Sunday, May 13, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மனதறிய துரோகம் நினைத்ததில்லை - தயாநிதி

Posted: 13 May 2007 07:20 PM CDT

தயாநிதி மாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நான், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கோ, தலைவர் கலைஞர் அவர்களுக்கோ என் மனதறிய எந்த துரோகமும் நினைத்தது இல்லை. இனி உயிர் உள்ளவரை நினைக்கவும் மாட்டேன். என் தாத்தாவும் தந்தையும் என்னை அப்படி வளர்க்கவும் இல்லை. இந்த நிலையில், என்னை பதவி விலக்குவதும் அடிப்படை உறுப்பினர் பதவியை பறிப்பதும் தலைவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தருவதாக இருந்தால், அதை ஏற்கவும் தயாராக இருக்கின்றேன். ஏனென்றால், நான் தலைவர் கலைஞரின் வளர்ப்பு. அவரால் ஆளாக்கப்பட்டவன். இந்த நேரத்தில் இதைத் தவிர வேறு எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
3 ஆண்டு காலம் இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நேர்மையாகவும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகவும் பணியாற்றி, பலரின் பாராட்டைப் பெற வாய்ப்பளித்த தலைவருக்கும் கழகத்துக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

தயாநிதியை நீக்கியது ஏன்?

Posted: 13 May 2007 04:18 PM CDT

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 146 பேர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கியதும், தயாநிதி மாறனின் செயல்பாடு குறித்து விவரிக்கப்பட்டு, அது சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம் என்று வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கோவை ராமநாதன், முகமது சகி உட்பட ஒன்பது பேர் பேசினர். இவர்கள் அனைவருமே தயாநிதியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

குறிப்பாக, கட்சியின் ஆதரவு பெற்றதாக கருதப்பட்ட தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனத்தின் செய்திகள் பற்றி விமர்சித்தனர். டில்லியில் தயாநிதியின் செயல்பாடு அவரது சொந்த செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் இருந்ததாகவும், கட்சிக்கு அவராலும் அவரது குடும்ப நிறுவனத்தாலும் பயன் ஏதும் இல்லை என்றும் கூறினர்.

கருத்துக் கணிப்பு மற்றும் மதுரை சம்பவத்தில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக நம்ப வைக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி மீடியாக்களை ஒன்று திரட்டி ஆட்சிக்கு எதிராக செய்திகள் வெளிவருவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினர். இதுதவிர, பல்வேறு தரப்பினர் தி.மு.க.,வுக்கு எதிராக திரும்புவதற்கு இவர்கள் காரணமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

தயாநிதிக்கு ஆதரவாக ஒருவர் கூட பேசவில்லை. கூட்டத்தில் பேசிய அனைவருமே, முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் தயாநிதி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி என்ன முடிவு எடுத்தாலும் அதை முழுமனதுடன் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அனைவரும் பேசி முடித்த பின், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தயாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணங்களை அப்போது அவர் விளக்கினார். இதன்பின் தயாநிதியிடம் இருந்து மத்திய அமைச்சர் பதவியை பறிப்பது மற்றும் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது ஆகியவை பற்றி முடிவு எடுக்கும் அதிகாரத்தை கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- தினமலர்

தயாநிதி பதவி விலகினார்

Posted: 13 May 2007 12:19 PM CDT



- தினமலர்

தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

Union IT and Communication Minister Dayanidhi Maran sent in his resignation to Prime Minister Manmohan Singh on Sunday night hours after a high-level committee of the party decided to withdraw him from the Union Cabinet.

- CNN IBN

Flash News- தயாநிதி நீக்கம் !

Posted: 13 May 2007 09:53 AM CDT

தயாநிதியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க தி. மு. க., நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு

- தினமலர்

ச:அஸ்லன்ஷா - இந்தியாவுக்கு வெண்கலம்

Posted: 13 May 2007 08:39 AM CDT

கோலாலம்பூர், மலேசியாவ்வில் நட்ந்துவரும் அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டிகளில் மூன்றாவது நான்காவது இடங்களுக்கான போட்டியில் இந்தியா தென் கொரியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

ச: ஜனாதிபதி பதவிக்கு ஷிண்டே: காங்-கம்யூ. கட்சிகள் முடிவு

Posted: 13 May 2007 05:03 AM CDT

புதுடெல்லி, மே.13-

உத்தரபிரதேசம் சட்டமன்ற தேர்தலில் மாயாவதி கட்சி அதிக இடங்களை பிடித்து இருப்பதால் ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா சமாஜ்வாடி கட்சி ஓட்டுகள் வெகுவாக குறைந்து உள்ளன. இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் எளிதாக வெற்றி பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து சோனியா காந்தி கூëட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று சோனியா கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் பரதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச் சூரி, பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் விஸ் வாஸ் ஆகியோர் சோனியாவை சந்தித்து பேசினார்கள்.

அப்போது சிலருடைய பெயரை முன்வைத்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி மற்றும் சரண்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காந்தியவாதி நிர்மலா தேஷ் பாண்டே ஆகியோரில் ஒருவரை நிறுத்தலாம் என்று அப்போது ஆலோசித்தனர்.

இதில் சுஷில் குமார் ஹிண்டேவுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்ததாக தெரிகிறது. மராட்டிய முன்னாள் முதல் மந்திரியாக இருந்துள்ளார். கவர்னர் பதவியிலும் இருந்துள்ளார். எனவே பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று பேசப்பட்டது. மேலும் இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மாயாவதி உள்பட எதிர் அணியில் உள்ள கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரும் என்று கருதுகிறார்கள். எனவே சுஷில் குமார் ஷிண்டேயை நிறுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இறுதி முடிவு அறிவிக்கின்றனர்.

~மாலைமலர்

Links for 2007-05-12 [del.icio.us]

Posted: 13 May 2007 12:00 AM CDT

Saturday, May 12, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ச:பெடரெர், பயிற்சியாளர் பிரிவு

Posted: 12 May 2007 05:35 PM CDT

டென்னிஸ் வீரர் ராஜர் பெடரெரும் அவரின் பயிற்சியாளர் டோனி ரோச்சும் பிரிந்தனர். ரோம் மாஸ்டர் தொடரில் பெடரெர் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு 'பரஸ்பர ஒப்பந்தத்தோடு' நடைபெற்றதாகவும் எதிர்வரும் ப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்பாக இவ்வாறு நிகழ்ந்ததில் பெரெடர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிகிறது.


Federer in shock split from coach BBC

ச:கிரிக்கெட்:இந்தியா ஒருநாள் தொடரை வென்றது

Posted: 12 May 2007 06:20 AM CDT

இந்தியா 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்று ஆட்டதொடரை கைப்பற்றியுள்ளது. 285 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேசம் கொடுக்கப்பட்ட 49 ஓவர்களில் 238/9 ஓட்டங்களையே பெறமுடிந்தது. அந்த அணியின் அதிக ஓட்டங்களை எடுத்த பந்தாட்ட வீரர் பாஷர் 43 ஓட்டங்களே எடுத்தார். இந்திய அணியின் புதுமுகமாக இந்த ஆட்டத்தில் சேர்ந்த சாவ்லா தனது சுழல்பந்து வீச்சால் மூன்று விக்கெட்களை 37 ஓட்டங்கள் கொடுத்து வீழ்த்தியதும் துவக்க ஆட்டக்காரர் கம்பீரின் சதமும் இந்திய வெற்றிக்கு பின்கலமாக அமைந்தன.

ச:விசாகப்பட்டிணம்: தவறான ஓடுபாதையில் தரையிறங்கியது விமானம்

Posted: 12 May 2007 06:17 AM CDT

பாரமௌன்ட் ஏர்வேஸின் விமானம் ஒன்று விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் இன்னும் பணிக்குவராத ஓடுதளத்தில் 70 பயணிகளுடன் தரையிறங்கியதில் விமான ஓட்டியால் கட்டுப்படுத்தமுடியாமல் ஓடுபாதையை தாண்டி புதர்களில் முட்டி நின்றது. அனைத்துப் பயணிகளும் நலமென்று ATC பட்டாபி கூறினார். இதனால் இந்தியன், ஏர்சஹாரா மற்றும் ஏர் டெக்கான் விமானசேவைகளும் பாதிக்கப் பட்டன.

The Hindu News Update Service

சற்றுமுன்: சென்னையில் 300 மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைது

Posted: 12 May 2007 05:48 AM CDT


மதுரையில் அரசியல் ரவுடிகளால்.. படுகொலை செய்யப்பட்ட தினகரன் பத்திரிக்கை ஊழியர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யக்கூறி.. தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தியது. மைலாப்பூர், கச்சேரி சாலை முழுவதும் காவல் துறையினரின் தலலகளே அதிகம் காணப்பட்டன. அந்த வழி போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.




சென்னை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வாசலில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டார்கள். கோஷம் போட்டுக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களை கைது செய்து நான்கிற்கும் மேற்பட்ட வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
மந்தைவெளியில் இருக்கும் ஒரு கல்யாணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.




மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ச: உ.பி முதல்வராக மாயவதி தேர்ந்தெடுக்கப் பட்டார்

Posted: 12 May 2007 06:03 AM CDT

இன்று நடந்த தேர்ந்தெடுக்கப் பட்ட பிஎஸ்பி கட்சி எம் எல் ஏக்கள் கூட்டத்தில் மாயாவதி அக்கட்சியின் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அவரது பெயரை இந்திரஜித் சரோஜ் முன்மொழிய கட்சி மாநிலத்தலைவர் லால்ஜி வர்மா வழிமொழிந்தார்.

அவர் மாநில ஆளுநரை இன்று சந்தித்து நாளை பதவி ஏற்பார் என நம்பப்படுகிறது.


The Hindu News Update Service

ச: கராச்சி வன்முறையில் 14 பேர் மரணம்

Posted: 12 May 2007 05:48 AM CDT

பணிநீக்கம் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி சௌத்திரியின் ஆதரவாளர்களுக்கும் அதிபர் முஷ்ராப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களில் 14 பேர் வரை மரணித்திருக்கலாம் என பிடிஐ செய்தியொன்று கூறுகிறது. தலைமை நீதிபதி மக்கள் பேரணியை அடைந்தபோது இருதரப்பினரும் ஒருவரையொருவர் சுட்டுக் கொண்டதில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது பாகிஸ்தானின் அரசியல் பிரச்சினையை மேலும் தீவிரமாக்குகிறது. ்

Deccan Herald - 14 killed in clashes in Karachi

ச: மம்முட்டிக்கு எம்.பி. பதவி

Posted: 12 May 2007 05:28 AM CDT

நடிகர் மம்முட்டி இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்தது கிடையாது. ஆனால் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி டி.வி. சேனல் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் மம்முட்டி அதன் சேர்மனாகவும் இருந்து வருகிறார்.

அதே சமயம் மம்முட்டியின் சகோதரர் முஸ்லிம் லீக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். இவர் தேர்தல்களில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேல்சபை எம்.பி. பதவி வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் சென்னையில் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு மம்முட்டி பேசிய போது குஜராத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இருந்திருந்தால் அங்கு இனக்கலவரம் நடந்திருக்காது என பேசினார்.

மம்முட்டியின் இந்த பேச்சுக்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் மம்முட்டியின் உருவ பொம்மையை எரித்தனர்.

இப்பிரச்சினை இத்துடன் முடியாமல் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெருக்களில் ஊர்வலமாக வந்து அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய ஜனதா தொண்டர்கள் நடிகர் மம்முட்டிக்கு எதிராக செயல்பட்டு வரும் சூழ்நிலை யில் வருகிற ஜுலை மாதம் நடைபெற உள்ள மேல்சபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மம்முட்டியை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலைமலர்

ச: டென்னிஸ்:ரோம் மாஸ்டர்ஸ்: பயஸ்-தாம் ஜோடி அரையிறுதியில்

Posted: 12 May 2007 02:59 AM CDT

ரோம்மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவதாக தரவரிசையில் உள்ள இந்திய-செக்கோஸ்லோவாகியா ஜோடியான பெயஸ் தாம் ஜோடி 6-4,6-3 என்ற கணக்கில் உரோமானிய அண்ட்ரே பாவல், ஜெர்மானிய அலெக்ஸாண்டர் வாஸ்கே ஜோடியை வென்று பொட்டியின் அரை இறுதிக்கு சென்றனர். இந்த சுற்றுவரை இந்த ஜோடி விளையாடாமலே போட்டியாளர்களின் விட்டுக் கொடுத்தலினால் வென்று வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

விவரங்களுக்கு..The Hindu News Update Service

ச: கிரிக்கெட்: பங்களாதேசத்திற்கு வெற்றி இலக்கு 285

Posted: 12 May 2007 02:30 AM CDT

மழையினால் அரைமணிநேரம் தாமதமாக துவங்கிய இன்றைய ஆட்டத்தில் டாஸ் கெலித்து முதலில் ஆடத்துவங்கிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 49 ஓவர்களில் 284/8 ஓட்டங்கள் எடுத்தனர். 113 பந்துகளில் 101 ஓட்டங்கள் எடுத்து துவக்க ஆட்டக்காரர் கம்பீர் ஆட்டத்திற்கு நல்ல அடிக்கலிட்டார். அணித்தலைவர் ராகுல் திராவிட் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இழந்தார். பங்களாதேசத்தின் ரஃபீக் மூன்று விக்கெட்களை 59 ஓட்டங்களைக் கொடுத்து வீழ்த்தினார். ரசல் இரண்டு விக்கெட்களையும் ரசாக் இரண்டு விக்கெட்களையும் மொர்டாசா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ச: ஒரிசாவில் போஸ்கோ நிறுவனபிணைக்கைதிகளை விடுவித்தனர்

Posted: 12 May 2007 02:27 AM CDT

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்தின் அலுமினியம் தொழிற்சாலை அமைக்க நில கையகப்படுத்த சென்ற நிறுவன ஊழியர்களை நேற்று பிணையாக பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் இன்று அந்நிறுவனத்தின் தலைவரின் வாக்கை அடுத்து விடுவித்தனர். முன்னதாக மூவரில் பெண் ஊழியரை நேற்றே விடுதலை செய்து விட்டனர். போஸ்கோ தலைவர் கிம் 'இனி நாங்கள் அந்தக் கிராமத்திற்கு வரமாட்டோம'் என உறுதிமொழி கொடுத்ததாக போராட்ட சமிதியின் தலைவர் அபய் சாஹு கூறினார்.



POSCO officials released by agitators

Links for 2007-05-11 [del.icio.us]

Posted: 12 May 2007 12:00 AM CDT

ச: திமுகவில் மோதல் வலுக்கிறது:

Posted: 11 May 2007 10:52 PM CDT

பேரவையில் 50 ஆண்டுகள் பணியாற்றியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் திமுக வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் கருணாநிதியின் பேரனான மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் பங்கேற்கவில்லை.

மாலையில் பிரதமரை வரவேற்க விமான நிலையத்துக்கு வந்திருந்த தயாநிதி மாறன் சென்னை தீவுத் திடலில் நடந்த பொன் விழா பொதுக்கூட்டத்துக்கும் வரவில்லை.

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியைத் திமுகவினர் சிலர் வலியுறுத்துவதாகத் தெரிகிறது. தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி குறித்து அடுத்த வாரம் முதல்வர் கருணாநிதி முடிவு செய்வார் என்று திமுக தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.

சென்னை தீவுத் திடலில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை சன் டிவிக்கு மறுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ராஜ் டிவிக்கு அந்த உரிமை வழங்கப்பட்டிருப்பதும் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

Friday, May 11, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

போப்பாண்டவர் தற்போதைய கலாச்சாரத்தின் மீது கடும் விமர்சனம்

Posted: 11 May 2007 06:40 PM CDT

போப்பாண்டவர் பெனெடிக்ட் ப்ரேஸில் நாட்டில் உள்ள சாவோ பாலோ என்ற நகரத்திற்கு வந்துள்ளார். அந்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஒருவரை 'புனிதராக' அறிவிக்கும் ஒரு நிகழ்ச்சியில், தற்போதுள்ள கலாச்சாரத்தினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருமணத்தையும் அதன் புனித்ததையும் கிண்டல் செய்யும் அனைத்து விஷயங்களையும் எதிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/18611180/

வரலாறு காணாத உயர்வு: கறிக்கோழி கிலோ ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.47

Posted: 11 May 2007 03:32 PM CDT

நாமக்கல், மே 12: கோழிப் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு கறிக்கோழியின் பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.47 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1995-ம் ஆண்டுக்குப் பிறகு கிலோ ரூ.46 என்பதே உட்சபட்ச விலையாக இருந்தது. இந் நிலையில், பல்லடத்தில் வெள்ளிக்கிழமை (மே 11) கூடிய பிராய்லர்ஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலையை கிலோ ரூ.47 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது.

மீன்வரத்து குறைந்துள்ளதால் கேரளத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. இனப் பெருக்கத்துக்காக கடலில் மீன்பிடிக்க தடை விதித்திருப்பதாலும் கறிக்கோழி விலை அபரிதமாக உயர்ந்துள்ளது. இது பண்ணையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முட்டை விலை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையும் பண்ணை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1.90 காசுகளாக உள்ளது. இது கோழிப் பண்ணைத் தொழிலுக்கே மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

விமான நிலையத்தில் விதிகளை மீறிய அழகிரி

Posted: 11 May 2007 03:17 PM CDT

சென்னை, மே 12: மதுரையில் இருந்து சென்னை வந்த மு.க.அழகிரி, போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் வழியாகச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் வருகையையொட்டி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களை மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. சென்னை தீவுத்திடலில் முதல்வர் பொன் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரையில் இருந்து சென்னைக்கு பாரமவுன்ட் விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை வந்தார். அப்போது, பாரமவுன்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கார் ஒன்று மு.க.அழகிரியை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர், அவர் போலீஸ் பாதுகாப்புடன் வி.ஐ.பி. கேட் எண் 1-ல் வெளியேறினார்.

பிரதமர் வருகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி, மு.க.அழகிரி அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது, இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இத்துடன் மு.க. அழகிரி, வி.ஐ.பி. கேட் வழியாக அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்பது பற்றியும் கேள்வி எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, "மு.க.அழகிரியின் வேண்டுகோளுக்கு இணங்க பாரமவுன்ட் நிறுவனத்தினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எஃப்) அனுமதி பெற்று, வி.ஐ.பி. கேட் வழியாக அவரை அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தனர்.

Dinamani

மலேசியாவிடம் இந்தியா தோல்வி (2-1)

Posted: 11 May 2007 03:11 PM CDT

அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் மலேசியாவிடம் தோல்வியுற்று, இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

ஆட்டத்தின் 9-வது நிமிஷத்தில் மலேசிய அணி முன்னிலை பெற்றது. அடுத்த 2-வது நிமிஷத்தில் சிவேந்திர சிங் அடித்த கோலால் இந்தியா 1-1 என சமநிலை பெற்றது. ஆனால், அதுவே இந்தியாவுக்கு கடைசிக் கோலாக அமைந்தது. பிற்பாதியில் மலேசிய அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

தோல்வியுற்ற இந்திய அணி, 3-ம் இடத்துக்காக கொரியாவுடன் விளையாடுகிறது. கடந்த முறை போட்டியில் இந்தியா 3-ம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கொரியா தோல்வி: முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கொரியாவை 6-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. தொடர்ச்சியாக 4-வது முறையாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ச:ஓரினச் சேர்க்கை திரைப்படம் தயாரித்த மாணவர்கள் - கேரளாவில் சர்ச்சை

Posted: 11 May 2007 01:30 PM CDT

கேரளா சங்கனசெரியில் கத்தோலிக்க திருச்சபை நடத்திவரும் புனித வளனார் ஊடகத்துறை கல்லூரியில் ஓரினச்சேர்க்கைபற்றிய திரைப்படம் எடுத்த மாணவர்கள் ஐந்துபேர் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

'சீக்ரட் மைண்ட்ஸ்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்கான படைப்பு என அதை இயக்கிய மாணவர் ஜோ பேபி தெரிவித்துள்ளார்.

கல்லூரி நிர்வாகம் இந்தப் படம் எல்லைமீறியதாக உள்ளதாகவும், மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களை தவறாகப் பயன்படுத்தி இதில் நிர்வாணமாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

ஆனால் மாணவர்கள் தரப்பில் படத்தில் பாதி நிர்வாணமே உள்ளதாகவும், பாடத்திட்டத்துக்குட்பட்டே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


Students expelled for making film on homosexuality

தொடர்புள்ள இன்னொரு செய்தி

ச: அப்துல் கலாமுக்கு அமோக ஆதரவு

Posted: 11 May 2007 01:30 PM CDT

புதுடெல்லி, மே 11-

அப்துல் கலாமே மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நடத்திய சர்வேயில் 72 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிக்கலாம் வரும் ஜூலை 17-ம் தேதியுடன் முடிகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. 750 எம்.பி.க்களும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேரும் ஓட்டு போட்டு நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

நாட்டின் முக்கிய கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட உள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றி தினமும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இந்த வாரத்தில் ஒரு சர்வே நடத்தியது. கலாமே மீண்டும் ஜனாதிபதியாவதை விரும்புகிறீர்களா? களத்தில் நிறுத்தப்பட இருப்பதாக கூறப்படும் மற்ற பிரபலங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதுதான் சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகள்.

இதில் கலாமுக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் அவரை நெருங்கக்கூட முடியவில்லை. மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி ஆகியோர் தலா 7 சதவீத ஆதரவுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, பொருளாதார மேதை அமர்தியா சென்னுக்கு ஆதரவாக தலா 5 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. துணை ஜனாதிபதி ஷெகாவத்துக்கு 4 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். அரசியல்வாதி அல்லாத ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பவர்கள் 74 சதவீதம் பேர்.
இன்டர்நெட் வழியாக டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய சர்வேயில் கலாம் 53%, நாராயணமூர்த்தி 24%, ஷெகாவத் 14%, அமர்தியா சென், ஜோதிபாசு, சட்டர்ஜி தலா 3% ஓட்டு பெற்றுள்ளனர்.

இன்டர்நெட் பயன்படுத்தும் படித்த, மேல்தட்டு மக்களைவிட நடுத்தர மற்றும் ஏழை மக்களின் ஆதரவு கலாமுக்கு அதிகம் இருப்பதும் இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.

மாலை முரசு

ச:புகைப்பழக்கத்தை நிறுத்த புகை பிடியுங்க

Posted: 11 May 2007 11:23 AM CDT

ஹாங்காங் கம்பெனி ஒன்று உருவாக்கியுள்ள இ-சிகரெட் புகைப்பழக்கத்தை கைவிட உதவுகிறது. புகையிலை இல்லாத இந்த சிகரட் பேட்டரிகொண்டு செயல்படுகிறது.

இதன் விலை தோராயமாக $208.

E-smoke, to kick the habit Reuters Video

ச:ஈரன், வட கொரியா முக்கிய சந்திப்பு

Posted: 11 May 2007 10:38 AM CDT

உலக அளவில் சர்ச்சைக்குரிய நாடுகளாகக் கருதப்படும் ஈரானும் வட கொரியாவும் முக்கிய சந்திப்பில் இருநாட்டு உறவுகளையும் வளர்க்க ஒப்பாந்தம் செய்துள்ளனர்.

இரு நாடுகளும் அமெரிக்க அதிபரால் 'தீமையின் மையப்புள்ளிகள்' என வர்ணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் வடகொரியா ஈரானிடம் பெற்றுள்ள கடன் இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்குத் தடையாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

Iran, North Korea seek to boost cooperationReuters Canada, Canada
North Korea's debt to Iran obstacle for cooperation: Mottaki NewKerala.com

ச: காட்டலீனா தீவில்(Catalina Island) காட்டுத் தீ !

Posted: 11 May 2007 09:14 AM CDT

அமெரிக்காவில், கலிபோர்னியா(தெற்கு) மானிலத்தில் இருக்கும் காட்டலீனா தீவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் 4000 ஏக்கர் நிலம் சேதம். கிட்டதட்ட 3300 மக்கள் வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றபட்டார்கள்.

மேலும் படிக்க

http://abclocal.go.com/kabc/story?section=local&id=5295110

ச:சிடி விவகாரம் - பாஜக கண்டனம்

Posted: 11 May 2007 09:14 AM CDT

உ.பி தேர்தல் பிரச்சாரத்தின்போது பஜக சார்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய சிடி வெளியீட்டை பாஜக கண்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதற்குஇணங்க இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிடி பாஜகவின் அதிகாரபூர்வ பிரச்சார சாதனமாக வெளியிடப்படவில்லை என்றும் கட்சியின் அடிமட்டத் தலைவர்களே இதை வெளியிட்டுள்ளனர் என்றும் பாஜக தெரிவித்தது.

BJP condemns 'communal' CDCNN-IBN, India
BJP studying EC's order Sahara Samay
EC asks BJP to condemn poll CD

ச:பஸ் கங்கையில் கவிழ்ந்தது - 22பேர் மரணம்

Posted: 11 May 2007 09:06 AM CDT

பாட்னா சென்றுகொண்டிருந்த பேருந்து பிகாரின் வைஷலியில் இருக்கும் மகாத்மாகாந்தி பாலத்திலிருந்து கங்கையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பேர் பலியாயினர்.


22 killed as bus falls off bridge over GangaHindu
15 killed after bus falls off bridge Hindustan Times
22 die as bus plunges into Ganga India eNews.com

ச:முதல்வர் பொன்விழா 27 கைதிகள் விடுதலை

Posted: 11 May 2007 08:54 AM CDT

முதல்வர் கலைஞரின் சட்டசபை பொன்விஆவை முன்னிட்டு தமிழகமெங்குமுள்ள சிறைகளிலிருந்து ஒரு பெண் உட்பட்ட 27 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 27 பேரும் மே 11ல் 14 வருடம் சிறைத்தண்டனை முடித்தவர்கள். விதிகளின்படி ஆளுநரின் ஒப்புதலுடன் விடுவிக்கப்பட்டனர்.

தினமலர்

கலைஞரின் பொன்விழா கொண்டாட்டம்

Posted: 11 May 2007 07:36 AM CDT

நன்றி தினமலர் நாளிதழிற்குசரித்திரங்கள் கண்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தன்னகத்தே கொண்டிருக்கும் மாநிலசட்டசபையின் வரலாற்றில் புதிய சாதனைபடைத்து சரித்திரம் எழுதப்படுவதை கண்டது. தமிழக முதல்வரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஐம்பது ஆண்டுகாலம் சட்டசபையில் பணியாற்றியமையை பாராட்டும் விதமாக நடந்த பொன்விழாவில் ஆளுநர் திரு பர்னாலா அவரின் அவைப் பணி மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்வதை புகழ்ந்துரைத்தார்.

எதிர்கட்சிகளான அதிமுகவும் மதிமுகவும் புறக்கணித்த இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அவை உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.
ஆளுநரை தவிர பாட்டாளி மக்கள் கட்சியின் ஜிகே மணி, சிபிஎம்மின் கோவிந்தசாமி,சிபிஐயின் சிவபுண்ணியம், மற்றும் டிபிஐ யின் கே செல்வம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

மேலும்..The Hindu News Update Service

படம் நன்றி; தினமலர் நாளிதழ் இணையப் பதிப்பு

ஊழலை ஒழிப்பேன்: மாயாவதி

Posted: 11 May 2007 08:12 AM CDT

பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உபியில் தனியாட்சி காணும் மாயாவதி தனது அதிரடி வெற்றி தன்னுடைய கட்சியின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுவதாக பத்திரிகையாளர் கூட்டமொன்றில் கூறினார். தனக்கு பெருமளவில் வாக்களித்த 'மேல்சாதி'யினருக்கும் முஸ்லிம்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது வழிகாட்டியான கான்சிராமையும் அண்ணல் அம்பேத்கரையும் நினைவு கூர்ந்த அவர், தனது ஆட்சி ஊழல், குற்றம் இவற்றை ஒழித்து வளர்ச்சிக்கு அடிகோலும் எனத் தெரிவித்தார்.


Mayawati promises to root out corruption in UP - Daily News & Analysis

அமர்சிங்கின் நண்பர்கள் வருமானவரி ரைய்டில்

Posted: 11 May 2007 07:57 AM CDT

உபி தேர்தல்முடிவுகள் வெளியாவதற்கு முன்பே சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர் அமர்சிங்கின் நண்பர்களாகக் கருதப்படும் அசோக் சதுர்வேதியின் Flex நிறுவனம், வினய் மாலூ வின் HFCL நிறுவனங்களின் மீது வருமானத்துறை தேடுதல்கள் நடத்தப் பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...The Times of India

ஒரிஸா சாலைவிபத்து: 10 பேர் மரணம்

Posted: 11 May 2007 07:48 AM CDT

ஒரிசாவின் மயூர்கஞ்ச் மாவட்டத்தில் இன்று ஒரு ஜீப் வண்டியும் எண்ணெய் லாரியும் மோதிக் கொண்டதில் பத்து பேர்வரை மரணமடைதுள்ளனர், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

Road accident kills 10 in Orissa- Hindustan Times

உ.பி தேர்தல்: நாங்கள் தோற்றதிற்கு தேர்தல் ஆணையமே காரணம்: முலாயம்

Posted: 11 May 2007 07:11 AM CDT

உத்திரப்பிரதேச முதல்வர் முலாயம்சிங் யாதவ் தங்களின் தோல்விக்கு தேர்தல் ஆணையத்தின் ஆட்சித் தலையீடே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் ஒரு இணை அரசை நடத்தியதற்கு காங்கிரஸ், பிஜேபியும் உடன் போனதாகவும் கூறியுள்ளார். ஆளுநரிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை கொடுத்தபின் நிருபர்களிடம் பேசும்போது இது தவறான ஜனநாயகப் போக்கு என்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து அனைத்துக் கட்சி கூட்டமொன்றை கூட்டப் போவதாகவும் தெரிவித்தார்.


DNA - India - Mulayam holds EC responsible for Samajwadi Party defeat in UP polls - Daily News & Analysis

உ.பி தேர்தல் முடிவுகள் - சற்றுமுன்

Posted: 11 May 2007 02:11 AM CDT

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் எல்லா கணிப்புகளையும் தாண்டி பிஎஸ்பி கட்சி தனியாகவே ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. சமீபத்திய நிலவரங்களின்படி
அந்தக் கட்சி தனித்தே ஆட்சி அமைக்க முடியுமெனத் தோன்றுகிறது. 202 இடங்களில் அந்தக் கட்சி முன்னணியில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி 89 இடங்களிலும், பிஜேபி 58 இடங்களிலும் ம்ட்டுமே முன்னணி வகிக்க காங்கிரஸ் 25 இடங்களோடு திருப்திப்பட வேண்டியிருக்கும். மாயாவதியின் வீட்டின் முன்னால ஓரிருவரைத் தவிர பெரிய ஆர்ப்பாட்டங்க்ள் ஏதுமில்லை. முழுமையான முடிவுகள் தெரிந்த பின்னரே வேட்பாளர்கள் வெளியில் வந்து கொண்டாட்டங்களில் ஈடுப்டவேண்டும் என்று கட்சித்தலைவர் மாயாவதியிடமிருந்து கடுமையான உத்தரவு வந்ததே காரணமாம்.

கொசுறு தகவல்கள்:

** முலாயம் சிங் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்
இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து தனது பத்விவிலகல் கடிதத்தை வழங்குவார்

** நாளை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

** தேவைப்பட்டால் வெளியில் இருந்த் ஆதரவு தர காங்கிரஸ் முடிவு

** மாயாவதிக்கு யாருடைய ஆதர்வும் தேவையில்லை - சுஷ்மா ஸ்வராஜ் (பிஜேபி)

Links for 2007-05-10 [del.icio.us]

Posted: 11 May 2007 12:00 AM CDT

ச: உ.பி., தேர்தல் முடிவு : முன்னணி நிலவரம

Posted: 10 May 2007 11:54 PM CDT

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தன. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 7 மணி முதல் தொடங்கியது.

தற்போதைய முன்னணி நிலவரம்: பகுஜன் சமாஜ் 183 ; சமாஜ்வாடி 93 ; பா.ஜ.க., 64 ; காங்கிரஸ் 31 ; இதர கட்சிகள் 29 .

இன்று மாலைக்குள் முழு விபரமும் வெளியாகிவிடும்.

Thursday, May 10, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

புழல் சிறை அருகே 65 வீடுகள் சாம்பல்

Posted: 10 May 2007 05:22 PM CDT

புழல் சிறைச்சாலை பின்புறம் உள்ள திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் 65 வீடுகள் நேற்று பிற்பகல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் ஒரு பெண் மயங்கிச் சாய்ந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசைகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகள் உள்ளன.

தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ரன்வீர் பிரசாத், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மற்றும் அதிகாரிகள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி பொன்விழா

Posted: 10 May 2007 05:10 PM CDT

சென்னை, மே 11: முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன் விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கருணாநிதியை பாராட்டுகிறார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதை பாராட்டி, "சட்டப் பேரவையில் கருணாநிதி பொன் விழா" சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

முதல் நிகழ்ச்சியாக, சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியை ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் பொன் விழா கூட்டம் நடக்கிறது.

இதற்காக மாநகரில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் லத்திகா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விழாவுக்கு 10 ஆயிரம் மாநகர போலீசாரும், 3 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முக்கிய விருந்தினர்களின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்தில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும்.

அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்கள். முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். பொன்விழா மலர், விழாவில் வெளியிடப்படுகிறது.

விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு பேரவையில், மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு, முதல்வரை வாழ்த்தி பேசுகிறார்.

Dinakaran

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

Posted: 10 May 2007 03:50 PM CDT

கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்

சீமான்-திரைப்பட இயக்குநர்

சிம்பு-திரைப்பட நடிகர்

"ஜெயம்' ரவி-திரைப்பட நடிகர்

ஜீவா-திரைப்பட நடிகர்

விஷால்-திரைப்பட நடிகர்

த்ரிஷா-திரைப்பட நடிகை

நவ்யா நாயர்-திரைப்பட நடிகை

கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்

ஆர்த்தி-நகைச்சுவை நடிகை

வினித்-குணசித்திர நடிகர்

பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்

வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்

கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்

சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்

மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்

கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்

சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்

ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்

சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்

டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்

இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்

இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்

மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்

கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்

திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்

சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்

திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்

ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்

கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்

பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்

தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்

வி.மூர்த்தி-நாடக நடிகர்

தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை

வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை

சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை

பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்

நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்

கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்

இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்

வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்

மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்

திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்

பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி

எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்

விட்டல்-திரைப்பட எடிட்டர்

நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்

அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்

கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்

ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்

டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்

டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்

சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்

விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா

வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்

போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்

மௌனிகா-சின்னத்திரை நடிகை

தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை

டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்

அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

ச:தூக்கிலிடப்பட்டவரின் வித்தியாசமான கடைசி ஆசை

Posted: 10 May 2007 02:12 PM CDT

அமெரிக்காவில் நாஷ்வில், டென்னிசியில் தூக்கிலிடப்பட்ட பிலிப் ஒர்க்மேன் கடைசி ஆசையாக தனக்கு வழங்கப்பட்ட உணவுத் தேர்வுக்குப் பதில் வெளியே ஏழை யாருக்கேனும் ஒரு வெஜிட்டேரியன் பீசாவை வழங்குமாறு சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் ஆசையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்துவிட்டனர்.

ஒர்க்மேனின் விருப்பத்தை அறிந்த பொதுமக்கள் அங்குள்ள யூனியன் ரெஸ்க்யூ மிஷன் என்னும் சேவை அமைப்புக்கு சுமார் 170 பிசாக்களை நன்கொடையாக அனுப்பினர்.

Executed man gets last meal wish after he dies

நேப்பாளத்துக்கு எண்ணெய் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுத்தியது

Posted: 10 May 2007 01:50 PM CDT

இந்திய எண்ணெய் நிறுவனம் கடன் அடைக்கத் தவறிய நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய் வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து அங்கே பெற்றோல் தட்டுப்பாடு பரவலாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பட்ட 90 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையிலான கடனை அடைக்க முடியாத நிலையில் தமது நிறுவனம் உள்ளதாக நேப்பாள அரச எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் பேசிய நிர்வாகி தெரிவித்தார். நேப்பாள பெற்றோல் நிலையங்களுக்கான சப்ளை 60 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பல நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டது.

இமயமலைத் தேசமான நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய்களை வழங்கி வருகின்ற ஒரு ஒரே நாடு இந்தியா மட்டுமே.

BBC NEWS | South Asia | Nepal hit hard by India oil cuts

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்காத வரை உதவி கிடையாது: ஐரோப்பிய கமிஷன்

Posted: 10 May 2007 01:46 PM CDT

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்காத வரை பிஜிக்கு நிதியுதவி கிடையாது என பசிபிக் நாடுகளுக்கான ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதி ராபர்டோ ரிடால்பி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிஜிக்கு நிதியுதவி அளிப்பதென்பது அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அந் நாட்டு இடைக்கால ராணுவ அரசு எடுக்கும் நடவடிக்கையையும், அங்கு மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமையும் என்றார்.

Dinamani

அஸ்லன்ஷா ஹாக்கி: இந்தியா ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 10 May 2007 01:41 PM CDT

இபோ (மலேசியா), மே 10: 16-வது அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

இவ் வெற்றி மூலம் மொத்தம் 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும் "ஏ' பிரிவில் தலா 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தன. இதையடுத்து, கோல் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுடன் மோதல்: வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவுடன் இந்தியா விளையாடுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கொரியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

கொரியா வெற்றி: செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, புதன்கிழமை தொடர்ந்த ஆட்டத்தில் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானின் சவாலை முறியடித்தது.

Dinamani

காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை அமைச்சர் தகவல்

Posted: 10 May 2007 01:39 PM CDT

புதுதில்லி, மே 10: 2010-ம் ஆண்டு இந்தியா நடத்த உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இதில், ஸ்டேடியம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்காக இந்திய விளையாட்டு ஆணையம் மதிப்பிட்டுள்ள ரூ. 1000 கோடியும் அடங்கும் என மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப் போட்டிக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்காக மட்டும் நடப்பு ஆண்டில் ரூ. 300 கோடி தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த 300 கோடி வீரர்களுக்கான பயிற்சிக்கு மட்டுமே தவிர, கட்டமைப்பு வசதிகள் எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dinamani

ச:டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி

Posted: 10 May 2007 11:50 AM CDT

மருத்துவப் படிப்பின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் கட்டாயப் பணியாற்ற வகை செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி எம்.எஸ்.என் தமிழ்

Links for 2007-05-09 [del.icio.us]

Posted: 10 May 2007 12:00 AM CDT

கொல்கொத்தாவில் இரயிலோட்டம் நிறுத்தம்

Posted: 05 May 2007 06:08 AM CDT

மஜிஸ்ட்ரேட் ஒருவரை வாகனாரையில் ஏற்றாததைக் குறித்த எழுந்த சர்ச்சையில் சம்பந்தப் பட்ட வாகனஓட்டி(Motorman)யையும் வாகனகாவலரை(Guard)யும்கைது செய்ய ஆணையிட மற்ற இரயில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து மாநகர இரயில் போக்குவரத்து சியால்தா டிவிஷனின் மூன்று பக்கங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. இரயில்வே மேலதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி The Hindu News Update Service

"பந்த்' நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு திருப்பி வழங்கிய கட்டணம் ரூ.7.80 லட்சம்

Posted: 04 Apr 2007 09:51 AM CDT

சென்னை, ஏப். 4: தமிழகத்தில் "பந்த்' நடைபெற்ற மார்ச் 31-ம் தேதி மட்டும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையாக 3,905 பயணிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டது.

பந்த் நாளுக்கு முந்தைய நாளான மார்ச் 30-ம் தேதி மட்டும் முன்பதிவு ரத்து செய்த 3,148 பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத் தொகையாக ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 628 திருப்பி வழங்கப்பட்டது. இந்த இருநாள்களில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கட்டண வசூலில் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 888 இழப்பு ஏற்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை: ரயில்வே புது உத்தரவு

Posted: 04 Apr 2007 09:58 AM CDT

சென்னை, ஏப். 4: நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை

Posted: 28 Mar 2007 04:31 PM CDT

வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.

முழு ஸ்கோர்கார்ட்

சற்றுமுன்: திரைப்படத்தால் விபரீதம் : பள்ளிமானவன் தீக்குளிப்பு

Posted: 22 Mar 2007 03:09 AM CDT

சேலம் நகரில் பள்ளி மாணவன் தீக்குளித்து இறந்தான். அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் சாகசம் செய்ய நினைத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

கமலக்கண்ணன்(13) தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். செவ்வாய் கிழமை வீட்டில் தனியே இருந்த அவன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அலறியபடி வெள்யில் ஓடி வந்துள்ளான், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கமலக்கண்ணன் இறந்தான். அண்மையில் வெளியான ஆங்கிலத்திரைபடத்தில் ஒருவர் தீப்பிடித்த உடலோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்போல தானும் செய்ய வேண்டும் என்று கமலக்கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளான்.

நன்றி :-தினமணி

சற்றுமுன்:72 பேர் மரணம் - மொசாம்பிக் ஆயுதக் கிடங்கு வெடிப்பு

Posted: 23 Mar 2007 05:15 AM CDT

மொசாம்பிக்கின் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடிப்புகள், தீயில் 72 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகர் கூறினார்.300 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சாவு எண்ணிக்கை உயரலாம் என்றும் மேலும் அவர் கூறினார். கிடங்கிலிருந்த இராணுவத்தினரும் அருகாமையில் அமைந்த சேரிவாசிகளும் பாதிக்கப் பட்டவர்களாகும்.

72 Die in Mozambique Weapons Depot Blast - washingtonpost.com

சற்றுமுன்: சென்னையில் தீவிபத்து

Posted: 02 Apr 2007 06:38 AM CDT

சென்னை ஏப்ரல் 2, 2007
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மூலம் தீப்பற்றிக் கொண்டது. தியேட்டர் வளாகத்திலிருந்த உமா ஆப்செட் ப்ரின்டர்ஸின் குடோனில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தார் வந்து தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏதுவுமில்லை.

-- சற்றுமுன்னுக்காக லக்கிலுக்

தமிழ்நாடு: RDX கொண்டுசென்ற கார் வெடித்ததில் 20 பேர் பலி

Posted: 07 Apr 2007 05:22 AM CDT

விழுப்புரம் அருகே செந்தூர் கிராமம் அருகே ஆர்டிஎக்ஸ் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகிக்கப் படும் காரொன்று தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்து சிதறி அந்த இடத்தில் புளி பறித்துக் கொண்டிருந்த பத்துபேரும் அதே இடத்திலும் மருத்துவமனையில் பத்துபேருமாக இறந்தனர்். சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 இலட்சம் கொடுக்கவும் பாதிக்கப் பட்ட வீடுகளை கட்டித்தரவும் மாநில அரசு ஆவண செய்யும் என கூறினார்.


மேல் விவரங்களுக்கு..Zee News - 20 killed as explosives-laden car blows up in TN

சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி

Posted: 03 Apr 2007 07:05 PM CDT

"கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை" -- சச்சின் ஆதங்கம்

முழு விவரங்களுக்கு

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

Posted: 10 Apr 2007 04:11 AM CDT

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.

தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

Posted: 29 Mar 2007 03:02 AM CDT

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி

Posted: 30 Mar 2007 05:55 PM CDT


புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- தினமலர்

பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர் உ.பி. தேர்தலைப் புறக்கணிப்பு

Posted: 04 May 2007 12:58 PM CDT

வாராணசி, மே 4: மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர், வியாழக்கிழமை நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை 'குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை விரைவில் நிறைவேற்றவேண்டும்' என்று கோரி புறக்கணித்தனர்.

பிஸ்மில்லா கான் மறைந்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி, அவரது பெயரில் கலாசார அகாதெமி, உஸ்தாத் நினைவரங்கம் அமைக்க நிதி என பல்வேறு வாக்குறுதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டன. அவர் மறைந்து 8 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகளில் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று பிஸ்மில்லா கானின் மகன் நய்யார் ஹுசைன் தெரிவித்தார்.

'குடும்பமே வறுமையில் வாடுகிறது. அதை சமாளிக்க எங்களுக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்றார் ஹுசைன்.

Dinamani

ச:பெண்கள் இரவில் வேலை செய்யத் தடை - கர்நாடகா சட்டம்

Posted: 10 May 2007 10:54 AM CDT

பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யச்சொல்வதை தடைசெய்ய கர்நாடகாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் இயற்றப்பட்ட கர்நாடக கடைகள் மற்றும் வியாபாரக்கூடங்கள் சட்டம் திருத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்யச் சொல்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 10,000 முதல் 20,000 வரை அபராதம் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பல மகளிர் அமைப்புக்கள் இந்த திருத்தம் பெண்களை பாகுபடுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கணினித் துறைக்கு(IT/BT) இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bangalore: Women barred from night shift in Karnataka Bellevision, India
Karnataka notifies law banning women in night shiftsHindu, India
Karnataka notifies law banning night shift for womenTimes of India, India

இதுகுறித்த விமர்சனக் கட்டுரை
Is there a dark side to the Night Work Ban? indiainteracts.com

ச:கடவுள்களின் ஆபாசப் படம் வரைந்த மாணவர் கைது

Posted: 10 May 2007 11:15 AM CDT

வதோதராவில் எம் எஸ் பல்கலைக்கழகத்தில் நுட்பக் கலை பயின்றுவரும் மாணவர் சந்திரமோகன் இந்து மற்றும் கிறீத்துவக் கடவுள்களின் படங்களை ஆபாசமாக வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜகவினர் பல்கலைக்கழக வளாக்கத்தில் புகுந்து காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த படங்களை சேதப்படுத்தினர். மேலும் போலீசில் வழக்கு பதிவு செய்தனர்.

சர்ச்சைக்குரிய படங்கள் பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்களின் பார்வைக்கே வைக்கப்பட்டிருந்தன என்றும் பல்கலையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Student held for painting gods in 'obscene postures'Times of India, India
Art college exhibition attacked by VHPNDTV.com, India
Hindu brigade damage paintings in VadodaraNDTV.com, India
Artist arrested for 'obscene' paintingsTimes Now.tv, India

''This was an internal assessment of the students. The teachers evaluate their works and are not open to the general public. We will inquire how the outsiders came in,'' said Shivji Panikar, Dean, Faculty of Fine Arts.

''They are playing with the sentiments of the Hindu community by showing such obscene paintings of our Gods and Goddesses,'' said Neeraj Jain, Leader, BJP.

பாப் உல்மர் கொலை: முஷ்டாக் அஹ்மத் விஷம் கலந்த மதுபோத்தல்களை கொடுத்தார் ?

Posted: 10 May 2007 10:21 AM CDT

பாப் உல்மர் கொலைவழக்கில் புதுத் திருப்பமாக பாக்கிஸ்தான் தொலைக்காட்சியொன்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த இரண்டு சாம்பேன் மது போத்தல்களை அணியின் பௌலிங் கோச்சான முஷ்டாக் அஹ்மது உல்மருக்கு கைமாற்றியதாக கூறியது.

இதுபற்றிய செய்தி துணுக்கு: MSN INDIA - Champagne bottles passed on to Woolmer by Ahmed: TV channel