏற்கெனவே விமானப் போக்குவரத்து துறையுடன் இணைந்து பணிகளைத் துவக்கிவிட்டது. இதையடுத்து எல்லாவித வான் போக்குவரத்தும் கல்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்திற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் அதிநவீன ராடார்கள் மூலம் அப்பகுதியை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி

மாநில வளர்ச்சி பகைமையை மறக்கடித்தது...பீஹாரில்

Posted: 03 Sep 2007 07:16 AM CDT

நிதீஷும் லாலுவும் அரசியலில் ஒருவருக்கொருவர் பகை பாராட்டினாலும் மாநில வளர்ச்சி என்று வரும்போது ஒருவரையோருவர் பாராட்ட தயங்கவில்லை. இன்று நீதியமைச்சர் பி.சிதம்பரம் ஆயுள்காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த விழாவொன்றில் முதல்வர் நிதீஷ் குமார் பிஹாரில் உள்ள இரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவாரேயானால் அவரே நிரந்தர இரயில்வே அமைச்சராக இருக்க வேண்டும் எனக் கூறினார். லாலுபிரசாத் அவர்களும் நிதீஷ் குமார் இரயில்வே அமைச்சராக இருந்தபோது திட்டமிட்ட இரயில்பெட்டி தொழிற்சாலையை நான் முடித்து வைத்திருக்கிறேன்,அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார். உடனிருந்த வேதியல் மற்றும் உரத்துறை அமைச்சர் பாஸ்வானும் நாங்கள் மூவருமே வெவ்வேறு அரசியல் அணிகளையும் கொள்கைகளையும் பின்பற்றுபவர்கள்; அரசியல் வேற்றுமைகளும் கொண்டவர்கள்;இருப்பினும் பிஹாரின் வளம் என்று வரும்போது மூவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்.
The Telegraph - Calcutta : Northeast

அ தி மு க - பா ஜ க மீண்டும் கை கோர்க்கும்?

Posted: 03 Sep 2007 04:36 AM CDT

அ.தி.மு.க.- பா.ஜனதா மீண்டும் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. சமீபத்தில் 3-வது அணி அமைத்து தீவிரமாக மத்திய அரசியலில் ஈடுபட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால் இந்த அணி எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எனவே அ.தி.மு.க. 3-வது அணியை விட்டு விலகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 முறை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் கணிசமான பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட் டணி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பா.ஜனதா அணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட செகாவத் பாலமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. 3-வது அணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் செகாவத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டார்கள். இது பா.ஜனதாவுடன் ஏற்பட இருக்கும் கூட்டணியின் தொடக்கம் தான் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.

3-வது அணியில் அ.தி.மு.க. தவிர முலாயம்சிங் யாதவ் கட்சி, சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் உள்பட 7 மாநில கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 70 இடங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வுக்கு தற்போது தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அ.தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயார் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் இருந்தால் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியாது. எனவே, இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகி பாரதீய ஜனதா அணியில் சேரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளிலும் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மாலைமலர் தெரிவிக்கிறது.

பங்களாதேஷ்: கலிதா ஜியா கைது.

Posted: 03 Sep 2007 04:24 AM CDT

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, அவரது இளைய மகன் அராபத் ரகுமான் ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். முன்னதாக, கலிதா ஜியா கடந்த 2001-2006ம் ஆண்டுவரை பதவியில் இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மகன் அராபத் ரஹ்மான் பண்ணைக்கு ஆள் எடுக்க உதவியதாக பங்களாதேஷ் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் சார்பில் கலிதா ஜியா மீது நேற்றிரவு வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து இக்கைதுகள் நிகழ்ந்தன.

பங்களாதேஷ் தேசிய வருவாய் வாரியத்தின் நடுவண் புலனாய்வுக் குழு அண்மையில் இவர்களது வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கலிதா ஜியா உட்பட 11 பேரின் வங்கிக் கணக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.45 மணியளவில், டாக்கா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள கலிதாவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், அவரையும், அவரது மகனையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; சிறைச் செல்ல தாம் பயப்படவில்லை
என்று கலிதா ஜியா கூறினார்.

இன்சாட் விண்ணேவல் வெற்றிகரம்: தலைவர்கள் வாழ்த்து.

Posted: 03 Sep 2007 03:50 AM CDT

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 04 ராக்கெட் மூலம் ஞாயிறன்று மாலை 4.21 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த செயற்கைக் கோள் இன்சாட் 4சி ஆர் தொழில்நுட்ப காரணங்களால் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக விண்ணில் மாலை 6.20 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

3 கட்டங்களாக திட்டமிடப்பட்ட வேகத்துடன் டிரான்ஸ்பாண்டர்களை விண்வட்டப்பாதையில் செலுத்தியதும், விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இன்சாட் 4 சி ஆர் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பின்னர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் மாதவன் நாயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த செயற்கைக்கோள் மூலம் வீடுகளுக்கு நேரடி ஒளிபரப்பு வசதிகளை அளிப்பதற்காக உயர் சக்தி வாய்ந்த 12 கே.யு. பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் விண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இன்சாட் - 4 சி ஆர் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பதற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்பட தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை கற்பழித்த சாமியார் கைது.

Posted: 03 Sep 2007 03:37 AM CDT

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள செங்கம்மாள் கோயிலில் கோவிந்தசாமி (65) என்ற துறவி உள்ளார். இவர் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த 12 வயதுயை கற்பழித்ததாக தெரிகிறது.

மேலும் நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கோவிந்தசாமி கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., அசோக்குமார் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சாமியார் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டார்.

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

Posted: 02 Sep 2007 11:59 PM CDT

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

கலாநிதி மாறனுக்கு இரண்டாம் இடம்

Posted: 02 Sep 2007 11:35 PM CDT

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்குபவர்களின் தலை பத்து பட்டியல்:

1. முகேஷ் அம்பானி - ரிலையன்ஸ்: ரூ. 24.51 கோடி
2. கலாநிதி மாறன் - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி
3. காவேரி கலாநிதி - சன் தொலைக்காட்சி: ரூ. 23.26 கோடி

4. சுனில் மித்தல்- பார்தி ஏர்டெல்: 15 கோடி
5. கே அன்ஜி ரெட்டி - டாக்டர் ரெட்டிஸ்: 14.4
6. பி எம் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.99

7. பவன் முஞ்சால் - ஹீரோ ஹோண்டா: 13.88
8. நவீன் ஜிண்டால் - ஜிண்டால் ஸ்டீல்: 13.5
9. நகாகாவா (Toshiaki Nakagawa) - ஹீரோ ஹோண்டா: 13.44
10. சஜ்ஜன் ஜிண்டால் - JSW ஸ்டீல்: 13.24

Mukesh Ambani's take-home ten times that of brother Anil

இடிந்து விழுந்த மேம்பாலம்

Posted: 02 Sep 2007 11:03 PM CDT



பாகிஸ்தானின் கராச்சி புறநகரில் சனிக்கிழமை இடிந்து விழுந்த மேம்பாலம். இதில் பத்து பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கு முன்புதான் இப் பாலத்தை அதிபர் முஷாரப் திறந்து வைத்தார்.


தினமணி

Daily Times - Leading News Resource of Pakistan - The authorities just can't be trusted any more: Karachi residents
Ten dead in Karachi bridge collapse, inquiry ordered- Hindustan Times

இடைத்தேர்தலில் பி.சி.கந்தூரி வெற்றி: உத்தரகண்டில் பா.ஜ.க.வுக்கு 'மெஜாரிட்டி'

Posted: 02 Sep 2007 10:40 PM CDT

உத்தரகண்ட் மாநிலம் துமாகோட் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அந்த மாநில முதல்வர் பி.சி.கந்தூரி வெற்றி பெற்றார். இவரது வெற்றியையடுத்து ஆளும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை (70-க்கு 36) கிடைத்துள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்கள் உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 32 இடங்கள் கிடைத்தன. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேரின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி.சி.கந்தூரி, உத்தரகண்ட் மாநில முதல்வராக தேர்வானார். இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

துமாகோட் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் பிரமுகர் ரவாத் பதவி மற்றும் கட்சியில் இருந்து விலகி கந்தூரி போட்டியிட வாய்ப்பளித்தார். இதற்கு கைங்கர்யமாக தான், எம்.பி. பதவி விலகிய தொகுதியில் ரவாத்தை நிறுத்த முடிவு செய்தார் கந்தூரி.

தினமணி

Zee News - Khanduri wins Dhumakot by-poll, BJP secures majority
IndianExpress.com :: Khanduri silences critics with big win in Dhumakot