Wednesday, March 28, 2007

சற்றுமுன் 03/28/2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை

Posted: 28 Mar 2007 04:31 PM CDT

வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.

முழு ஸ்கோர்கார்ட்

சற்றுமுன்: 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி கிடைக்கிறது!

Posted: 28 Mar 2007 03:56 PM CDT

thatstamil தரும் செய்தி.

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

தென்னிந்திய திரையலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய முதலீட்டில், மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள படம் சிவாஜி. ஏவி.எம். நிறுவன வரலாற்றில் இப்படி ஒரு பரபரப்பான படம் தயாரிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய மெகா பட்ஜெட் படம் சிவாஜி. இப்படிப்பட்ட படம் இப்போது வெறும் 50 ரூபாய்க்கு தெருவில் வைத்து விற்கப்படுகிறது. சென்னையின் புறநகரான நங்கநல்லூரில், ஒரு டிவிடி கடைக்கு எதேச்சையாக போக நேர்ந்தது. அந்தக் கடைக்காரர் ஒரு டிவிடியைக் காட்டினார். என்ன படம், என்ன விவரம் என்று எதுவும் அந்த டிவிடியில் இல்லை. ஆனால் கடைக்காரர், நமது காதை அருகில் இழுத்து கிசுகிசுத்தார். சிவாஜி பட டிவிடி சார் இது. படத்தின் 40 நிமிடக் காட்சிகள் இதில் உள்ளது. 50 ரூபாய்தான், வேணுமா என்று அவர் கூறக் கூற நமக்கு தலை சுற்றிப் போனது. நிஜமாவா என்று நாம் ஆச்சரியம் காட்டியபோது, மெய்யாலும்தான் சார், குவாலிட்டியைப் பற்றிக் கவலைப்படாதீங்க, டிஜிட்டல் பிரிண்ட் இது. படு சூப்பராக இருக்கும், தியேட்டரில் பார்ப்பது போலவே எஃபக்டிவாக இருக்கும் என்று உத்தரவாதமும் கொடுத்தார்.

ஷாக்கிலிருந்து மீளாத நிலையில், நாம் உடனே படத்தின் பி.ஆர்.ஓ. பெரு துளசிபழனிவேலைப் போனில் பிடித்து விசாரித்தோம். மேட்டர் தெரியுமா என்று அவரிடம் கேட்டபோது, அப்படியா சார், எனக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுங்க சார் என்றார் படு கூலாக!. தொடர்ந்து அவரே, தினசரி சிவாஜி குறித்து ஒரு செய்தி வருகிறது. ஒவ்வொரு செய்திக்கும், வதந்திக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்களுடைய வேலைதான் கெட்டுப் போகும். ஏவி.எம். சரவணன் சார் சொல்வதுதான் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல். இதற்கு அவரே பதில் சொல்லட்டும் என்றார்.

முதலில் பட ஸ்டில்கள் லீக் ஆனது, பின்னர் படமே லீக் ஆனதாக செய்தி வந்தது. சமீபத்தில் 3 பாடல்களை இணையதளத்தில் உலவ விட்டனர். இப்போது 40 நிமிட படக் காட்சிகளை வெளியில் விட்டுள்ளனர். அடப் பாவிகளா..

சற்றுமுன்: நந்திகிராம் திட்டத்தைக் கைவிட்டார் புத்ததேவ்

Posted: 28 Mar 2007 02:30 PM CDT

கடந்த மார்ச் 14-ம் தேதியன்று நடந்த கலவரத்தின் எதிரொலியாக நந்திகிராமத்தில் ரசாயன உற்பத்தி மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டார் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அத்துடன், வன்முறைச் சம்பவத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.




"Yahoo-Tamil"

ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் கண்டனம்

Posted: 28 Mar 2007 02:01 PM CDT

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து "ராமர் பாலத்தை காப்போம்' என்ற இயக்கத்தை ராமநவமி தினத்தன்று தொடங்கியுள்ளன. சுனாமிக்கு பிறகு ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டாவது சுற்றுக்கு ஆய்வுக்கு மத்திய அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென்று இந்த இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: ஏப்ரல் 2ம்தேதி சிவாஜி ஆடியோ வெளியீடு

Posted: 28 Mar 2007 02:29 PM CDT

சிவாஜி படத்தின் ஆடியோ கேசட் மற்றும் சிடி ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்படுகிறது.
"ஏப்ரல் 4ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, 2ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேசட் ரூ. 45க்கும், சிடி ரூ.100 க்கும் கிடைக்கும். ஆரம்ப கால சலுகையாக ரசிகர்களுக்கு சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரஜினியின் 3டி ஸ்டிக்கர் இலவசமாக வழங்கப்படும் என ஏ.வி.எம்., நிறுவனம் தெரிவித்துள்ளது.


Courtesy: தினமலர்

சற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன்

Posted: 28 Mar 2007 01:52 PM CDT

பா.ஜனதா மாநிலத் தலை வர் இல.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவாரூரில் ஆழித் தேர் பாரம்பரிய முறைப்படி நாளை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் கூட கோரிக்கைகளை புறக்கனித்து ஆலய மற்றும் அரசு நிர்வாகம் தன்னிச்சையாக வேறு தேதியில் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாளைய தினம் பரிச்சார்த்தமாக மாதிரி தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக் கையில் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட் டுள்ளார்.

திருவாரூரையே சேர்ந்த கருணாநிதி இதில் தலையிட்டு அடுத்த ஆண்டு மரபுப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் தர வேண்டுகிறேன். குறைந்த பட் சம் அமைச்சர் மூலமாவது, அதிகாரிகள் மூலமாவது இந்த உத்திரவாதத்தை அரசு தரவேண்டும். இல்லையேல் நாளை திட்டமிட்டபடி தேரோட்ட போராட்டம் நடை பெறும்.


மாலை மலர்

சற்றுமுன்: ஈரோடு மாவட்டத்தில் நாளை பந்த்

Posted: 28 Mar 2007 01:22 PM CDT

ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு 160 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பில் பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி., தண்ணீரையும், அமராவதி ஆற்றிலிருந்து 3 டி.எம்.சி. தண்ணீரையும் கேரளாவுக்கு வழங்க கோரி உத்தரவிட்டுள் ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஈரோடு மாவட்டத்தில் விவசாயமும், விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்க ளின் வாழ்வும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நடுவர் மன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் 29ம் தேதி ரோடு மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந் தது. இதை ஏற்று அனைத்து சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆதரவளித்துள்ளதால் பொதுவேலை நிறுத் தம் முழுமையாக வெற்றியடையும் என இச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

- மாலை முரசு

சற்றுமுன்: சிறுவாணி அணை நீர்மட்டம்் குறைந்துவருகிறது

Posted: 28 Mar 2007 01:29 PM CDT




கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவெனக் குறைந்துவருகிறது. 70 நாட்கள் தேவையைச் சமாளிக்க இந்த நீர் போதுமானது.

- மாலை முரசு

சற்றுமுன்: தசாவதாரம் எனது கற்பனையில் உருவானது - நடிகர் கமலஹாசன்

Posted: 28 Mar 2007 01:35 PM CDT

நடிகர் கமல்ஹாசன் நடித் து வரும் தசாவதாரம் படத்தின் கதை என்னுடையது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாம்பர த்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், தசாவதாரம் படத்தை திரையிட தடை விதித்தது. மேலும் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் கமல்ஹாசன், படத்தின் இயக்குனரும், ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பியது.

இதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சார்பில் வக்கீல் சஞ்ய்ராமசாமி, ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

நான் புதிய கதையை உருவாக்கி, தசாவதாரம் படத்தில் நடித்து வருகிறேன். இதை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தை இயக்குகிறார். மனுதாரரை நான் பார்த்தது இல்லை. 10 வேடங்களில் நடித்த பல ஆங்கில படங்கள், தமிழ் படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த நிலையில் 10 வேடங்கள் உள்ள கதையை நான்தான் உருவாக்கினேன் என்று மனுதாரர் கூறுவது தவறானது. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு உள்ளது. எனது கற்பனையில் உருவானது தான் தசாவதாரம் கதை. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் நடந்து வருகிறது.

எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திய மனுதாரர் மீது உரிய நேரத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்வேன். போலீசில் என் மீது மனுதாரர் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து என்னிடம் போலீசார் விளக்கம் கேட்டனர். நான் உண்மையான பதில் கூறியுள்ளேன். இதை போலீசாரும் ஏற்றுக்கொண்டனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பதில் மனுவில் கூறியுள்ளார்.

- மாலை முரசு

சற்றுமுன்: தொழில்நுட்பத்தில் அமெரிக்கா பின்தங்கியது

Posted: 28 Mar 2007 01:21 PM CDT

உலக பொருளாதாரக் குழுமத்தின் (World Economic Forum. ) ஆய்வுப்படி அமெரிக்கா தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலிடத்திலிருந்து ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


டென்மார்க் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 40வது இடத்திலிருந்து 44வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சைனா 50லிருந்து 59க்கு தள்ளப்பட்டுள்ளது.

NETWORKED READINESS INDEX RANKINGS 2006 (2005)
1: Denmark (3)
2: Sweden (8)
3: Singapore (2)
4: Finland (5)
5: Switzerland (9)
6: Netherlands (12)
7: US (1)
8: Iceland (4)
9: UK (10)
10: Norway (13)
Source: WEF


US 'no longer technology king'

India was four positions down on last year to 44th, suffering from weak infrastructure and a very low level of individual usage of personal computers and the internet.
China was knocked to 59th place, nine positions down, with information technology uptake in Chinese firms lagging.

WEFன் மற்றுமொரு சர்வே

Nordics show way in sex equality

சற்றுமுன்: டீசல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ் நோயாளி சாவு

Posted: 28 Mar 2007 11:46 AM CDT

டீசல் தீர்ந்துபோனதால் நடுவழியில் நின்றது ஆம்புலன்ஸ். அதில் நெஞ்சுவலியுடன் துடித்துக் கொண்டிருந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). மெக்கானிக். இவருக்கு நேற்று திடீரென வயிற்றுவலியும், நெஞ்சுவலியும் ஏற்பட்டது. உடனடியாக அவரை உறவினர்கள் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமானதால் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்சில் கோவிந்தராஜை அவரது உறவினர்கள் தஞ்சாவூருக்கு கொண்டு சென்றனர். அவர்களுடன் ஒரு நர்சும் சென்றார். நள்ளிரவு 1 மணிக்கு கந்தர்வக்கோட்டை அடுத்த காடவராயன்பட்டி என்ற இடத்தில் சென்றபோது டீசல் தீர்ந்துவிட்டதால் ஆம்புலன்ஸ் நடுவழியில் நின்றுவிட்டது.

ஆம்புலன்சில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோவிந்தராஜ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் டிரைவரை திட்டித் தீர்த்தனர். உறவினர்களின் கதறலை கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். நிலைமை மோசமானதை உணர்ந்த நர்ஸ், ஆம்புலன்சில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். கோவிந்தராஜ் இறந்த தகவலை தெரிந்து கொண்ட டிரைவர் ராஜேந்திரனும் திரும்பி வரவே இல்லை.

இதுபற்றி கோவிந்தராஜின் உறவினர் ஒருவர் கூறுகையில், புதுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் புறப்படும்போதே டீசல் போட டிரைவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் பணத்தை வாங்கிக் கொண்டு டீசல் போடவில்லை. அவரது அலட்சியத்தால் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என்றார்.

- மாலைச் சுடர்

சற்றுமுன்:உலகின் உயர்ந்த மனிதர் மணம்புரிந்தார்

Posted: 28 Mar 2007 10:17 AM CDT

உலகத்திலேயே அதிக உயரமானவரான சீனாவைச் சேர்ந்த பவொ ஜிஷன் மணம் முடித்துள்ளார். இவரது உயரம் 7அடி 9 அங்குலமாகும் இவரது மனைவியின் உயரம் 5 அடி 6 அங்குலம்.


படம்: CNN.com
செய்தி:CNN.com

சற்றுமுன்:வீட்டில் 80 ஆடுகளை வளர்த்தவர் கைது

Posted: 28 Mar 2007 10:13 AM CDT

அமெரிக்காவில், நார்த் காரொலினா மாநிலத்தில் வீட்டுக்குள் 80 ஆடுகளை வளர்த்தவர் விலங்குகளை கொடுமைப் படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மேல் மாடியில் இவர் தங்கிவிட்டு கீழே ஆடுகளள வளர்த்துவந்தார்.

இதில் 30 ஆடுகள் தீவிரமாய் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவற்றை கருணைக் கொலை செய்துள்ளார்கள்.

Man keeps 80 sheep in his house, authorities say

சற்றுமுன்:குறைவாகப் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு

Posted: 28 Mar 2007 09:53 AM CDT

1999-2000 முதல் 2004ஆம் ஆண்டில் வந்த புதிய 70மில்லியன் வேலைவாய்ப்புகளில் 42% நடுநிலைப் பள்ளிக்கும் குறைவாகப் படித்தவர்களுக்கே வந்துள்ளது என ஒரு ஆய்வு கூறுகிறது.
அடுத்ததாக ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் 18மில்லியன் வேலைகளைப் பெற்றுள்ளார்கள்.

Less educated corner new jobs Times of India

சற்றுமுன்:இராம நவமி கொண்டாடிய இஸ்லாமியர்கள்

Posted: 28 Mar 2007 09:48 AM CDT

ஒரிசாவில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் இராம நவமியை கொண்டாடினர். இராமரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இராம நவமி விழழ அமைந்துள்ளது. இதில் இஸ்லாமியர் பலர் இந்துக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

Muslims celebrate Ram Navami in Orrisa

சற்றுமுன்: ஆபாச தகவல் பரிமாற்றங்களுக்கு எதிராய் சட்ட திருத்தம்

Posted: 28 Mar 2007 09:43 AM CDT

சமீப காலமாக ஆபாச தகவல் பரிமாற்றங்கள் செல்போன்கள் மூலம் நடைபெறுகின்றன. இதை தடுக்கவும், இதைச் செய்பவர்களை தண்டிக்கவும் இந்தியன் பீனல் கோடில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஆபாச தகவல்களை அனுப்புபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். கூடுதலாக ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

Govt set to crackdown on obscenity

சற்றுமுன்: ஒருநாள் போட்டிகளில் இருந்து கும்ளே ஓய்வு

Posted: 28 Mar 2007 09:20 AM CDT

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து இந்திய அணி வெளியேறியவுடன் போர்ட் ஆப் ஸ்பெயினில் இந்திய அணி வீரர்களிடம் கும்ளே இதனை தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் கும்ளே உலகக்கோப்பைக்கு முன்பே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார். 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ளே 337 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: MSN Tamil

அண்ணாமலை பல்கலை. பி.இ. மாணவி தற்கொலை: மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Posted: 28 Mar 2007 09:07 AM CDT

சிதம்பரம், மார்ச் 28: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. விடுதியில் தங்கி பயின்ற பி.இ. மாணவி சாட்னா (20) திங்கள்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து செவ்வாய்க்கிழமை பொறியியல் புலத்துக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்துத் துறை மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலை வளாகத்தில் பூமாகோயில் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனுவில் தற்கொலைக்கு காரணமாக இருந்த விரிவுரையாளர் மணிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செனட் மற்றும் சிண்டிகேட் மன்றத்தில் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும், ஆசிரியர்கள் - மாணவர்கள் பாலியல் நல்லுறவுக் குழு அமைக்க வேண்டும், மாணவி சாட்னா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்ததன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சற்றுமுன்: புலிகள் விமானப்படை - இந்தியா ரேடார்களை அமைத்தது

Posted: 28 Mar 2007 08:55 AM CDT

விடுதலைப்புலிகள் இலங்கையில் விமானம் கொண்டு தாக்கியதை அடுத்து இந்திய விமானப் படை(IAF) 8 ரேடார்களை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைத்துள்ளது.

IAF sets up radars after LTTE air strikeZee News
A team of 50 air force personnel, under a commander, would be posted there to monitor the skies, he said. There was also a plan to set up a permanent air-base near Seeniappa Dargah, the official, who wished not to be named, said. The decision to set up radar facility comes two days after LTTE made an aerial attack at a military airbase in Colombo, killing three persons and injuring 16.

India concerned over escalation of violence in Lanka Hindu

Links for 2007-03-27 [del.icio.us]

Posted: 28 Mar 2007 12:00 AM CDT

சற்றுமுன்: விவசாயிகளை மகிழ்விப்போம் - கருணாநிதி உறுதி

Posted: 27 Mar 2007 10:05 PM CDT

இலவச நிலங்கள் வழங்கி ஏழைகளை முடிந்தவரையில் மகிழ்விப்போம் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக நிதி நிலை அறிக்கையிலே, 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி: ஏழை விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தெரிவித்தோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான், 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்படை செய்யக் கூடிய அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலம் 67 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலம் 7 லட்சம் ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பிலே உள்ள நிலத்தின் மதிப்பு, மொத்தமுள்ள நிலத்தின் பரப்பளவு ஆகியவற்றை கணக்கிட்டு, அதிகம் பேர் பயன்பெறும் வகையில் ஒரு ஏக்கர் என்றும், அரை ஏக்கர் என்றும், சில இடங்களில் 2 ஏக்கர் என்றும் தற்போது இலவசமாக நிலங்களை வழங்கி வருகிறோம்.

இந்த மூன்று கட்டங்களிலும் இதுவரை 77,118 ஏக்கர் நிலம், 71,755 குடும்பங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

- தினகரன்

சற்றுமுன்னின் தினசரி செய்தி தொகுப்பு

சற்றுமுன் தினசரி செய்தி தொகுப்பு.