Wednesday, May 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அர்ச்சகர் பள்ளிகள் இடைக்கால தடைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 16 May 2007 04:30 PM CDT

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்க தடை விதிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு உதவும் வகையில் அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்க செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dinamalar

ச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்

Posted: 16 May 2007 11:41 AM CDT

பாட்னாவில் திடீரெனெ நின்ற மின்சார இரயிலை ஓட்டுநரின் வேண்டுகோளுக்கிணங்க நூற்றுக்கணக்கான பயணிகள் இறங்கி தள்ளினர்.

ஓடிக்கொண்டிருந்த இரயிலில் பயணி ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்திழுத்ததில் இரயில் மின்சாரம் பெற இயலாத 'நியூற்றல் ஜோன்'ல் (Neutral Zone) நின்றது. அரைமணி நேரம் முயற்சித்து 12 அடிகள் தள்ளியபின் பயணம் தொடர்ந்தது.


Train passengers asked to get out and push Reuters

ச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்களுக்கு சிக்கல்

Posted: 16 May 2007 11:24 AM CDT

இனிமேல் புதிய படங்களை சதவீத அடிப்படையில் தான் திரையிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி துõக்கியுள்ளது. இதனால் ரஜினியின் சிவாஜி, அஜீத்தின் கிரீடம், கமலின் தசாவதாரம் உள்ளிட்ட புதிய படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர்

ச:விஜயகாந்த் மண்டபம் இடிக்கும் பணி ஆரம்பித்தது

Posted: 16 May 2007 11:19 AM CDT

விஜயகாந்த் மனைவி பெயரில் இருக்கும் ஆண்டாள் அழகர் திருமணமண்டபம் மற்றும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகமுமான கட்டிடம் மேம்பாலப் பணிகளுக்காக இடிக்கப்படவுள்ளது. கட்டிடத்தை இடிப்பதற்கான அளவுகள் இன்று எடுத்து குறிக்கப்பட்டன.

கட்டிட இடிப்பு பணிகள் நாளை காலை 8 மணிக்கு துவங்குகின்றன. இன்று நெடுஞ்சாலைத்துறை வேலை செய்யும்போது கட்சித் தொண்டர்கள் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர் சிலர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர் அவர்களை விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் பின்னர் கலைந்து போகச் சொன்னார்.

தினமலர்

ச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்

Posted: 16 May 2007 08:26 AM CDT

மும்பையில் ஜூன் 8 அன்று வரவேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கமான தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்கு முன்னதாக, அதாவது இம்மாதம் 24 ம் தேதியன்றே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடலில் கடந்த 10 ம் தேதியன்றே தென்மேற்கு பருவ மழை மையம் கொண்டு விட்டது.அதாவது வழக்கமான தேதியிலிருந்து 8 நாட்களுக்கு முன்னதாகவே இந்த மழை மையம் கொண்டு விட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

உபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.

Posted: 16 May 2007 08:08 AM CDT

அமைப்பு ரீதியான கோளாறுதான் உத்தர பிரதேச மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
எனினும் குஜராத் மற்றும் கோவா மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல்முறையாக அதுகுறித்து கருத்து தெரிவித்த சோனியா காந்தி, இந்தத் தேர்தலில் மதவாத சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், காங்கிரஸ் கட்சியின் நிலை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்றார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாகவும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்த போதிலும் அதனை வாக்குகளாக மாற்றும் அளவுக்கு அமைப்பு பலமாக இருக்கவில்லை என்றும் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

ச: லாவோஸில் பூகம்பம்: பாங்காக், ஹனாய் கட்டிடங்கள் பாதிப்பு

Posted: 16 May 2007 08:07 AM CDT

இன்று வடக்கு லாவோசில் 6.1 ரிச்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 800 கி.மீ தொலைவிலுள்ள பாங்காக் நகரிலும் ஹனாய் நகரிலும் கட்டிடங்கள் அதிர்ந்தன. கடைகளிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறினார்கள்; அலுவலக கட்டிடங்கள் காலி செய்யப் பட்டன. கிரீன்விச் நேரப்படி காலை 0856 ( இந்திய நேரம் 1426)க்கு லாவோசின் தலைநகர் லுஅங் ப்ரபாங்கிலிருந்து 148 கி.மீ தூரத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க கணிப்பு மையம் தெரிவிக்கிறது.

Laos earthquake shakes Bangkok, Hanoi buildings

ச: இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்த இந்திய குடும்பம்: US

Posted: 16 May 2007 07:40 AM CDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் பணக்காரப் பகுதியில் வசிக்கும் கோடீஸ்வர இந்தியக் கணவன் - மனைவி இரண்டு இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்து துன்புறுத்தியதாக கைது செய்யப் பட்டுள்ளனர்.

மஹேந்தர் சபானி மற்றும் அவர் மனைவி வர்ஷா நறுமண வியாபாரம் செய்துவந்தனர். அவர்களின் பல்வேறு பணிகளைச் செய்ய இந்த அடிமைகலை வைத்திருந்ததாகவும் அவர்களை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கியதாகவும் குற்றம் சாடப்பட்டுள்ளனர்.

அடிமை வியாபாரம் தடைசெய்யப்பட்டுல்ள அமெரிக்காவில் அவர்களுக்கு குற்றம் நிரூபிக்கப் பட்டால் 17இலிருந்து 22 வருடம் வரை தண்டனை கிடைக்கலாம்.
DNA - World - Indian couple arrested for keeping 2 Indonesians as slaves - Daily News & Analysis

ச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை

Posted: 16 May 2007 07:25 AM CDT

இன்று உச்சநீதிமன்றம் கல்லூரிகளில் புது மாணவர்களை கலாய்க்கும் ராகிங் முறையை கட்டுப்படுத்தும் விதமாக கல்விநிலையங்கள் விதிமுறைகளை மீறுபவர்களை காவல்நிலையங்களில் குற்றம் பதிவு செய்கின்ற அளவிற்கு கண்டிப்புக் காட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

மேலும்...SC approves stringent anti-ragging measures- Hindustan Times

ச: நிக்கோலஸ் சார்கோசி பிரஞ்ச் அதிபராக பதவியேற்றார்

Posted: 16 May 2007 07:12 AM CDT


இன்று நடந்த ஒரு எளிய விழாவில் நிக்கோலஸ் சார்கோசி ஷாக் சிராக்கை அடுத்து பிரஞ்ச் நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். சென்ற மாதத்தில் நடந்த தேர்தலில் தனக்குக் கிடைத்த மகத்தான வெற்றியை ஒட்டி எல்சி அரண்மனையில் அடுத்த ஐந்து வருடங்களை கழிக்க விருக்கும் சார்கோசி தனது ஏற்புரையில் பிரான்ஸின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றும் நாட்டின் பெருமையை மீட்பேன் என்றும் கூறினார்.

Nicolas Sarkozy takes over as France's president | U.S. | Reuters

ச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன்னுரிமை: இராஜா

Posted: 16 May 2007 03:33 AM CDT

தனது புதிய துறையின் பொறுப்பை இன்று புதனன்று எடுத்துக் கொண்ட இராஜா பத்திரிகையாளர்களிடம் பேசும் போது கிராமப்புற வளர்ச்சியே தனது தனிக்கவனத்தைப் பெறும் என்றார். தனக்கு முந்தைய அமைச்சர்கள் காலத்தில் தொலைதொடர்பு பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை என்று கூறினார். அந்நிய முதலீடு பெருக்குவதும் தன் முன்னுரிமைகளில் ஒன்று என கூறினார்.

Raja to focus rural telephony, foreign investment - India

ச: காயத்திற்கு பின் மீண்டும் சானியா: மொரொக்கோவில் வெற்றியுடன் துவக்கம்

Posted: 16 May 2007 02:59 AM CDT


கடந்த பிப்ரவரியில் காயமடைந்ததால் கத்தார் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய சானியா மிர்சா உடல்நிலை தேறி மீண்டும் ஆடத் துவங்கியுள்ளார். நேற்று மொரொக்கோவில் நடந்த பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் தன்னுடைய துணைவி அமெரிக்க வானியா கிங்குடன் சேர்ந்து ஆடி 6-3,5-7,10-8 என்ற கணக்கில் உருசிய,உக்ரைன் வீராங்கனைகளை வென்று நல்லதுவக்கத்தைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத் தொடரில் ஒற்றையர் ஆட்டத்தில் அவர் முதல் வரிசையெண் பெற்றுள்ளார்.

ania makes winning return in Morocco : Tennis, Morocco Open, Sania Mirza, win, doubles, first round : IBNLive.com : CNN-IBN

ச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்

Posted: 16 May 2007 12:50 AM CDT

தமிழ்நாட்டில் தி.மு.க. சார்பில் 7 பேர் மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வந்தனர். இதில் தயாநிதிமாறனின் ராஜி னாமாவை தொடர்ந்து மத்திய மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மத்திய மந்திரிகள் ராசா, ரகுபதி ஆகி யோரின் இலாகாக்களும் மாற்றப்பட்டது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிபாரிசை ஏற்று திருச் செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.பி. ராதிகா செல்வி புதிய மத்திய மந்திரியாக நியமிக்கப்பட இருக் கிறார். வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு அவர் ஜனாதிபதி மாளிகையில் மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்க இருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பதவி கிடைத் தது பற்றி ராதிகாசெல்வியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கு மந்திரி பதவி கிடைத்தது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று கனவிலும் நான் நினைத்து பார்த்ததில்லை.

மத்திய மந்திரி பதவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கலைஞருக்கு பெருமை சேர்க் கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன். தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

=மாலைமலர்

விமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம்.

Posted: 16 May 2007 12:49 AM CDT

இராமநாதபுரத்தில் விமான ஓடுதளம் அமைக்கத் தேவையான நிலத்தை தரும்படி தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கடற் பகுதியில் வான் வழி கண்காணிப்பு எளிதாகும் என்று இந்தியக் கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டர் வைஸ்.அட்மிரல் ஆர்.பி. சுதன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இது பற்றி சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் அவர் கூறியதாவது:இலங்கையில் அந்நாட்டு இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடந்து வருவதால் இந்தியக் கடல்பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி இராமநாதபுரத்தில் விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த நிலம் தேவைப்படுகிறது. இங்கு விமான ஓடுதளம் அமைப்பதன் மூலம், வான் வழியாக எளிதில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளலாம். இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகின்றன.இலங்கையில் நீடித்து வரும் சண்டையால் கடல் பகுதியில் ஆயுதம் போதைப் பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதைத் தவிர்க்க, இந்தியக்கடல் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள், அந்நாட்டு ராணுவம், விமானப்படை, கடற்படைக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகளால் தமிழகத்துக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இலங்கை கடற்படையுடன், தகவல் பரிமாற்றம் மட்டும் செய்து கொள்கிறோம். அவர்களும் நல்ல ஒத்துழைப்பு தருகின்றனர். இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் புலிகளை எளிதில் அடையாளம் காண்பதற்காக அங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையுடன் கூட்டு ரோந்து இல்லை. விடுதலைப் புலிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக பாக்.ஜலசந்தி பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். இந்தியா முழுக்க கடல் பாதுகாப்புக்காக 50 ரோந்து கடற்படை படகுகள், இதில் தமிழக கடல் பகுதிக்கு ஏழு கப்பல்கள் உள்ளன. இவற்றில் நான்கு படகுகள் பாக் ஜலசந்தி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முன் இரண்டு கப்பல் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தன. மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மீன்கள் அதிகமாக கிடைப்பதால் தமிழக மீனவர்கள் அங்கு செல்கின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர். அப்படி செல்பவர்களை தான் இலங்கை இராணுவத்தினர் சுடுகின்றனர்.சமீபத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிப்பட்டுள்ள மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. இந்திய கடற் படைக்கு இராமநாதபுரத்தில் பெரிய விமான தளம் அமைக்க தமிழக அரசிடம் இடம் கேட்டுள்ளோம். அதுபோல தூத்துக்குடி,எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகங்களில் கடற்படைக்கு தேவையான இடவசதி செய்து தர மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு பிரேம் சுதன் கூறினார்.

நன்றி : வீரகேசரி

Links for 2007-05-15 [del.icio.us]

Posted: 16 May 2007 12:00 AM CDT

Tuesday, May 15, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடலாம்: அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு

Posted: 15 May 2007 05:59 PM CDT

சிதம்பரம், மே 16: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

தமிழில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுத்து மயிலாடுதுறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவனடியார் உ.ஆறுமுகசாமி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு மேல்முறையீடு செய்தார்.

விசாரணை முடிந்து ஆணையர் த.பிச்சாண்டி அளித்த தீர்ப்பு விவரம்: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அனைவரும் நின்று வழிபடும் இடத்திலிருந்து தமிழில் இறைவனை போற்றிப் பாடுவதை தடுப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகும். கடந்த 15 ஆண்டுகளாக ஆறுமுகசாமி தெய்வத்தமிழ் பதிகங்களை பாட அனுமதி மறுப்பது அவர் பிறந்த சாதியின் காரணமாக ஒதுக்கப்படும் செயலாகும்.

பழக்க வழக்கங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது.

Dinamani

"சுற்றுச்சூழல்-நகரம்" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் தேர்வானாலும் நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை

Posted: 15 May 2007 05:21 PM CDT

மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:

  1. கோட்டயம் (கேரளம்),

  2. புரி (ஒரிசா),

  3. திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),

  4. உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),

  5. பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்

  6. தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.



என்றாலும், தஞ்சாவூருக்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தை சேர்ந்த ராஜா நேற்று வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

domain-B : Indian business : economy : Zero funds for Thanjavur under Eco-City project | தினமணி

S. No

Town

Amount released in Lakh of Rupees

1

Kottayam

40.84

2

Puri

55.53

3

Tirupati

49.34

4

Ujjain

67.41

5

Vrindavan

43

6

Thanjavur

Nil

ஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை

Posted: 15 May 2007 05:06 PM CDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசாக ரூ.2 கோடி வழங்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இவ்வழக்குக்காக சென்னையில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார் செங்கோட்டையன். விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சி சுந்தரம் ஒத்தி வைத்தார்.

1992-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து பிறந்தநாள் பரிசாக காசோலை மூலம் ரூ. 2 கோடி பணம் அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.

இது பற்றி வருமானவரித்துறையின் புகாரின்பேரில் சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். ஜெயலலிதாவுக்குப் பணம் அனுப்ப ஏற்பாடு செய்ததாக செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Dinamani

மாநிலங்களவை: தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு ஜூன் 15-ல் தேர்தல்

Posted: 15 May 2007 04:23 PM CDT

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • அதிமுகவைச் சேர்ந்த ஆர். காமராஜ்,
  • எஸ். கோகுல இந்திரா,
  • எஸ்.எஸ். சந்திரன்,
  • பி.ஜி. நாராயணன்,
  • திமுகவைச் சேர்ந்த கே.பி.கே. குமரன்,
  • காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.எஸ். ஞானதேசிகன்

ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில்,

  • அதிமுகவுக்கு இரண்டு உறுப்பினர்கள்,
  • காங்கிரசுக்கு ஒரு உறுப்பினர்,
  • திமுகவுக்கு மூன்று உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூன் 5 கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 8.

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பதவிகளுக்கு வேட்பாளர்கள் யார்?: தமிழக கட்சிகளில் பரபரப்பு

மாநிலங்களவையில் மொத்தம் 229 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளனர்.

கட்சிகளின் பலம்:
தற்போது பேரவையில் உள்ள 234 உறுப்பினர்களில் கட்சி வாரியாக பலம்:
  • தி.மு.க. - 95;
  • அ.தி.மு.க. - 61;
  • காங்கிரஸ் - 34;
  • பா.ம.க. - 18;
  • மார்க்சிஸ்ட் - 9;
  • இந்திய கம்யூனிஸ்ட் - 6;
  • ம.தி.மு.க. - 6;
  • விடுதலைச் சிறுத்தைகள் - 2;
  • தே.மு.தி.க. -1;
  • சுயேச்சை 1;
  • நியமன உறுப்பினர் 1;
  • பேரவைத் தலைவர் -1.


(மதுரை மேற்குத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் காலமானதால், அத்தொகுதி காலியாக உள்ளது.)

காங்கிரஸில் கிடைக்கக் கூடிய ஓர் இடத்தில் அக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட
  • பி.எஸ். ஞானதேசிகனே நிறுத்தப்படலாம்.
  • அல்லது ஜி.கே. மூப்பனாரின் சகோதரர் ஜி.ஆர். மூப்பனார்,
  • முன்னாள் மத்திய அமைச்சர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,
  • ஜெயந்தி நடராஜன்,
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
  • மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே, அவருக்கோ,
  • தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லிக்கோ
கூட இந்த இடத்தை காங்கிரஸ் மேலிடம் அளிக்கலாம்.

தி.மு.க.வைப் பொருத்தவரை, தனக்குக் கிடைக்கும் 3 இடங்களில் ஒன்றை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அல்லது அக்கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுத் தர எண்ணி உள்ளது.

எஞ்சிய 2 இடங்களில்
  • அழகிரி அல்லது அவர் சுட்டிக் காட்டும் நபர்,
  • கனிமொழி,
  • டி.கே.எஸ். இளங்கோவன்,
  • திருச்சி சிவா,
  • டாக்டர் கே.பி. ராமலிங்கம்,
  • தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,
  • முன்னாள் அமைச்சர்கள் அ. ரகுமான்கான்,
  • எஸ்.பி. சற்குணபாண்டியன்,
  • இந்திரகுமாரி,
  • கோவை மு. ராமநாதன்,
  • சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சரவணன்,
  • புகழேந்தி,
  • ஜெ. அன்பழகன்,
  • தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிபவர்களில் ஒருவரான கே.பி.கே. குமரன்

போன்றவர்களில் யாராவது இருவருக்கு வாய்ப்புத் தரப்படலாம்.

அ.தி.மு.க.வைப் பொருத்தவரை
  • சசிகலா அல்லது அவர் சுட்டிக் காட்டும் ஒருவர்,
  • கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன்,
  • முன்னாள் அமைச்சர்கள் டி.எம். செல்வகணபதி,
  • எஸ். முத்துசாமி,
  • நயினார் நாகேந்திரன்,
  • தளவாய் சுந்தரம்,
  • கட்சி நிர்வாகி ஆதிராஜாராம்

உள்ளிட்டோரில் யாராவது இருவர் நிறுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை

Posted: 15 May 2007 04:04 PM CDT

புதுதில்லி, மே 16: தா. கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க. அழகிரி மீது மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் அசோக் பான் மற்றும் வி.எஸ். சிர்புர்கர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மதுரையில் முக அழகிரிக்கு உள்ள செல்வாக்கை மேற்கோள் காட்டி வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றவேண்டும் என்று சாட்சி விண்ணப்பம் அளித்திருந்தார்.

Dinamani | Chennai Online News Service - View News: "SC also asked the State Government as to why the case should not be transferred to Karnataka. The bench asked the TN Government to file its response within four weeks after one of the witnesses apprehended threat to his life.

The witness Suresh Kumar alias Kremmer Suresh filed the petition seeking transfer of the trial presently being held before the III Additional Sessions Judge, Madurai to any other court in the neighbouring Karnataka State on the ground that a free and fair trial cannot be held as Azhagiri wielded enormous influence."

தாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி

Posted: 15 May 2007 03:49 PM CDT

நவீனகால உலக அதியசங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் காற்றில் மாசுகட்டுப்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தாஜ்மஹாலின் புகழ்பெற்ற வெளிப்புற வெள்ளை பளிங்குக் கற்கள் மெதுவாக நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறி வருவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று கூறியுள்ளது.

இதற்கு முன்னர் முயற்சிக்கப்பட்ட, பளிங்குக் கற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சுத்திகரிப்பு முறை ஒன்றினை மீண்டும் மேற்கொண்டு, இந்த 17ம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பழைய நிலைக்கே, அதாவது வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர மற்றுமொருமுறை முயற்சிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் தாஜ்மஹாலிற்கு 30 இலட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டப்படி இந்த புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

BBC NEWS | South Asia | Face mask to beautify Taj Mahal (BBC Tamil)

பர்மாவுடன் ரஷியா அணு சக்தி ஒப்பந்தம்

Posted: 15 May 2007 03:46 PM CDT

ரஷ்யா பர்மாவுடன் ஒரு அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக கூறுகிறது. இந்த நடவடிக்கை, மேலை நாடுகளை கவலையுறச்செய்யும். அடக்குமுறை மற்றும் ஜனநாயக தன்மையற்ற நடவடிக்கைகளை கையாளுவதாக பர்மா மீது மேலை நாடுகள் குற்றச்சாட்டுகின்றன.

பர்மாவில் இந்த உடன்படிக்கையின் மூலம் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் , ஒரு அணு ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமான வேலைகள் ஆகியவை செய்து தரப்படும் என்று மோஸ்கோவில் உள்ள அணுசக்தி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் மிகக்குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் இயங்கும் ஒரு 10 மெகாவாட் திறன்கொண்ட அணுசக்தி உலையும் அடங்கும். இந்த அணு உலை அமைதி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் என்று பர்மிய அரசு கூறுகிறது.

BBC NEWS | Asia-Pacific | Russia and Burma in nuclear deal (BBC Tamil)

"பாஸ் மார்க்' நிர்ணயிப்பதில் சாதகமான புதிய விதி: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

Posted: 15 May 2007 10:02 AM CDT

கடந்த ஆண்டு வரை பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறை (பிராக்டிகல்) தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் (தியரி) தேர்வுகளில் 40 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், குறைந்தபட்சம் செய்முறைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்களும், கருத்தியல் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டது.

இதேபோல சில தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் (கிரேஸ் மதிப்பெண்கள்) வழங்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன் பயனாக இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புற பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது.

Dinamani

தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாதவன்

Posted: 15 May 2007 09:59 AM CDT

கரூர் வெண்ணெய்மலை அருகேயுள்ள சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.மாதவன் பிளஸ் 2 தமிழ்ப் பாடத்தில் 196 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

எஸ். மாதவன் கூறியது:
"எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் உண்டு. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோரும் காரணம். அடுத்து மருத்துவம் பயின்று, ஏழைகளுக்குச் சேவை செய்வேன்."

Dinamani

சற்றுமுன்... கருத்துக்கணிப்பு முடிவு

Posted: 15 May 2007 09:55 AM CDT

எந்த உயர் கல்வியில் சேரலாம்?: புதிய இணையதளம் அறிமுகம்

Posted: 15 May 2007 09:53 AM CDT

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு எந்த உயர் கல்வியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிய www.collegesintamilnadu.com என்ற இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் மாணவர் தனது பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைத் தெரிவித்தால், அவர் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நிலையை அறியலாம்.

Dinamani

முன்னணி கல்விக்கூடங்களில் பழங்குடிகள் படிக்க நிதியுதவி

Posted: 15 May 2007 09:47 AM CDT

பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்க, மாணவர்கள் தங்குவதற்காகும் செலவு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கல்விக் கட்டணம், பிற செலவுகள் ஆகிய அனைத்துக்குமான நிதியுதவி அளிப்பதற்கான அரசு திட்டம் தயாராகிவருகிறது என்று பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் பி.ஆர். கிண்டய்யா தெரிவித்தார்.

Dinamani

ச: தமிழ்நாடு பிராமணர் சங்கம் வேண்டுகோள்

Posted: 15 May 2007 06:11 AM CDT

சென்னை, மே 15:

ராமர் பாலம் விஷயத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

கும்பகோணத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக அரசின் கலைக்கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கலைக்கல்லூரிகளில் 2வது ஷிப்டு முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு முன்வந்திருப்பதற்கு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டுமானால் உத்தர பிரதேசத்தைப் போல தமிழகத்திலும் தலித் சகோதரர் அல்லது சகோதரி முதல்வராக வர வேண்டும் என்றும் இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- மாலைச் சுடர்

இந்தியா-பங்களாதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

Posted: 15 May 2007 05:53 AM CDT

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே சிட்டகாங்கில் நடைபெறவிருந்த மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பெய்த மழையினால் இன்று கைவிடப் பட்டது.நடுவர்கள் மூன்றுமுறை பார்வையிட்டபிறகும் ஈரம் காயாததால் இம்முடிவு எடுக்கப் பட்டது.


India-Bangladesh 3rd ODI called off-The Times of India

ச: பாகிஸ்தான்: பெஷாவர் ஓட்டலில் குண்டுவெடிப்பு: 24 பேர் மரணம்

Posted: 15 May 2007 05:44 AM CDT

பாகிஸ்தானின் வடமேற்கு மாநில தலைநகரான பெஷாவரில் ஒரு ஓட்டலின் வரவேற்பறையில் வெடித்த குண்டுவெடிப்பில் 24 பேர்வரை மரணமடைந்திருப்பதாக அம்மாநில அதிகாரிகள் கூறினர். ஆஃப்கானியர்கள் அதிகம் புழங்கும் அந்த ஓட்டல் பெஷாவர் நகரத்தின் மையத்தில் புகழ்பெற்ற மசூதியின் அண்மையில் உள்ளது.

Hotel bomb kills at least 24 in Pakistan's Peshawar | U.S. | Reuters

ச: தினகரன் தாக்குதல்: அட்டாக் பாண்டியன் கைது

Posted: 15 May 2007 05:34 AM CDT

தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக் பாண்டியன் இன்று கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப் பட்டார். ்மதுரை ஊரக காவல்நிலையத்தில் வலிய வந்தடைந்த அட்டாக் பாண்டியனை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.


Main accused in Dinakaran attack arrested - India

சற்றுமுன்: இங்கிலாந்தில் மேயராகும் முதல் இந்தியர்

Posted: 15 May 2007 02:41 AM CDT

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் நகரின் மேயராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள கிளவ்செஸ்டர் மாநகராட்சியில் தேர்தல் நடந்தது. அதில் பார்ட்டன் டிரெட்ஒர்த் பகுதி கவுன்சிலராக தொழில் கட்சி சார்பில் இந்தியாவை சேர்ந்த ஹர்ஜித் கில் போட்டியிட்டார். அவர் அமோக வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் கிளவ்செஸ்டர் நகரின் மேயராக தேர்ந்து எடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

ஹர்ஜித் கில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள தகோகாவை சேர்ந்தவர். ஜலந்தரில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பிரபலமான ஹாக்கி வீரர் ஆவார். இவர் இந்திய ஆணியில் இடம் பெற்று பல சர்வேதச போட்டிகளில் ஆடியுள்ளார்.

தற்போது ஹாக்கி போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். ஹர்ஜித் கில் 1978ம் ஆண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அதே ஆண்டே இங்கிலாந்தை சேர்ந்த ஜம்மிந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குர்கமால் (26) மகனும், அம்ரிதி (24) மகளும் உள்ளனர். ஹர்ஜித் கிளவ்செஸ்டர் நகரின் 527வது மேயராக வருகிற 21ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார் கில்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ஆஸ்திரேலிய யோசனை - ஜிம்பாப்வே மறுப்பு

Posted: 15 May 2007 02:36 AM CDT

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக ஜேம்ஸ் சுதர்லேண்ட், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஓஜியாஸ் பூட்டை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது மூன்றாவது நாட்டில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை பூட் மறுத்துவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாட அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவார்ட் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தார்.

பொதுவான இடத்தில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டதால் தற்போது இந்தப் போட்டிகள் நடைபெறாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நன்றி:- MSN தமிழ்

சற்றுமுன்:- தயாநிதியின் இடத்தை பிடிக்கிறார் அமைச்சர் ராசா: ராதிகா செல்வி, குப்புசாமி, குமரன்-ஒருவருக்கு பதவி

Posted: 15 May 2007 02:32 AM CDT

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிய திமுக தலைவர் கருணாநிதி, அந்தத் துறையை மத்திய சுற்றுச்சூழல்துறை அைமச்சர் ராசாவிற்கு வழங்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீரச்சாமி, அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை விலக்கிக் கொள்வது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய கூட்டணி தலைவர் சோனியா காந்தியிடமும் ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் கருணாநிதி அளித்த கடிதங்களை பிரதமரிடமும், சோனியா காந்தியிடமும் கொடுத்தேன். அக்கடித்தத்தில் என்ன எழுதியிருந்தது என எனக்கு தெரியாது. அதை படித்த பிரதமர் இதில் குறிப்பிட்டுள்ளபடி நிறைவேற்றுவதாக கூறினார்.

மாறன் வகித்த துறை யாருக்கு வழங்கப்படும் என்று எனக்குத் தெரியாது என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறுகையில், அமைச்சர்கள் பற்றி கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்வார்கள். இதில் காங்கிரஸ் தலையிடாது என்றார்.

இந் நிலையில் தயாநிதி மாறன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜாவிற்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

ராஜா வகித்து வரும் வனத்துறையின் கேபினட் பதவி, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனி மாணிக்கத்திடம் தரப்படலாம் எனவும் தெரிகிறது.

இதன் மூலம் இணைமைச்சராக உள்ள பழனி மாணிக்கம் கேபினட் மந்திரியாக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பழனி மாணிக்கம் வசம் உள்ள நிதித்துறை இணையமைச்சர் பதவி மூத்த எம்பியான குப்புசாமி அல்லது ராதிகா செல்வி, குமரன் ஆகியோரில் ஒருவருக்குத் தரப்படலாம் என்று தெரிகிறது.

இந்த குமரனிடம் இருந்து தான் தினகரன் பத்திரிக்கையை தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் ரூ. 130 கோடிக்கு வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையை மாறன் குடும்பத்திடம் விற்பதை தனது மாமனாரான தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனிடம் கூட குமரன் தெரிவிக்கவில்லை என அப்போது செய்திகள் வந்தது நினைவுகூறத்தக்கது.

இதனால் மாறன் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ஆதித்தன். இப்போது தயாநிதி பதவி காலியாகி அதன் மூலம் குமரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குமரன் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றவர் ஆவார்.

அமைச்சர் பதவிக்கு பெயர் அடிபடும் இன்னொரு திமுக எம்பியான ராதிகா செல்வி, ஜெயலலிதா அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியாவார்.

மத்திய அமைச்சரவையில் நாடார்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என திமுக மீது அந்த சமூகத்தினர் குமுறல் வெளியிட்டு வந்தனர். குமரனுக்கோ அல்லது ராதிகா செல்விக்கோ அந்தப் பதவி தரப்பட்டால் அச் சமூகத்தினரின் மன வருத்தத்தையும் போக்க முடியும் என திமுக கருதுகிறது.

நன்றி:-தட்ஸ் தமிழ்

ச: மும்பையில் தீ விபத்து

Posted: 15 May 2007 02:21 AM CDT

இன்று காலை 8 மணியளவில் மும்பை கல்பாதேவி பகுதியில் உள்ள L K மார்கெட்டில் ஐந்துமாடிக் கட்டிடமொன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. எட்டு தீயணைப்பு வண்டிகள், இரண்டு ஆம்புலன்சுகள் மற்றும் எட்டு தண்ணீர் வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காரணங்கள் , சேதங்கள் இதுவரை தெரியவில்லை.

The Hindu News Update Service

உள்துறை செயலாளரை மிரட்டிய தயாநிதி!

Posted: 15 May 2007 12:58 AM CDT

மே 15, 2007

சென்னை: மதுரை தினகரன் சம்பவத்தைத் தொடர்ந்து உள்துறைச் செயலாளரைத் தொடர்பு கொண்டு மிரட்டுவது போல பேசினார் தயாநிதி மாறன் என அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் கடிதங்களை டெல்லிக்கு எடுத்துச் சென்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் கொடுத்து விட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் ஆற்காடு வீராசாமி.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று தயாநிதி மாறன் கூறுவதில் உண்மை இல்லை. மதுரை சம்பவம் நடந்த பின்னர் அவர் உள்துறை செயலாளருக்குப் போன் செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா, இல்லையா. உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும். தவறினால் குடியரசுத் தலைவரிடம் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். அது வரம்பு மீறிய செயல்.

அவரது தாத்தாதான் முதல்வர். விரும்பியிருந்தால் அவரிடம் பேசியிருக்கலாம். அதை விடுத்து உள்துறைச் செயலாளரை மிரட்டியுள்ளார் என்றார் ஆற்காடு வீராசாமி.

முன்னதாக டெல்லியில் பிரதமர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தார் ஆற்காடு வீராசாமி. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் அனுப்பியிருந்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்தேன். வாங்கிப் பிரித்துப் படித்துப் பார்த்த பிரதமர், அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதாக கூறினார்.

அதேபோல சோனியா காந்திக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் அவரைச் சந்தித்துக் கொடுத்தேன். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத யாரும் அமைச்சராவார்களா என்பது எனக்குத் தெரியாது. தமிழக முதல்வரின் பரிந்துரைப்படி பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்றார் ஆற்காடு வீராசாமி.

நன்றி :
தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: ரிசல்டுக்கு முன்பே பிளஸ் டூ மாணவி தற்கொலை

Posted: 15 May 2007 12:42 AM CDT

சென்னையில் பிளஸ் டூ தேர்வு முடிவை அறியும் முன்பே மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் வேலன். இவரது மகள் யமுனா (17) பிளஸ் டூ தேர்வு எழுதியிருந்தார்.

இவர் சரியாக படிப்பதில்லை என அவரது பெற்றோர் அடிக்கடி திட்டியுள்ளனர். இதனால் மன வருத்தம் அடைந்தார் யமுனா.

இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வில் தேல்வியடைந்து விடுவமோ என்ற பயத்தில் நேற்றிரவு யமுனா வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

Monday, May 14, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தயாநிதி மாறன் பேட்டி - வீடியோ

Posted: 14 May 2007 05:41 PM CDT

ச:அகமதாபாத் பஸ் விபத்து 20 பேர் பலி

Posted: 14 May 2007 05:03 PM CDT

அகமதாபாத் அருகே CNG(Compressed Natural Gas) சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்த பஸ் ஓன்று கெமிக்கல் லாறியில் மோதியதில் பஸ் வெடித்து 20பேர் உருத்தெரியாமல் எரிந்து இறந்தனர்.

உயிர் தப்பித்த பயணிகள் அருகாமையிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

20 killed as CNG Gujarat bus catches fire The Hindu

ச:மாறன் ராஜினாமா பிரதமர் ஏற்பு

Posted: 14 May 2007 01:26 PM CDT

மாறனின் பதவி விலகல் விண்ணப்பத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் அப்துல்கலாமின் ஒப்புதலுக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்தார்.

PM accepts Maran's resignation

ச:'மாறன் ஆட்சி அதிவேக வளர்ச்சிக்காலம்'

Posted: 14 May 2007 11:29 AM CDT

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறையினர் தயாநிதி மாறனின் பதவி விலகலால் அதிர்ச்சியுற்றுள்ளதாகத் தெரிகிறது. மாறனால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் தொடருமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் டி.வி இராமச்சந்திரன்,"(மாறன் ஆட்சியின்) சாதனைக்களை எல்லோரும் கண்கூடாகக் காண இயல்கிறது. கடந்த மூன்று வருடங்களும் தொலைத்தொடர்புத் துறை அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது...அவர் இந்திய தொலைத்தொடர்புத் துறையை மிக வேகமாக வளரச் செய்துள்ளார்." என்றார்.

மாறனின் நீக்கம் தொலைத் தொடர்புத் துறையை பாதிக்காது என நம்புவதாகவும் தெரிவித்தார்.

10பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழிநுட்பத் துறையில் முதலீடுகள் மாறன் ஆட்சியில் வந்துள்ளன.

இவ்விரு துறைகளும் மாறனின் கீழ் பல மைல்கல்களைத் தாண்டியுள்ளன.

நாஸ்காம்(NASSCOM) செய்தி அறிக்கை ஒன்றும் மாறைனை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

Industry hails Maran's tenure as high growth trajectory The Hindu
"Dayanidhi Maran has been a great champion and friend of the Indian IT sector. NASSCOM on behalf of the Indian IT industry, would like to put on record its appreciation of the very positive and important role played by Maran in sustaining the growth of this industry over the last 3 years", IT association NASSCOM said in a statement.

ச:கலாமுக்கு லண்டன் அபூர்வ பதக்கம்

Posted: 14 May 2007 09:11 AM CDT

அப்துல்கலாமுக்கு ராயல் சொசைட்டி ஆப் லண்டன் "கிங் சார்லஸ் -II" பதக்கத்தை வழங்கி கௌரவிக்கவுள்ளது. 1997ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த பதக்கம் உலகளவில், அறிவியல் (ஆராய்ச்சி) வளர்ச்சியை ஊக்குவித்த நாட்டுத் தலைவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அபூர்வ பதக்கமாகும்.

இந்த பதக்கத்தைப் பெறும் இரண்டாவது நபர் அப்துல் கலாம். முதன் முதலில் 1998ல் இந்தப் பதக்கம் ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோவுக்கு வழங்கப்பட்டது.

President Kalam chosen for King Charles Medal The Hindu

King Charles II Medal

ச: சிவாஜி: மே 31 வெளியீடு

Posted: 14 May 2007 09:16 AM CDT

வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த ரஜினியின் 'சிவாஜி' திரைப்படம் மே31 அன்று வெளியிடப்படும் என்று ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Sivaji in theatres on May 31

ச: மூணாறில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு

Posted: 14 May 2007 08:51 AM CDT

கேரள முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிக்குழு மூணாறில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க பெரிய அளவில் இறங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தனின் சென்ற மாத வருகையின் போது இந்த ஆக்கிரமிப்புக்களை கண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு மூன்று மாதங்களில் நிறைவேற்றபட உள்ளது.

NDTV.com

ச: கர்நாடகா: பெண்களுக்கு இரவுப்பணி: உத்தரவு இரத்து

Posted: 14 May 2007 08:42 AM CDT

கர்நாடக அரசு பெண்களை இரவுநேரங்களில் எட்டு மணிக்குப் பிறகு கடைகளில் பணிக்கு அமர்த்துவதை தடை செய்து பிறப்பித்த உத்தரவை பலத்த எதிர்ப்புக்களிடையே மீட்டுக் கொண்டுள்ளது.

Karnataka revokes ban on night shift for women

சற்றுமுன்: மே 16 முதல் பி.இ, 28 முதல் எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் வினியோகம்

Posted: 14 May 2007 06:48 AM CDT

சென்னை என்ஜினீயரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரும் 16 முதல் வினியோகிக்கப்படவுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதையடுத்து என்ஜினியரிங், பி.டெக் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தமிழ்நாடு என்ஜினீயரிங் அட்மிஷன் 2007, சென்னை 25 என்ற முகவரிக்கு ஜூன் 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு படிப்பில் சேர சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 28ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: தினகரனின் 'தமிழ் முரசு' மீது உரிமை மீறல் நடவடிக்கை

Posted: 14 May 2007 06:45 AM CDT

சன் டிவி-தினகரன் குழுமத்தின் மாலை தினசரியான தமிழ் முரசு மீது சட்டசபையில் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி-மாறன் குடும்ப மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

சன் டிவி-தினகரன் குழுமம் நடத்தி வரும் மாலை நாளிதழ் தமிழ் முரசு. மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என சில தினங்களுக்கு முன் சட்டசபையில் கருணாநிதி அறிவித்தார்.

அந்தச் செய்தியை தமிழ் முரசு திரித்து வெளியிட்டதாக இன்று சட்டசபையில் உரிமை மீறல் தீர்மானம் ெகாண்டு வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன். அவர் பேசுகையில்,

முதல்வர் சொன்னதை தமிழ் முரசு பத்திரிக்கை திரித்து வெளியிட்டது. அதில் அழகிரியையும் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது. இதனால் அதன் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதையடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானசேகரன் ெசால்லும் குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே அதை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப உத்தரவிடுகிறேன் என்றார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

ச:கராச்சியில் கண்டதும் சுட உத்தரவு

Posted: 14 May 2007 06:39 AM CDT

கராச்சியில் நடந்த கலவரங்களை அடுத்து அங்கே போராட்டக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பாக்கிஸ்தான் கராச்சியில் பதவி விலக்கப்பட்ட உச்ச நீதிம்மன்ற நீதிபதியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ரஃபின் ஆதரவாளர்களுக்குமிடையே நடந்த மோதலில் 40பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு உபைரானுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

எதிர்கட்சிகள் சார்பில் பாக்கிஸ்த்தான் முழுவதும் கடையடைப்பும் நடந்துவருகிறது.

Pakistani Soldiers Ordered to Shoot Karachi Rioters on SightBloomberg

சற்றுமுன்: தினகரன் மீதான தாக்குதல்: விசாரிக்க ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் குழு

Posted: 14 May 2007 05:08 AM CDT

மதுரை: மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரிக்க தென் மண்டல ஐஜி தலைமையில் குழு அமைக்கப்படும் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

மதுரையில் புதிய காவல்நிலைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர்,

மதுரையில் நடந்த வன்முறை சம்பவம் மற்றும் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. இதில் காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என விசாரிக்க தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தலைமையில் ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையை அரசுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த குழுவிற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படவில்லை.

இந்திய அளவில் கணக்கிடும் போது தமிழகத்தில் காவல் நிலையங்கள் போதுமானதாக உள்ளன. மக்கள் தொகைக்கு தகுந்தவாறு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை வாகனங்களுக்கான எரிபொருள் அளவை உயர்த்தி கொடுக்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்: வேகமாக உயர்ந்து படு வேகமாக சரிந்த தயாநிதி

Posted: 14 May 2007 04:57 AM CDT

சென்னை: மின்னல் வேகத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, அதி வேகமாக உச்சத்திற்குச் சென்ற தயாநிதி மாறனின் அரசியல் வாழ்க்கை, மூன்றே ஆண்டுகளில் தரைமட்டமாகியுள்ளது.

கருணாநிதியின் நிழலாக, அவரது மனக் குரலாக விளங்கிய மறைந்த முரசொலி மாறனின் இளைய மகன்தான் தயாநிதி மாறன். மாறன் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் திமுகவின் குரலாக இருக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்த சமயத்தில் திடீரென உதயமானவர் தயாநிதி மாறன். தந்தையின் இடத்தில் தயாநிதியை உட்கார வைத்து அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி.

மத்திய சென்னை எம்.பி. தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்து, மாறன் குடும்பம் விரும்பிய முக்கியத் துறையை அவருக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.

ஆனால் கருணாநிதியின் இந்த முடிவுக்கு கட்சிக்குள் அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் தனது பாணியில் இதை அமைதிப்படுத்தி, அடக்கினார் கருணாநிதி.

2004ம் ஆண்டு மத்திய அமைச்சரானார் தயாநிதி மாறன். அதற்கு முன்பு தயாநிதி மாறன் அதிகம் அறியப்படாதவர். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தின் இயக்குநராக மட்டுமே இருந்து வந்தார் தயாநிதி மாறன்.

ஆனால் மத்திய அமைச்சரான பின்னர் தனது செயல்பாடுகளால் டெல்லியில் பலரின் நட்பைப் பிடித்தார். குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், பிரதமரிடமும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

மிகக் குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார் தயாநிதி மாறன். அதே சமயம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். சன் டிவியை வளர்ப்பதில் மட்டும்தான் அவர் அக்கறை காட்டுகிறார். மற்ற தமிழ் சானல்களை அழிக்கும் வேலையில் அவர் ஈடுபடுகிறார் என்று முன்பு பெரும் சர்ச்சை எழுந்தது.

ராஜ் டிவியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தயாநிதி மாறன் கடுமையாக முயல்வதாகவும் கூறப்பட்டது. இதை நிரூபிக்கும் வகையில் ராஜ் டிவிக்கு வழங்கப்பட்ட நேரடி ஒளிபரப்புக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஜெயா டிவிக்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்தார் தயாநிதி மாறன் என்று கூறப்பட்டது. அந்த நிறுவனத்தின் சார்பில் புதிதாக ஒரு செய்தி சானலுக்கான உரிமத்தை வழங்கவும் தயாநிதியின் துறை தாமதம் செய்தது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டைத் தொடர்ந்து உரிமம் வழங்கப்பட்டது.

சமீபத்தில் விஜய் டிவியுடனும் மோதினார் தயாநிதி மாறன். அந்த டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யூனிட்டை அப்படியே சன் டிவிக்கு ஹைஜாக் செய்ததில் தயாநிதி மாறன் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், விஜய் டிவிக்கு பல ரூபங்களில் நெருக்கடியும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, உச்சமாக இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டினார் என்ற சர்ச்சைதான். நான் மிரட்ட வில்லை என்று தயாநிதி மாறன் அதற்கு விளக்கம் கூறினார். ஆனால் அதுகுறித்து பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை, விளக்கவும் இல்லை.

இந்த நிலையில்தான் தேவையில்லாத ஒரு கருத்துக் கணிப்பை தினகரன் வெளியிடப் போக தயாநிதியின் தலை உருண்டுள்ளது.

அடுத்து தயாநிதி மாறன் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. பதவியையும் அவர் ராஜினாமா செய்வாரா என்பது தெரியவில்லை. அதுகுறித்து திமுக தரப்பிலும் எந்த சத்தமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 ஆண்டுகளில் பதவியிழக்கும் தயாநிதி மாறன்

பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில் தயாநிதி மாறன் தன் அமைச்சர் பதவியை இழக்கிறார்.

சன் டிவி குழுமத்தின் கேபிள் நெட்வொர்க்கான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவன இயக்குனராக இருந்த தயாநிதி மாறன், கடந்த 2004ல் முரசொலி மாறன் மறைவிற்கு பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முதன்முதலாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து அவருக்கு மத்தியில் அமைந்த கூட்டணியில் முக்கியமான துறையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலை தொடர்புத் துறை கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றார். டெல்லி அரசியலில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தினார்.

தொலைத் தொடர்புத்துறை அைமச்சராக மிகச் சிறப்பாக பணியாற்றி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களின் மதிப்பையும் பெற்றார். தொலைபேசி கட்டணங்களை குறைத்துக் கொண்டே வந்தார். அவருடைய மிகப் பெரிய சாதனையாக கருதப்படுவது இந்தியா முழுவதும் 1 ரூபாயில் பேசும் ஒன் இந்தியா திட்டம்.

ஆனால் தினகரன் வெளியிட்ட கருத்து கணிப்பு, அழகிரி கும்பல் தாக்குதல், அழகிரியை ரவுடி என சன் டிவி விமர்சித்தது, முதல்வர் கருணாநிதியை புறக்கணித்தது என திடீரென நிகழ்ந்த அரசியல் சூறாவளிகளால் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டு பதவியை இழந்து நிற்கிறார் தயாநிதி.

இதனால் யாருக்கு லாபமோ நஷ்டமோ தொலைத் தொடர்புத்துறையும் சாப்ட்வேர் துறையும் ஒரு இளம், எனர்ஜடிக் அமைச்சரை இழந்துவிட்டது.

நன்றி: தட்ஸ் தமிழ்

சற்றுமுன்:- பிளஸ்-2: சென்னை டிஏவி பள்ளி மாணவி ரம்யா

Posted: 14 May 2007 04:50 AM CDT

சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் சென்னை மாணவி ரம்யா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோபாலபுரத்திலுள்ள டிஏவி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ரம்யா 1182 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த ரூபிகா 1180 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

திருப்பூரை சேர்ந்த ஜெயமுருகன், நாமக்கல்லை சேர்ந்த நிவேநிதா, இளவரசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் 1179 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

மதிப்பெண் சான்றிழ்கள் வரும் 25க்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

நன்றி:- தட்ஸ் தமிழ்

சற்றுமுன்:சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

Posted: 14 May 2007 04:46 AM CDT

சதி செய்து பதவியை பறித்துவிட்டனர்-தயாநிதி பேட்டி

சென்னை: கட்சியில் உள்ள சிலர் சதி செய்து தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

ஊட்டிலிருந்து இன்று சென்னை வந்த மாறன் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,

மதுரை தினகரன் மீதான தாக்குதலால் நான் ராஜினாமா முடிவை எடுக்கவில்லை. சன் டிவிக்கும் தினகரனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அந்த சம்பவத்தை வைத்து என் பெயரைக் கெடுக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தை காரணமாக வைத்து என்னை பதவி நீக்கம் செய்ய வைத்துள்ளனர்.

அமைச்சராக பணியாற்ற வாய்ப்பளித்த சோனியா காந்தி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பதவி முக்கியமல்ல. அமைச்சராக இருப்பதும் இல்லாததும் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

எனது கட்சியான திமுகவுக்கோ தலைவர் கலைஞருக்கோ எந்த விதத்திலும் எதிராக செயல்பட மாட்டேன். ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது தான் மிகுந்த வருத்தத்தை தருகிறது.

கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும் நான் திமுககாரன் தான். கட்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். நான் பிறந்தது திமுககாரனாத்தான். கட்சியை விட்டு நீக்கினாலும் திமுக தொண்டனாகவே சாவேன்.

விரைவில் கலைஞரை சந்திப்பேன். என் நிலையை விளக்குவேன். ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை.

ஆனால், கலைஞரை சந்திக்க இதுவரை எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அது ஏன் என்று தான் புரியவில்லை.

எங்கள் குடும்பத்துக்கும் கலைஞர் குடும்பத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எனக்கு ஸ்டாலின், அழகிரியோடு நல்ல நட்புறவு தான் உள்ளது.

கட்சியிடம் இருந்து என்னை ஏன் நீக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு இதுவரை நோட்டீஸ் ஏதும் வரவில்லை. ஆனால், நான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறு கணமே எனது ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன்.

கட்சி எடுத்த முடிவு அது. அதற்கு கட்டுப்பட்டுவிட்டேன்.

அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும் எம்பியாக தொடரவே விரும்புகிறேன். சென்னை மத்தியத் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறேன். அந்தப் பதவியில் இருந்து விலகச் சொன்னாலும் நான் தயார் என்றார் தயாநிதி.

மதுரை சம்பவம் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினீர்களாமே என்று கேட்டபோது, இது பொய்யான தகவல். அப்போது நான் மக்களவையில் இருந்தேன் என்றார் தயாநிதி.

முன்னதாக நேற்றிரவு ஊட்டியிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் திமுகவுக்கும், தலைவர் கலைஞருக்கும் என் மனதறிய துரோகம் நினைத்ததில்லை. இனியும் நினைக்க மாட்டேன்.

என் தாத்தாவும், என் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பதவி நீக்குவதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதும் தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கிறேன். ஏனென்றால் நான் அவரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன்.

இந்த நேரத்தில் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. மூன்றாண்டு காலம் இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நேர்மையாகவும், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாகவும், பணியாற்றி பலரது பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும், கட்சிக்கும், எனது இதயங்கனிந்த நன்றிகள் என்று கூறியுள்ளார் தயாநிதி மாறன்..

நன்றி- தட்ஸ் தமிழ்

தயாநிதி சொ.செ.சூ - எகனாமிக்ஸ் டைம்ஸ்

Posted: 14 May 2007 04:07 AM CDT

நடுவண் அரசின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்த தயாநிதிமாறன் எப்போதுமே சிறந்தபேரத்தைப் பெறுவதில் வல்லவராக இருந்தார். மிகப்பெரிய தகவல்நுட்ப மற்றும் தொலைதொடர்பு
நிறுவனங்களிடமிருந்து அதிக அன்னிய முதலீட்டை பெறுவதிலும் அவற்றின் தயாரிப்புச்சாலைகளை சென்னைக்கு ஈர்ப்பதிலும் வெற்றி கண்டார். மூன்று வருடங்களுக்கு ஒன்பதுநாட்கள் குறைந்த அவரது பதவி காலத்தில் அமெரிக்க டாலர் 12 பில்லியனுக்கும் மேலான அன்னிய முதலீட்டை கொண்டுவந்தார். அவரது விலகல் IT மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு பேரிடியே.


மேலும் எகனாமிக்ஸ் டைம்ஸ் கூறுவது....Maran rocked his own boat-Politics/Nation-News-The Economic Times

Sunday, May 13, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி

Posted: 13 May 2007 07:20 PM CDT

தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

தயாநிதியை நீக்கியது ஏன்?

Posted: 13 May 2007 04:18 PM CDT

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.

கருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

தயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- தினமலர்

தயாநிதி பதவி விலகினார்

Posted: 13 May 2007 12:19 PM CDT



- தினமலர்

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

Union IT and Communication Minister Dayanidhi Maran sent in his resignation to Prime Minister Manmohan Singh on Sunday night hours after a high-level committee of the party decided to withdraw him from the Union Cabinet.

- CNN IBN

Flash News- தயாநிதி நீக்கம் !

Posted: 13 May 2007 09:53 AM CDT

தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

- தினமலர்

ச:அஸ்லன்ஷா - இந்தியாவுக்கு வெண்கலம்

Posted: 13 May 2007 08:39 AM CDT

கோலாலம்பூர், மலேசியாவ்வில் நட்ந்துவரும் அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் மூன்றாவது நான்காவது இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் கொரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ச: ஜனாதிபதி பதவிக்கு ஷிண்டே: காங்-கம்யூ. கட்சிகள் முடிவு

Posted: 13 May 2007 05:03 AM CDT

புதுடெல்லி, மே.13-

உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடித்து இருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சமாஜ்வாடி கட்சி ஓட்டுகள் வெகுவாக குறைந்து உள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சோனியா காந்தி கூëட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று சோனியா கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச் சூரி, பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் விஸ் வாஸ் ஆகியோர் சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சிலருடைய பெயரை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி மற்றும் சரண்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று அப்போது ஆலோசித்தனர்.

இதில் சுஷில் குமார் ஹிண்டேவுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. மராட்டிய முன்னாள் முதல் மந்திரியாக இருந்துள்ளார். கவர்னர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மாயாவதி உள்பட எதிர் அணியில் உள்ள கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரும் என்று கருதுகிறார்கள். எனவே சுஷில் குமார் ஷிண்டேயை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு அறிவிக்கின்றனர்.

~மாலைமலர்

Links for 2007-05-12 [del.icio.us]

Posted: 13 May 2007 12:00 AM CDT