Sunday, May 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நன்மங்கலத்தில் 1,000 மரங்களை வெட்ட அரசு அதிரடி முடிவு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

Posted: 20 May 2007 02:08 PM CDT

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை நன்மங்கலம் வனப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் உள்ள 1,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தை அடுத்த நன்மங்கலத்தில் சுமார் 900 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது. இது வனத்துறையால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை, மலையை சார்ந்த வனப்பகுதியான இங்கு இந்திய கொம்பு ஆந்தை, கானான் கோழி, நாமக்கோழி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும், 100-க்கும் அதிகமான அரியவகை மூலிகைத் தாவரங்களும், மரங்களும் உள்ளன.

இப் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டன. இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் குவாரிகள் தொடர்ந்து செயல்பட வனத்துறை தடை விதித்தது. இதன் பின்னர் இப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.

மரங்களை வெட்டுவது ஏன்? நன்மங்கலம் வனப்பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையத்துக்காக இங்கு ஏற்கெனவே 9 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இந் நிலையில் இங்கு மேலும் 250 ஏக்கர் நிலத்தில் இந்த நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் சரக வனத்துறையிடம் இருந்து இந்த நிலம் வனத்துறை ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டிவிட்டு அந்த நிலத்தில் சோதனை அடிப்படையில் புதிய வகை மரக்கன்றுகளை பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த மரங்கள் அனைத்தையும் வனத்துறையினரே வெட்ட முடியாது என்பதால் வெட்டும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ச: ரகசிய திட்டம்

Posted: 20 May 2007 09:46 AM CDT

சென்னை, மே 20:

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், விமானநிலையத்தையொட்டியுள்ள பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை அகற்ற முற்பட்டால், விமான போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட, விமான நிலைய ஊழியர்கள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்களின் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால் அந்த 2 விமான நிலையங்களுக்கு முன்னதாகவே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணி மட்டும் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.


மேலும் அதிக விபரங்களுக்கு "மாலைச் சுடர்"

இசைக் கலைஞர் எல்.வைத்தியநாதன் மறைவு

Posted: 20 May 2007 04:22 AM CDT

சென்னை: பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான எல்.வைத்தியநாதன் மரணமடைந்தார். 65 வயதாகும் வைத்தியநாதனுக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

மேலதிக தகவல்கள் இங்கே

சற்றுமுன்: கோவை சந்திப்பு படங்கள்

Posted: 20 May 2007 12:39 AM CDT


மாண்டலின் ஆறுமுகம் அய்யாவை நேர்காணல் செய்யும் பதிவர்பாமரன்.


பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.




பட்டறையில் கலந்து கொண்டவர்களில் இன்னொரு பகுதி.

ச: தில்லி - உபி பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

Posted: 19 May 2007 09:56 PM CDT

சென்ற நவம்பரில் உபி போக்குவரத்துக் கழகம் தானாகவே தில்லி நகர வழித்தடங்களில் பஸ்கள் விட்டதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கும் இடையே தடைபட்டிருந்த பேருந்து போக்குவரத்து உபியில் புதிய அரசு அமைந்ததும் மீண்டும் துவங்கப் பட்டுள்ளது. இருமாநில போக்குவரத்து அமைச்சர்களும் கொடியசைத்து சனியன்று பேருந்து இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.


முழு விவரமறிய...Bus service resumes between Delhi-UP- Hindustan Times

ச:நைஜீரியாவில் மூன்று இந்தியர்கள் பிணை

Posted: 19 May 2007 09:43 PM CDT

சனிக்கிழமையன்று நைஜீரியாவின் எண்ணெய் நகரான போர்ட் ஹார்கோர்ட்டிலிருந்து மூன்று இந்திய எண்ணெய்வள ஊழியர்களை அவர்களது இல்லங்களிலிருந்து தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். முன்னதாக அவர்கள் இந்தோனெஷிய இந்தோராமா நிறுவனத்தில் பணிபுரியும் பத்து பேரை பிடித்துக் கொண்டனர். இராணுவத்தினரின் துப்பாக்கிச் சண்டையின் பிறகு அவர்களில் ஏழு பேரை காப்பாற்ற முடிந்தது. இந்திய அரசு நைஜீரியாவில் உள்ள தூதரகம் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டு அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யும் என அறிவித்துள்ளது.

Nigeria militants abduct 3 Indians-India-The Times of India

Saturday, May 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஹைதராபாத் மசூதியில் குண்டுவெடிப்பை கண்டித்து TNTJ தமிழகம்முழுவதும் கண்டன ஆற்பாட்டம்.

Posted: 19 May 2007 07:37 AM CDT

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 18 .05 2007 அன்று 400 ஆண்டு கால புகழ் பெற்ற மெக்கா மசூதியில் பயங்கர வெடி குண்டுகள் வெடித்துள்ளன அன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டிருந்த முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதலில் பத்துக்கும் மேற்ப்பட்டோர் பலியானதுடன் போலிசார் துப்பாக்கி சூட்டிலும் பலர் பலியாகி உள்ளனர். இதற்க்கு முன்பு கூட டெல்லி ஜும்மா மசூதியில் இதுபோன்ற பயங்கர தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றது இப்படி தொடர்ச்சியாக இறை இல்லங்களில் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்குற்றவாளிகளை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,இனி வரும் காலங்களில் இதுப்போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் தடுக்கும் வகையிலும் உறக்கதில் இருக்கும் உளவுத்துறையை விழிப்படைய செய்யும் வகையிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை சார்பில் இன்றுமாலை 4 மணியளவில் பார்க் டவுன் மெமொரியல் ஹால் அருகில் மாபெரும் கண்டன ஆற்பாட்டம் நடைப்பெற்றது ஆற்பாட்டத்திற்க்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமைதாங்கினார் மாநிலதலைவர் பீ ஜைனுலாபிதீன் கண்டன உரைநிகழ்த்தினார்.இந்த ஆற்பாட்டதிற்க்கு ஏராளமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

ச: உலகவங்கி தலைவர் பதவிவிலகல்

Posted: 19 May 2007 05:58 AM CDT

உலகவங்கியின் தலைவர் பால் வொல்ஃபோவிட்ஸ் இன்று தமது பதவியிலிருந்து விலகினார். முன்னதாக தமது பெண்நண்பருக்கு நல்ல வேலைக்கு மாற்றியதும் அவரது சம்பளத்தை உயர்த்தியதும் பல 'கிசுகிசுக்களை' ஏற்படுத்தியிருந்தன. மற்றுமொரு அமெரிக்க வெளியுறவு அதிகாரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். காண்டெலிசா ரைஸ்சிற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும், அவர்மட்டும் வெளியுறவு மந்திரி (அமெரிக்காவில் செக்ரட்டரி) ஆக இல்லாமல் இருந்திருந்தால். தன் பதவிவிலகலை அறிவித்திருக்கும் பிரித்தானியப் பிரதமர் பெயர் கூட அடிபடுகிறது.

Bits of News - Paul Wolfowitz's Resignation

ச:தவறுள்ள அகராதியை விற்பனையிலிருந்து விலக்கியது ஆக்ஸ்போர்ட் யூனி.பிரஸ்

Posted: 19 May 2007 05:41 AM CDT

ஆக்ஸ்போர்ட் யுனிவரசிடி பிரஸ் வெளியிட்ட அருஞ்சொற் பொருளாகராதியில் பெங்களூரு பற்றி தவறான தகவல்கள் தந்திருப்பதாக எழுந்த எதிர்ப்புகளிடையே அந்நிறுவனம்் மன்னிப்பு கேட்டுக் கொண்டு குறிப்ப்பிட்ட அகராதி தொகுதியை விற்பனையிலிருந்து விலக்கி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது..

இதுபற்றி மேலுமறிய..Zee News - Oxford University Press suspends sale of its dictionary

ச: கிரிக்கெட்: மழையினால் இரண்டாம்நாள் ஆட்டம் தாமதம்்

Posted: 19 May 2007 05:28 AM CDT

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே நடந்து வரும் கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தொடரின் முதல் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் அதிகாலையிலிருந்தே பெய்துவரும் மழையினால் ஆடுகளம் ஈரமானநிலையில் தேநீர் இடைவேளை வரையில் ஆரம்பிக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆடுவது சாத்தியமா என நடுவர்கள் பரிசோதனையின் பின்னர் முடிவு செய்யப் படும். ஆட்டவீரர்கள் ஓட்டல் அறையை விட்டு வெளிவரவேயில்லை.


IOL: Rain delays India vs Bangladesh

ஹைதராபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு : பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Posted: 19 May 2007 12:14 AM CDT

ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்நதுள்ளது. இதில், போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆனது. சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாயினர். சிறுவர்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, மக்கள் அலறியடித்து வெளியேறினர்.இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் கலவரம் ஏற்பட்டபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில், நேற்று மாலை 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், இந்த எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்தது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தேறிய அடுத்த சில நிமிடங்களில், போலீசாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்குத் தலா ரூ.20 ஆயிரமும் வழங்கவதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.குண்டுவெடிப்புக்குக் காரணம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஹார்கட்-உல்-ஜிஹாதல் இஸ்லாமி என்ற அமைப்பே காரணம் என போலீசார் சந்தேகித்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Links for 2007-05-18 [del.icio.us]

Posted: 19 May 2007 12:00 AM CDT

Friday, May 18, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஃப்ளிக்கர்.காம் பின்னூட்டங்களை யாஹு தணிக்கை செய்தது

Posted: 18 May 2007 05:26 PM CDT

புகைப்படங்களுக்கான ஃப்ளிக்கர்.காம் வலையகத்தில் யாஹூ தணிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தன்னுடைய அனுமதியில்லாமல், இணைய கண்காட்சியொன்றில் ஏழு நிழற்படங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை ரெபெக்கா (Rebekka Gudleifsdóttir) கடந்த மாதம் கவனித்தார். இதைப் பிறரின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஃப்ளிக்கரில் பதிவிட்டார். புகைப்படமும் அதன் தொடர்பான எதிர்வினைகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

புகைப்பட விற்பனையில் சம்பந்தப்படாத யாஹு, இதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.

'பிறரை புண்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதால்' 450 சொச்ச பின்னூட்டங்களையும் ஃப்ளிக்கர் கழற்றி விட்டதோடு நில்லாமல், ரெபக்காவின் பதிவை முடக்குவோம் என்று மிரட்டவும் செய்ததாக பாதிக்கப்பட்டவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BBC NEWS | Technology | Yahoo 'censored' Flickr comments: "Yahoo has been accused of censorship on its popular photo website Flickr, in a row that has highlighted the issue of copyright in the online age."

பிகார்: ரயில்வே அதிகாரியால் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி

Posted: 18 May 2007 05:03 PM CDT

பாட்னா, மே 19: பிகார் மாநிலம் சோனேபூரில் ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரியால் ஓடும் ரயிலிலிருந்து தலித் பயணி ஒருவர் வியாழக்கிழமை தூக்கி வீசப்பட்டார்.

அமர்பலி எக்ஸ்பிரஸில் டிக்கட் பரிசோதனையின்போது ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரிக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினை நடந்துள்ளது. இதில் ராகேஷ் குமார் பாஸ்வான் என்ற தலித் பயணியை ஓடும் ரயிலிலிருந்து சோனேபூர் ரயில்வே பாலம் அருகே பாதுகாப்புப் படை அதிகாரி தூக்கி வீசியதாக மத்திய கிழக்கு ரயில்வே துணை பொது மேலாளர் கே. சந்திரா தெரிவித்தார்.

பாஸ்வான் சாபூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சோனேபூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார் பாஸ்வான்.

Dinamani

ராகிங் தேவையா- சர்வே முடிவுகள்

Posted: 18 May 2007 03:45 PM CDT

'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

Posted: 18 May 2007 02:37 PM CDT

'சிவாஜி' படம் உலகம் முழுவதும் ஏப்.14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 'சிவாஜி' படம் ஜூன் 15-ம் தேதிதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'சிவாஜி' படத்தை புதன்கிழமை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தனர். அப்படத்துக்கு அனைத்து வயதினரும் காணத்தக்க வகையிலான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

'சிவாஜி'யில் ஆட்சேபகரமான காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் என படத்தைப் பார்த்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.


சிவாஜி'க்கு புதிய சிக்கல்: 'சிவாஜி' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் படத்தின் வசூலில் 40 சதவீதத்தைத் தரவேண்டும் என புதிய படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.

சாய்மீரா, ரிலையன்ஸ் ஆட்லேப், சன்நெட்வொர்க் போன்ற பெரிய நிறுவனங்கள் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இப்படத்தை ஏவி.எம். நிறுவனமே அனைத்து ஏரியாக்களிலும் நேரடியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

தமிழ்த் திரைப்படத் துறையில் தற்போதுள்ள எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) மற்றும் எஃப்.எச் (ஃபிக்சட் ஹயர் எனப்படும் நிரந்தர வாடகை) முறைகளால் திரையரங்குகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் சதவீத அடிப்படையில் வசூலில் பங்கு வேண்டும் என ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசாணை 1240-ன்படி திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் அந்த அரசாணை நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாணையில் அறிவித்துள்ளபடி அதிகபட்ச கட்டணம் ரூ.50, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என விண்ணப்பம் செய்யும் திரையரங்குகளுக்கு மாவட்ட ஆணையர்களே அனுமதி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'சிவாஜி' படத்தைக் குறி வைத்துதான் இந்த திடீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சங்கத்தின் தலைவர் மு.அண்ணாமலை கூறியதாவது:

எம்.ஜி., எஃப்.எச் முறையில் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். சதவீத அடிப்படையில் என்றால் பெரிய படங்களைப் பொருத்தவரை, முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதமும், திரையரங்குகளுக்கு 40 சதவீதமும் பங்கிடப்படும். அடுத்த வாரத்திலிருந்து இரு தரப்பும் தலா 50 சதவீதம் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்தபோது ஜீ.வி., ரஜினிகாந்த், மணிரத்னம் போன்ற சிலர் மட்டுமே பணத்தைத் திருப்பித் தந்தனர். இதை எல்லாரிடமும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.

(தினமணி)

'குரு', 'வெயில்' உள்பட கேன்ஸ் திரைப்பட விழாவில் 7 இந்திய திரைப்படங்கள்

Posted: 18 May 2007 02:24 PM CDT

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் உலக திரைப்பட விழாவில் திரையிட மணிரத்னம் இயக்கிய 'குரு', வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' உள்பட 7 இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மலையாள படமான 'சைரா' மே 19-ம் தேதி திரையிடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவராக இருந்து பின் திரையுலகுக்கு வந்த பிஜு குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். முன்னதாக பாவனா தல்வாரின் 'தரம்' படமும், மிரிதுல் துளசிதாஸ் மற்றும் வினய் சுப்பிரமணியன் இணைந்து இயக்கிய 'மிஸ்டு கால்' திரைப்படமும் திரையிடப்படுகிறது.

ஹிந்தியில் ராஜ் குமார் ஹிரானியின் 'லகே ரகோ முன்னாபாய்' மற்றும் மணி ரத்னம் இயக்கிய 'குரு' திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கோல்கத்தா இயக்குநர் ரிதுபர்னா கோஸின் 'தோஸார்' படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழில் வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி: சற்றுமுன்...: வெய்யில்: கேரளாவில் விருது, கான் திரைப்படவிழாவிற்கு தேர்வு

Dinamani

NDTV: 'Director Wong Kar-wai's My Blueberry Nights starring Norah Jones and Jude Law, was the first screening in an 11-day fete of cinema, parties and deal making. Movies on Cannes' lineup range from Ocean's Thirteen to Michael Moore's Sicko, to films from Russia to Mexico to South Korea.

For a feature-length homage to the movies, it commissioned 35 shorts from directors including Wong, Roman Polanski (The Pianist), Alejandro Gonzalez Inarritu (Babel), the Coens (Fargo) and Wim Wenders (Wings of Desire.)

Oscar-winning director Martin Scorsese has been enlisted to give a master class on moviemaking.

DiCaprio brings his environmental documentary The 11th Hour.'

உள்நாட்டு விமானங்களில் மது பரிமாற அனுமதி?

Posted: 18 May 2007 02:20 PM CDT

உள்நாட்டு விமானங்களில் மது அருந்துவதும் மதுவகைகள் பரிமாறப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு விமானங்களிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியாவின் சர்வதேச விமானங்களிலும் மட்டும்தான் மதுவகைகள் பரிமாறப்பட்டு வந்தன.

தனியார் விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டபோது, அப்போதிருந்த மோடி லுஃப்த் விமான நிறுவனம், தனது உள்நாட்டு விமானங்களில் மதுவகைகளை இலவசமாக வழங்க முற்பட்டது. நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கிளம்பிய எதிர்ப்புகள், அரசைத் தலையிட வைத்து, விமானங்களில் 'பார்' நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கடந்த பத்து ஆண்டுகளாக ஓரங்கட்டப்பட்டு வைத்திருந்த விஷயத்துக்கு இப்போது புத்துயிர் அளித்திருக்கிறார் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல். சமீபத்தில் பிரிட்டனின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான ஒயிட் அண்ட் மேக்கே மதுபான ஆலையை, ரூ. 4,819 கோடிக்கு வாங்கியிருக்கும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, இந்த விதி சில நிறுவனங்களின் சேவைக்கு தளர்த்தப்படலாம் என்றார்.

- தினமணி

1. Booze on your DEL-MUM flight?
2. Kingfisher Airlines: Soaring ambition

சிதம்பரம் நடராஜர்ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடச் சென்ற சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட 79 பேர் கைது

Posted: 18 May 2007 12:30 PM CDT

சிதம்பரம், மே 18: சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரத் திருமுறைப்பாடல்களை பாட ஊர்வலமாகச் சென்ற சிவனடியார் உ.ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பெண்கள் உள்ளிட்ட 79 பேரை நகரப் போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் நடராஜர்ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவனடியார் ஆறுமுகசாமி தமிழில் தேவாரத்திருமுறைப் பாடல்களை பாட தடை விதித்து மயிலாடுதுறை இணைஆணையர் 12-12-04-ல் உத்தரவு பிறப்பித்தார்.

இந் நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சிவனடியார் ஆறுமுகசாமி மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் தடையை மீறி பாடச்சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் ஆலய பொது தீட்சிதர்கள் சிற்றம்பலமேடையில் பாடக்கூடாது என சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் நிரந்தரத்தடை பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக - சற்றுமுன்...: நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

இதனையடுத்து சிவனடியார் ஆறுமுகசாமி வியாழக்கிழமை காலை சிற்றம்பலமேடையில் பாட, மேலவீதி பெரியார்சிலை அருகேயிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார்.

Dinamani.com

ச:டிக்சனரியில் தவறு - கர்நாடகா எதிர்ப்பு

Posted: 18 May 2007 09:12 AM CDT

ஆக்ஸ்ஃபோர்ட் அருஞ்சொற்பொருள் அகராதியில் பெங்களூரின் வரலாற்றை குறிப்பிடுகையில் அது அதிகமாக பெங்காலி மொழி பேசும் மக்களைக்கொண்டது எனத் தவறாகக் கூறிப்பிடப்பட்டதால் கர்நாடக அரசு ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தவறை திருத்த கடிதம் எழுதியுள்ளது.

இந்த அகராதி கர்நாடகா பற்றி மேலும் சில தவறான செய்திகளைக் கொண்டுள்ளது எனத் தெரிகிறது.

Karnataka irked over dictionary containing 'misleading' details The Hindu

Update
Oxford University Press suspends sale of its dictionary Zee News

ஹைதராபாத் குண்டுவெடிப்பு : சோனியா இரங்கல்.

Posted: 18 May 2007 09:28 AM CDT

ஹைதராபாத் மசூதி குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான குடும்பங்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா இரங்கல் தெரிவித்துள்ளார்.ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த குண்டு வெடித்து இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியானர்கள். இந்த சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களுக்கு இரங்கலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்தார். இதற்கிடையே பலியான ஒவ்வொருக்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், என மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.ஹைதராபாத் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு.

Posted: 18 May 2007 05:15 AM CDT

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. இருபத்திஐந்தாயிரம் அபராதமும் விதித்து மும்பை சிறப்பு தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 93 ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 23 பேரை தவிர, குற்றவாளிகள் 100 பேருக்குமான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என மும்பை தடா நீதிமன்ற சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே ஏற்கெனவே தனது தெரிவித்திருந்தார். அதன்படி, குற்றவாளிகள் 100 பேரில் 5 பேருக்கான தண்டனையை இன்று சிறப்பு நீதிபதி பிரமோத் கோடே அறிவித்தார். யாஷ்வாந்த்ராவ் போயின்கர், அப்பாஸ் தாவுத் ஷைகேந்தர், ஷாஜாகான் ஷைகேந்தர், ரஷித் உமர் ஆல்வரே மற்றும் ஷெரிப் கான் ஆதிகாரி ஆகிய ஐந்து மீனவர்களே இந்தத் தண்டனையை பெறுபவர்கள் ஆவர். இவ்வழக்கில் குற்றாவாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், முதலில் 5 பேருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும், பின்னர் 8 முதல் 10 நாட்களுக்குள் தண்டனை அறிவிப்புகள் நிறைவடையும் என்றும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகிம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த வழக்கிலிருந்து நன்னடத்தைக் காரணமாக தங்களை விடுவிக்குமாறு சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களான யூசுப் நுல்லாவா, ருசி முல்லா மற்றும் கேர்ஸி அடேஜினியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன் மனு ஒன்றை அளித்திருந்தனர். அந்த மனுவை பரிசீலிக்கும் மும்பை தடா நீதிமன்றம், சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர்களுக்கு சிறைத் தண்டனை வழங்குமா அல்லது அவர்களை நன்னடத்தை காரணமாக விடுவிக்குமா என்பதும் விரைவில் தெரியவரும்

ஹைதராபாத் மசூதியில் குண்டு வெடிப்பு .

Posted: 18 May 2007 04:46 AM CDT

ஆந்திரத் தலைநகர் ஹைத்ராபாத்தில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.பழைய ஹைத்ராபாத்தில் நெரிசல் மிகுந்த சார்மினார் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.சார்மினாரில் இருந்து பத்து மீட்டர் தொலைவில் உள்ள மெக்கா மசூதி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எனினும், குண்டு வெடித்த இடம் பற்றிய உறுதியாகத் தெரியவில்லை.விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் நகரில் உள்ள ஒஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புது டெல்லியில் உள்ள முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து உடனடியாகக் கேட்டறிந்தார்.மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நிலைமையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.விபத்து பற்றிய முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மத்திய அமைச்சராக பதவியேற்றார் ராதிகா செல்வி!

Posted: 18 May 2007 02:18 AM CDT

திமுக மக்களவை உறுப்பினரும், திருச்செந்தூர் தொகுதியில் இருந்து முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவருமான வி. ராதிகா செல்வி இன்று மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.குடியரசுத் தலைவர் மாளிகையின் அசோகா மண்டபத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் ராதிகா செல்விக்கு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவரது இலாகா விவரம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அவர் உள்துறை இணையமைச்சராகக் கூடும் என்று தெரிகிறது.பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராதிகா செல்வியின் உறவினர்கள் பலர் பங்கேற்றனர்.மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதி மாறன் பதவி விலகியதைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் அடிப்படையில் ராதிகா செல்வி மத்திய அமைச்சராகியுள்ளார்.

Links for 2007-05-17 [del.icio.us]

Posted: 18 May 2007 12:00 AM CDT

பிலிப்பைன்ஸ் தேர்தலில் 121 பேர் பலி

Posted: 17 May 2007 09:08 PM CDT

பிலிப்பைன்ஸில் திங்களன்று நடந்து முடிந்த தேர்தலில் 75 சதவிகித வாக்கு பதிவாகியது. கடந்த முறை நிகழ்ந்த வன்முறை போலவே இந்த தடவையும் குண்டுவெடிப்பு போன்றவற்றில் 121 பேர் இறந்தார்கள். ஆங்காங்கே முறைகேடு நடந்ததற்கான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

1. Elections in South-East Asia | Voting for more of the same | Economist.com
2. Deaths and Fraud Reports Mar Philippine Vote - New York Times

தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே ரயில்

Posted: 17 May 2007 08:56 PM CDT

கொரியா மீண்டும் இணையலாம் என்னும் எண்ணத்தை விதைக்குமாறு, வட கொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு இரயில் விடப்பட்டுள்ளது. எண்பது மில்லியன் டாலர் செலவில் 56 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக உறவிற்கு பாலம் வகுக்கும் வகையில் டிரெயின், எல்லைகளைக் கடந்தது.

BBC NEWS | Asia-Pacific | South Korea's reconciliation gamble

ச:சக மாணவியை அச்சுறுத்திய பெண்ணிற்கு அவள் தாயே தண்டனை!

Posted: 17 May 2007 08:32 PM CDT

மியாஷா வில்லியம்ஸ் என்கிற பனிரெண்டு வயது சிறுமி தன்னுடன் படிக்கும் சக மாணவியை அச்சுறுத்தியதால் அவளுடையெ தாயே தண்டித்தாள்.எப்படி?

ஒரு வாரத்திற்கு மியாஷாவின் கழுத்தில், ' நான் என்னுடன் படிக்கும் பெண்ணை துன்புறுத்தினேன் இதனால் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டேன். நீங்கள் யாரும் என்னை போல் இருக்காதீர்கள்" என்கிற அவளால் கைபட எழுதிய ஒரு அட்டையை மாட்டி பள்ளிக்கு செல்ல வைத்தாள்!

மேலும் படிக்க

http://www.latimes.com/news/local/la-me-bully18may18,1,1010624.story?track=rss

ச: உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு- பிரதமர் மன்மோகம்சிங் ஆதரவு

Posted: 17 May 2007 07:47 PM CDT

ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு' தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு, டில்லியில் நேற்று துவங்கியது.

பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜாதி வித்தியாசமின்றி ஏழை குழந்தைகளின் பிரச்னைகள் தீர்வுக்கு யோசனைகள், திட்டங்கள் இருந்தால், அதை நிறைவேற்றுவதில் எந்த தயக்கமும் இல்லை. இந்த கருத்தரங்கின் மூலம், எல்லா பிரிவினரும் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான, சிறப்பான ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் , சிறுபான்மையினர், பெண்களின் மேம்பாட்டில் எங்கள் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பின்தங்கியுள்ள பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அத்வானி பேசியதாவது: உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும், பிற்பட்ட நிலையில் உள்ள முஸ்லிம்களையும் சமுதாயத்தில் மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் அவசியம். வரலாற்றுப் பின்னணியின் காரணமாக இந்திய சமுதாயத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இன்று உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்கள் படும் ஏழ்மையையும் சேர்ந்து ஆராயாவிட்டால், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது என்பது முழுமை பெறாது.

- தினமலர்



இது சம்பந்தமாக "தி இந்து நாளிதழில் வந்த செய்தி "

Thursday, May 17, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மாயாவதி காலில் விழாத பிராமண அமைச்சர்கள்

Posted: 17 May 2007 05:03 PM CDT

கான்பூர், மே 17-
உ.பி. அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பிராமண வகுப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் முதல்வர் மாயாவதி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குவதை தவிர்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

உ.பி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பகுஜன் சமாஜ் கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை பொறுப்பை ஏற்றுக்கொண்டது. முதல்வராக அக்கட்சியின் தலைவி மாயாவதி பதவியேற்றார். அதன்பின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதில் பலர் முதல்வர் மாயாவதியின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். ஆனால் தாகூர் ஜைவீர் சிங், ரங்கநாத் மிஸ்ரா, ஆனந்த் மிஸ்ரா, நகுல் துபே, தாடன் மிஸ்ரா உட்பட சிலர் மட்டும் காலில் விழாமல் லேசாக தலைவணங்கியபடி மாயாவதியிடம் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர். இவர்கள் எல்லாம் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் தலித் முதல்வர் மாயாவதியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கவில்லை என சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களின் காலைத் தொட்டு இளையவர்கள் ஆசீர்வாதம் வாங்குவது என்பது இந்திய பாரம்பரிய பழக்கம். பிராமண அமைச்சர்கள் எல்லாருமே முதல்வர் மாயாவதியை விட வயது குறைந்தவர்களாக இருந்தும் அவர்கள் காலில் விழாமல் சென்றுள்ளனர். ஈகோ பிரச்னையைவிட ஜாதி உணர்வு இவர்களுக்கு இன்னும் அதிகம் இருப்பதால் தலித் முதல்வரின் காலில் விழ மறுத்துள்ளனர் என பனராஸ் இந்து பல்கலைக்கழக சமூகவியல் வல்லுனர் பான்டே தெரிவித்துள்ளார்.

- மாலை முரசு

எஸ்டோனிய நாட்டு கணனிகள் மீது இணையத்தளம் மூலம் தாக்குதல்

Posted: 17 May 2007 12:44 PM CDT

எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது.

இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்ய அரசாங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக எஸ்டோனியா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளது.

எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலிழந்து போயின.

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய- ரஷ்ய மாநாட்டில் இந்த விவகாரம் முதன்மை விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டோனியா விரும்புகிறது.
- (BBC Tamil)

Russia accused of unleashing cyberwar to disable Estonia | Russia | Guardian Unlimited

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

Posted: 17 May 2007 12:42 PM CDT

பாலத்தீனத்தின் காசா நகர ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியதில், குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு நடைபெற்ற ஒரு தாக்குதலில், ஹமாஸின் பாதுகாப்பு தலைமையகம் அழிக்கப்பட்டது, மற்றொன்று ஹமாஸ் உறுப்பினர்கள் பயணம் செய்த காரின் மீது மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஹமாஸின் இராணுவப் பிரிவு எச்சரித்துள்ளது.

பாலத்தீனக் குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தாவினரிடையே தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெறும் மோதல்களில் காசாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த மோதல்கள் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

BBC NEWS | Middle East | Israel launches Gaza air strikes (BBC Tamil)

ச: பிரதமர் அசாமிலிருந்து நாடாளுமன்ற மேலவைக்கு தேர்வு

Posted: 17 May 2007 09:08 AM CDT

அசாமிலிருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் அசாம் கணபரிஷத்தின் தீபக் தாசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். முன்னதாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சராயிருந்து வெளியேற்றப் பட்ட மட்டங் சிங் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாலும் மற்றொரு வேட்பாளர் மேட்டுரை சேர்ந்த பத்மராஜன் தேர்தல்மனு நிராகரிக்கப் பட்டதாலும் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர்.


PM elected to RS uncontested after high drama- Hindustan Times

சக எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிய அதிமுக எம்.பி. நாராயணன்

Posted: 17 May 2007 08:45 AM CDT

தமிழக அரசைக் கலைக்கக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கடந்த வாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உணர்ச்சி வேகத்தில் அதிமுக உறுப்பினர் ஒருவர், அவை அதிகாரிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து தூக்கியெறிந்தார். நல்லவேளையாக யார் மீதும் படாமல் அது கீழே விழுந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு இன்னொரு உறுப்பினர் ரஹ்மான்கான் இருக்கைக்கு அருகே சென்று இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அவையை ஒத்திவைக்குமாறு அழுத்தமாக வலியுறுத்தினார்.

அவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி பிரச்சினை எழுப்பப்பட்டது. மாநிலங்களவைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் மிகக்கோபமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரஹ்மான்கானும் அதிமுக உறுப்பினர்கள் நடந்துகொண்டதைப் போல அவையில் இதுவரை யாரும் நடந்ததில்லை என்று கூறினார்.

அவர்களின் செயல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடந்த நேரத்தில், பி.ஜி.நாராயணன் குறுக்கிட்டு, "இனிமேல் தனது கட்சி உறுப்பினர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். இது மாநிலத்தில் மிக முக்கியப் பிரச்சினை என்பதால் சற்று உணர்வுப்பூர்வமாக நடந்துகொண்டார்கள். மற்றபடி அவையையோ, தலைவர் மற்றும் துணைத் தலைவரையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை. இப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்ட நிலையில், புதன்கிழமை தங்கள் பிரச்சினையை வலியுறுத்தி அவையிலிருந்து அடையாள வெளிநடப்புச் செய்ததுடன் அதிமுகவினர் அமைதியடைந்தனர்.

Dinamani

ச: இரயில் பெட்டிகளில் இருமொழித்திட்டம் அமல் ?

Posted: 17 May 2007 08:42 AM CDT

அண்மையில் இரயில்வே அமைச்சகம் விடுத்த ஒரு சுற்றறிக்கையின்படி இரயில் பெட்டிகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்படவேண்டுமென்றும் தமிழ்நாட்டில் செல்கின்ற இரயில்களில் மட்டும் தமிழிலும் எழுதப் படும் என்ற செய்தியைக் கொண்டு ஒரிசா மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தினர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிச் சலுகை, எங்கள் ஊரிலும் ஒரியாவில் எழுதப் பட வேண்டுமெனக் கோரினர். பிற மாநில உறுப்பினர்களும் அவைநாயகரும் கூட புழக்கத்தில் இருக்கும் மூன்றுமொழி பெயர்ப்பலகைகளை கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உடனேயே அந்தச் சுற்றறிக்கையை வாபஸ் வாங்குவதாக அவைக்கு உறுதி கூறினார். ஆனால் சற்று நேரத்தில் திரும்பிவந்து அந்த சுற்றறிக்கை நாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டத்தின் படியும் ஆட்சிமொழி சட்டத்தின்படியும் இயற்றப் பட்டிருப்பதால் மீட்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும் உறுப்பினர்களின் உணர்வை மதித்து அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி சட்டதிருத்தம் முன்வைப்பதாக கூறினார்.


மேலும்..Flip-flop over 3rd language for train names

டேரா பாபாவைக் கைது செய்ய கோரிக்கை:மாநிலங்களவையில் கடும் கண்டனம்

Posted: 17 May 2007 08:24 AM CDT

புது தில்லி, மே 17: சீக்கியர்களின் மனம் புண்படும் வகையில் நடந்துகொண்ட "டேரா சச்சா சௌதா" அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் சிங் ராம் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

சீக்கியர்களால் மிகவும் மதிக்கப்படும் 5 பெரிய குருமார்களில் (பஞ்ச பியாரா) ஒருவரான குரு கோவிந்த சிங்கைப் போல உடையணிந்து, ஒப்பனை செய்துகொண்டு தெருவில் ஊர்வலம் சென்றார் பாபா குர்மீத்சிங் ராம். பாபா குர்மீத்சிங் ராம், ஹரியாணா மாநிலத்தில் வசிக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து மாநிலங்களவையில் புதன்கிழமை பாரதீய ஜனதா, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சி உறுப்பினர்கள் கவலையும் கண்டனமும் தெரிவித்தனர். "இது மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பஞ்சாபில் இருக்கும்போது மத்திய அரசால் ஏதும் செய்ய முடியாது" என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதில் அளித்தார்.

பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் அகாலிதளம்-பாஜக கூட்டணி அரசும், ஹரியாணாவில் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் அரசும் ஆட்சி செய்கின்றன.

"சீக்கியர்களை வாத்துகள் என்று நினைத்துவிடாதீர்கள், இதைப் போன்ற செயல்களால் வட இந்தியா முழுக்க கலவரம் வெடிக்கும்" என்று தர்லோசன் சிங் என்ற சுயேச்சை உறுப்பினர் எச்சரித்தார்.

"கற்பழிப்பு, கொள்ளை, பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் அந்த பாபா மீது பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று சுட்டிக்காட்டினார் எஸ்.எஸ். அலுவாலியா (பாஜக).

Dinamani

குடியரசுத் தலைவர் மனைவிக்கு கட்டுப்பாடு அதிகம்: நாராயணமூர்த்தி மனைவி பேட்டி

Posted: 17 May 2007 08:18 AM CDT

புணே, மே 17: குடியரசுத் தேர்தலில் 'இன்போசிஸ்' தலைவர் நாராயண மூர்த்தி போட்டியிடப் போவதாக நிலவி வரும் கருத்துக்கள் வெறும் வதந்திகளே என அவரது மனைவி சுதா மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.

"மக்களைச் சந்திப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவையும், புத்தகங்கள் எழுதுவதும் எனக்கு விருப்பமான செயல்கள். ஆனால், குடியரசுத் தலைவரின் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அவ்வாறு வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது கணவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறுவது வெறும் வதந்தி' என அவர் கூறினார்.

Dinamani

ச: 27%தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்

Posted: 17 May 2007 06:11 AM CDT

தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த கல்வியாண்டு இடஒதுக்கீடு இல்லை எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து இந்த தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் அர்ஜூன்சிங்தெரிவித்தார்

நன்றி:- தினமலர்

ச: கனிமொழி, அழகிரி - யாருக்கு வாய்ப்பு?

Posted: 17 May 2007 05:55 AM CDT

மாநிலங்களவைக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழி அல்லது மகன் மு.க.அழகிரிக்கு போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ஆறு இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்..............

நன்றி:- MSN தமிழ்

ச: மின் வெட்டை கண்டித்து உண்ணாவிரதம்: அதிமுக

Posted: 17 May 2007 05:52 AM CDT

முன் அறிவிப்பின்றி மின் வெட்டு அமலில் உள்ளதைக் கண்டித்து அதிமுக சார்பில் வெள்ளியன்று கரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர்.....

மேலும்..

நன்றி : MSN தமிழ்

ச:இந்திய பயிற்சியாளராக வாட்மோர் விருப்பம்

Posted: 17 May 2007 02:10 AM CDT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போதைய பங்களாதேஷ் பயிற்சியாளர் டேவ் வாட்மோர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்்டு வாரியம் அவரை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், இதுகுறித்து இந்த வார இறுதியில் வாரியத் தலைவர் சரத்பவார் அவருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும்....

நன்றி MSN தமிழ்

ச:புஷ்ஷுடன் டோனி பிளேர் சந்திப்பு

Posted: 17 May 2007 02:12 AM CDT

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து அடுத்த மாதம் விலகும் டோனி பிளேர் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்தார்.

பிரதமர் என்ற முறையில் கடைசியாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிளேருக்கு அதிபர் புஷ் விருந்து அளித்தார்.

மேலும்..........

நன்றி : MSN தமிழ்

ச: உச்சநீதிமன்றம் 27% இடஒதுக்கீடு வழக்கு: பெரிய பெஞ்ச் விசாரணைக்கு

Posted: 17 May 2007 02:27 AM CDT

அரசின் இடஒதுக்கீடு கொள்கை குறித்து பல கேள்விகளை ஆய்வுசெய்யவேண்டியிருப்பதால் உச்சநீதிமன்றம் இன்று வழக்கை அதிக நீதிபதிகள் அமரும் பெரிய நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்திய அரசியல் நிர்ணய சட்டதிருத்தம் 93இல் நுழைக்கப்பட்ட 15(5) பகுதியை சட்டப்படி செல்லுமா என அந்த பெரிய நீதிமன்ற அமர்வு ஆய்வு செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.

மேலும்...Deccan Herald - SC refers OBC quota issue to larger bench

Links for 2007-05-16 [del.icio.us]

Posted: 17 May 2007 12:00 AM CDT

ச: இணையம் பற்றித் தெரியாத நீதியரசர் !

Posted: 16 May 2007 09:49 PM CDT

புதனன்று ஆங்கில நீதிபதியொருவர் இணையதளம் (Website) என்றால் என்னவென்று தெரியாது என்று இணையம் வழி தீவிரவாதம் தூண்டியதாக ப்திவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் போது கூறினார். நீதிபதி பீட்டர் ஓப்பன்ஷாவின் புரிதலுக்காக அரசு வழக்கறிஞர் மார்க் எல்லிசன் தனது குறுக்கு விசாரணையை சற்று நிறுத்திக்கொண்டு "web site", "Forum" முதலிய சொற்களை விவரித்தார்.
தொடர்புள்ள செய்தி: "Web site" baffles Internet terrorism trial judge - Yahoo! News

இதனை யொட்டிய கணினி பொறியாளர்களின் இணையதள விவாதம்

Wednesday, May 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அர்ச்சகர் பள்ளிகள் இடைக்கால தடைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 16 May 2007 04:30 PM CDT

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்க தடை விதிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு உதவும் வகையில் அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்க செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dinamalar

ச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்

Posted: 16 May 2007 11:41 AM CDT

பாட்னாவில் திடீரெனெ நின்ற மின்சார இரயிலை ஓட்டுநரின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி தள்ளினர்.

ஓடிக்கொண்டிருந்த இரயிலில் பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததில் இரயில் மின்சாரம் பெற இயலாத 'நியூற்றல் ஜோன்'ல் (Neutral Zone) நின்றது. அரைமணி நேரம் முயற்சித்து 12 அடிகள் தள்ளியபின் பயணம் தொடர்ந்தது.


Train passengers asked to get out and push Reuters

ச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்களுக்கு சிக்கல்

Posted: 16 May 2007 11:24 AM CDT

இனிமேல் புதிய படங்களை சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி துõக்கியுள்ளது. இதனால் ரஜினியின் சிவாஜி, அஜீத்தின் கிரீடம், கமலின் தசாவதாரம் உள்ளிட்ட புதிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்

ச:விஜயகாந்த் மண்டபம் இடிக்கும் பணி ஆரம்பித்தது

Posted: 16 May 2007 11:19 AM CDT

விஜயகாந்த் மனைவி பெயரில் இருக்கும் ஆண்டாள் அழகர் திருமணமண்டபம் மற்றும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகமுமான கட்டிடம் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்படவுள்ளது. கட்டிடத்தை இடிப்பதற்கான அளவுகள் இன்று எடுத்து குறிக்கப்பட்டன.

கட்டிட இடிப்பு பணிகள் நாளை காலை 8 மணிக்கு துவங்குகின்றன. இன்று நெடுஞ்சாலைத்துறை வேலை செய்யும்போது கட்சித் தொண்டர்கள் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர் சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர் அவர்களை விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் பின்னர் கலைந்து போகச் சொன்னார்.

தினமலர்

ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்

Posted: 16 May 2007 08:26 AM CDT

மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24 ம் தேதியன்றே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் கடந்த 10 ம் தேதியன்றே தென்மேற்கு பருவ மழை மையம் கொண்டு விட்டது.அதாவது வழக்கமான தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மழை மையம் கொண்டு விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.

Posted: 16 May 2007 08:08 AM CDT

அமைப்பு ரீதியான கோளாறுதான் உத்தர பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனினும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இந்தத் தேர்தலில் மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்த போதிலும் அதனை வாக்குகளாக மாற்றும் அளவுக்கு அமைப்பு பலமாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ச: லாவோஸில் பூகம்பம்: பாங்காக், ஹனாய் கட்டிடங்கள் பாதிப்பு

Posted: 16 May 2007 08:07 AM CDT

இன்று வடக்கு லாவோசில் 6.1 ரிச்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 800 கி.மீ தொலைவிலுள்ள பாங்காக் நகரிலும் ஹனாய் நகரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன. கடைகளிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறினார்கள்; அலுவலக கட்டிடங்கள் காலி செய்யப் பட்டன. கிரீன்விச் நேரப்படி காலை 0856 ( இந்திய நேரம் 1426)க்கு லாவோசின் தலைநகர் லுஅங் ப்ரபாங்கிலிருந்து 148 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க கணிப்பு மையம் தெரிவிக்கிறது.

Laos earthquake shakes Bangkok, Hanoi buildings

ச: இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்த இந்திய குடும்பம்: US

Posted: 16 May 2007 07:40 AM CDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பணக்காரப் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியக் கணவன் - மனைவி இரண்டு இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்து துன்புறுத்தியதாக கைது செய்யப் பட்டுள்ளனர்.

மஹேந்தர் சபானி மற்றும் அவர் மனைவி வர்ஷா நறுமண வியாபாரம் செய்துவந்தனர். அவர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய இந்த அடிமைகலை வைத்திருந்ததாகவும் அவர்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் குற்றம் சாடப்பட்டுள்ளனர்.

அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டுல்ள அமெரிக்காவில் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால் 17இலிருந்து 22 வருடம் வரை தண்டனை கிடைக்கலாம்.
DNA - World - Indian couple arrested for keeping 2 Indonesians as slaves - Daily News & Analysis

ச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை

Posted: 16 May 2007 07:25 AM CDT

இன்று உச்சநீதிமன்றம் கல்லூரிகளில் புது மாணவர்களை கலாய்க்கும் ராகிங் முறையை கட்டுப்படுத்தும் விதமாக கல்விநிலையங்கள் விதிமுறைகளை மீறுபவர்களை காவல்நிலையங்களில் குற்றம் பதிவு செய்கின்ற அளவிற்கு கண்டிப்புக் காட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

மேலும்...SC approves stringent anti-ragging measures- Hindustan Times

ச: நிக்கோலஸ் சார்கோசி பிரஞ்ச் அதிபராக பதவியேற்றார்

Posted: 16 May 2007 07:12 AM CDT


இன்று நடந்த ஒரு எளிய விழாவில் நிக்கோலஸ் சார்கோசி ஷாக் சிராக்கை அடுத்து பிரஞ்ச் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். சென்ற மாதத்தில் நடந்த தேர்தலில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றியை ஒட்டி எல்சி அரண்மனையில் அடுத்த ஐந்து வருடங்களை கழிக்க விருக்கும் சார்கோசி தனது ஏற்புரையில் பிரான்ஸின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றும் நாட்டின் பெருமையை மீட்பேன் என்றும் கூறினார்.

Nicolas Sarkozy takes over as France's president | U.S. | Reuters

ச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன்னுரிமை: இராஜா

Posted: 16 May 2007 03:33 AM CDT

தனது புதிய துறையின் பொறுப்பை இன்று புதனன்று எடுத்துக் கொண்ட இராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கிராமப்புற வளர்ச்சியே தனது தனிக்கவனத்தைப் பெறும் என்றார். தனக்கு முந்தைய அமைச்சர்கள் காலத்தில் தொலைதொடர்பு பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை என்று கூறினார். அந்நிய முதலீடு பெருக்குவதும் தன் முன்னுரிமைகளில் ஒன்று என கூறினார்.

Raja to focus rural telephony, foreign investment - India

ச: காயத்திற்கு பின் மீண்டும் சானியா: மொரொக்கோவில் வெற்றியுடன் துவக்கம்

Posted: 16 May 2007 02:59 AM CDT


கடந்த பிப்ரவரியில் காயமடைந்ததால் கத்தார் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய சானியா மிர்சா உடல்நிலை தேறி மீண்டும் ஆடத் துவங்கியுள்ளார். நேற்று மொரொக்கோவில் நடந்த பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தன்னுடைய துணைவி அமெரிக்க வானியா கிங்குடன் சேர்ந்து ஆடி 6-3,5-7,10-8 என்ற கணக்கில் உருசிய,உக்ரைன் வீராங்கனைகளை வென்று நல்லதுவக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத் தொடரில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் வரிசையெண் பெற்றுள்ளார்.

ania makes winning return in Morocco : Tennis, Morocco Open, Sania Mirza, win, doubles, first round : IBNLive.com : CNN-IBN

ச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்

Posted: 16 May 2007 12:50 AM CDT

தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் 7 பேர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். இதில் தயாநிதிமாறனின் ராஜி னாமாவை தொடர்ந்து மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மத்திய மந்திரிகள் ராசா, ரகுபதி ஆகி யோரின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிபாரிசை ஏற்று திருச் செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.பி. ராதிகா செல்வி புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட இருக் கிறார். வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகையில் மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்க இருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பதவி கிடைத் தது பற்றி ராதிகாசெல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைத்தது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

மத்திய மந்திரி பதவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க் கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன். தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

=மாலைமலர்

விமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம்.

Posted: 16 May 2007 12:49 AM CDT

இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம் அமைக்கத் தேவையான நிலத்தை தரும்படி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற் பகுதியில் வான் வழி கண்காணிப்பு எளிதாகும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் வைஸ்.அட்மிரல் ஆர்.பி. சுதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்து வருவதால் இந்தியக் கடல்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரத்தில் விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் தேவைப்படுகிறது. இங்கு விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம், வான் வழியாக எளிதில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளலாம். இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகின்றன.இலங்கையில் நீடித்து வரும் சண்டையால் கடல் பகுதியில் ஆயுதம் போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர்க்க, இந்தியக்கடல் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், அந்நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை கடற்படையுடன், தகவல் பரிமாற்றம் மட்டும் செய்து கொள்கிறோம். அவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் புலிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக பாக்.ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்து கடற்படை படகுகள், இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு கப்பல்கள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு கப்பல் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர்.சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிப்பட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இந்திய கடற் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமான தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி,எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகங்களில் கடற்படைக்கு தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் சுதன் கூறினார்.

நன்றி : வீரகேசரி

Links for 2007-05-15 [del.icio.us]

Posted: 16 May 2007 12:00 AM CDT