Thursday, May 10, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

புழல் சிறை அருகே 65 வீடுகள் சாம்பல்

Posted: 10 May 2007 05:22 PM CDT

புழல் சிறைச்சாலை பின்புறம் உள்ள திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் 65 வீடுகள் நேற்று பிற்பகல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் ஒரு பெண் மயங்கிச் சாய்ந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசைகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகள் உள்ளன.

தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ரன்வீர் பிரசாத், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மற்றும் அதிகாரிகள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி பொன்விழா

Posted: 10 May 2007 05:10 PM CDT

சென்னை, மே 11: முதல்வர் கருணாநிதியின் சட்டப் பேரவை பொன் விழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கருணாநிதியை பாராட்டுகிறார்கள்.

தமிழக முதல்வர் கருணாநிதி, சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதை பாராட்டி, "சட்டப் பேரவையில் கருணாநிதி பொன் விழா" சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு சென்னை நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.

முதல் நிகழ்ச்சியாக, சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியை ஆளுநர் பர்னாலா மற்றும் சட்டமன்றக் கட்சி தலைவர்கள் பாராட்டி பேசுகிறார்கள். மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் பொன் விழா கூட்டம் நடக்கிறது.

இதற்காக மாநகரில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என போலீஸ் கமிஷனர் லத்திகா தெரிவித்துள்ளார். மேலும், நகரின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விழாவுக்கு 10 ஆயிரம் மாநகர போலீசாரும், 3 ஆயிரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

முக்கிய விருந்தினர்களின் வாகன அணிவகுப்பு செல்லும் நேரத்தில், ஒரு சில சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்படும்.

அமைச்சர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், மத்திய அமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், ராம்விலாஸ் பாஸ்வான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் மற்றும் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகிறார்கள். முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றுகிறார். பொன்விழா மலர், விழாவில் வெளியிடப்படுகிறது.

விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக, நாளை காலை 11 மணிக்கு பேரவையில், மக்களவை தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கலந்து கொண்டு, முதல்வரை வாழ்த்தி பேசுகிறார்.

Dinakaran

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்: பாலகுமாரன், இயக்குநர் பாலா, சிம்பு, த்ரிஷா உள்பட 60 பேருக்கு விருது அறிவிப்பு

Posted: 10 May 2007 03:50 PM CDT

கோவைத் தம்பி-திரைப்படத் தயாரிப்பாளர்

சீமான்-திரைப்பட இயக்குநர்

சிம்பு-திரைப்பட நடிகர்

"ஜெயம்' ரவி-திரைப்பட நடிகர்

ஜீவா-திரைப்பட நடிகர்

விஷால்-திரைப்பட நடிகர்

த்ரிஷா-திரைப்பட நடிகை

நவ்யா நாயர்-திரைப்பட நடிகை

கஞ்சா கருப்பு-நகைச்சுவை நடிகர்

ஆர்த்தி-நகைச்சுவை நடிகை

வினித்-குணசித்திர நடிகர்

பாலகுமாரன்-இயற்றமிழ் கலைஞர்

வண்ணதாசன்-இயற்றமிழ் கலைஞர்

கவிஞர் கலாப்பிரியா-இயற்றமிழ் கலைஞர்

சுப.வீரபாண்டியன்-இலக்கியப் பேச்சாளர்

மரபின் மைந்தன் முத்தையா-இலக்கியப் பேச்சாளர்

கீதா ராஜசேகர்-இசை ஆசிரியர்

சஞ்சய் சுப்ரமணியம்-குரலிசைக் கலைஞர்

ஸ்ரீவத்சவா-மிருதங்கக் கலைஞர்

சரஸ்வதி ராஜகோபாலன்-வீணைக் கலைஞர்

டாக்டர் இரா.செல்வகணபதி-சமயச் சொற்பொழிவாளர்

இறையன்பன் குத்தூஸ்-இறையருட்பாடகர்

இஞ்சிக்குடி சுப்ரமணியன்-நாதஸ்வர கலைஞர்

மலைக்கோட்டை எஸ்.சுப்ரமணியன்-தவில் கலைஞர்

கிரிஜா பக்கிரிசாமி-பரதநாட்டிய ஆசிரியர்

திவ்யா கஸ்தூரி-பரதநாட்டிய கலைஞர்

சிந்தூரி-பரதநாட்டிய கலைஞர்

திருநங்கை நர்த்தகி நடராஜ்-நாட்டிய நாடகக் கலைஞர்

ஆர்.முத்தரசி-நாட்டிய நாடகக் கலைஞர்

கவிஞர் இன்குலாப்-நாடக ஆசிரியர்

பேராசிரியர் இரா.ராஜு-நவீன நாடக இயக்குநர்

தங்கராஜ் என்ற எம்எல்ஏ தங்கராஜ்-நாடக நடிகர்

வி.மூர்த்தி-நாடக நடிகர்

தேவிப்பிரியா என்ற ரமணதேவி-நாடக நடிகை

வி.ஆர்.திலகம்-பழம்பெரும் நாடக நடிகை

சி.ஐ.டி.சகுந்தலா-பழம்பெரும் திரைப்பட நடிகை

பா.விஜய்-திரைப்பட பாடலாசிரியர்

நா.முத்துக்குமார்-திரைப்பட பாடலாசிரியர்

கபிலன்-திரைப்பட பாடலாசிரியர்

இயக்குநர் பாலா-திரைப்பட கதாசிரியர்

வித்யாசாகர்-திரைப்பட இசையமைப்பாளர்

மது பாலகிருஷ்ணன்-திரைப்பட பின்னணி பாடகர்

திப்பு-திரைப்பட பின்னணி பாடகர்

பாம்பே ஜெயஸ்ரீ-திரைப்பட பின்னணி பாடகி

எம்.வி.பன்னீர்செல்வம்-திரைப்பட ஒளிப்பதிவாளர்

விட்டல்-திரைப்பட எடிட்டர்

நேஷனல் செல்லையா-திரைப்பட புகைப்படக் கலைஞர்

அதிவீர பாண்டியன்-திரைப்பட பத்திரிகை ஆசிரியர்

கே.அம்மச்சி விராமதி-நாட்டுப்புற இசைக் கலைஞர்

ஆக்காட்டி ஆறுமுகம்-நாட்டுப்புற இசைக் கலைஞர்

டாக்டர் கே.ஏ.குணசேகரன்-நாட்டுப்புற இசை ஆய்வாளர்

டிராட்ஸ்கி மருது-ஓவியக் கலைஞர்

சி.ஜெ.பாஸ்கர்-சின்னத்திரை இயக்குநர்

விடுதலை-சின்னத்திரை கதை வசனகர்த்தா

வேணு அரவிந்த்-சின்னத்திரை நடிகர்

போஸ் வெங்கட்-சின்னத்திரை நடிகர்

மௌனிகா-சின்னத்திரை நடிகை

தீபா வெங்கட்-சின்னத்திரை குணச்சித்திர நடிகை

டி.ஜி.தியாகராஜன்-சின்னத்திரை தயாரிப்பாளர்

அலெக்ஸ்-தந்திரக்காட்சி கலைஞர்

ச:தூக்கிலிடப்பட்டவரின் வித்தியாசமான கடைசி ஆசை

Posted: 10 May 2007 02:12 PM CDT

அமெரிக்காவில் நாஷ்வில், டென்னிசியில் தூக்கிலிடப்பட்ட பிலிப் ஒர்க்மேன் கடைசி ஆசையாக தனக்கு வழங்கப்பட்ட உணவுத் தேர்வுக்குப் பதில் வெளியே ஏழை யாருக்கேனும் ஒரு வெஜிட்டேரியன் பீசாவை வழங்குமாறு சிறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரின் ஆசையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்துவிட்டனர்.

ஒர்க்மேனின் விருப்பத்தை அறிந்த பொதுமக்கள் அங்குள்ள யூனியன் ரெஸ்க்யூ மிஷன் என்னும் சேவை அமைப்புக்கு சுமார் 170 பிசாக்களை நன்கொடையாக அனுப்பினர்.

Executed man gets last meal wish after he dies

நேப்பாளத்துக்கு எண்ணெய் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுத்தியது

Posted: 10 May 2007 01:50 PM CDT

இந்திய எண்ணெய் நிறுவனம் கடன் அடைக்கத் தவறிய நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய் வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து அங்கே பெற்றோல் தட்டுப்பாடு பரவலாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் பட்ட 90 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையிலான கடனை அடைக்க முடியாத நிலையில் தமது நிறுவனம் உள்ளதாக நேப்பாள அரச எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் பேசிய நிர்வாகி தெரிவித்தார். நேப்பாள பெற்றோல் நிலையங்களுக்கான சப்ளை 60 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பல நிலையங்களில் பெற்றோல் தீர்ந்து விட்டது.

இமயமலைத் தேசமான நேப்பாளத்துக்கு பெற்றோலிய எண்ணெய்களை வழங்கி வருகின்ற ஒரு ஒரே நாடு இந்தியா மட்டுமே.

BBC NEWS | South Asia | Nepal hit hard by India oil cuts

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த முயற்சிக்காத வரை உதவி கிடையாது: ஐரோப்பிய கமிஷன்

Posted: 10 May 2007 01:46 PM CDT

ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்காத வரை பிஜிக்கு நிதியுதவி கிடையாது என பசிபிக் நாடுகளுக்கான ஐரோப்பிய கமிஷன் பிரதிநிதி ராபர்டோ ரிடால்பி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், பிஜிக்கு நிதியுதவி அளிப்பதென்பது அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட அந் நாட்டு இடைக்கால ராணுவ அரசு எடுக்கும் நடவடிக்கையையும், அங்கு மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதையும் பொறுத்தே அமையும் என்றார்.

Dinamani

அஸ்லன்ஷா ஹாக்கி: இந்தியா ஆர்ஜென்டீனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 10 May 2007 01:41 PM CDT

இபோ (மலேசியா), மே 10: 16-வது அஸ்லன்ஷா கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றது. மலேசியாவில் உள்ள இபோ நகரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்கடித்தது.

இவ் வெற்றி மூலம் மொத்தம் 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளும் "ஏ' பிரிவில் தலா 6 புள்ளிகளைச் சேர்த்திருந்தன. இதையடுத்து, கோல் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அரையிறுதி வாய்ப்பை இழந்தது. ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவுடன் மோதல்: வெள்ளிக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசியாவுடன் இந்தியா விளையாடுகிறது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் கொரியாவை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாடுகிறது.

கொரியா வெற்றி: செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டு, புதன்கிழமை தொடர்ந்த ஆட்டத்தில் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானின் சவாலை முறியடித்தது.

Dinamani

காமன்வெல்த் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை அமைச்சர் தகவல்

Posted: 10 May 2007 01:39 PM CDT

புதுதில்லி, மே 10: 2010-ம் ஆண்டு இந்தியா நடத்த உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 3,566 கோடி தேவை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இதில், ஸ்டேடியம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளுக்காக இந்திய விளையாட்டு ஆணையம் மதிப்பிட்டுள்ள ரூ. 1000 கோடியும் அடங்கும் என மக்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அப் போட்டிக்கு வீரர்களைத் தயார்படுத்துவதற்காக மட்டும் நடப்பு ஆண்டில் ரூ. 300 கோடி தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இந்த 300 கோடி வீரர்களுக்கான பயிற்சிக்கு மட்டுமே தவிர, கட்டமைப்பு வசதிகள் எதற்கும் பயன்படுத்தப்படமாட்டாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Dinamani

ச:டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி

Posted: 10 May 2007 11:50 AM CDT

மருத்துவப் படிப்பின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள் கிராமங்களில் கட்டாயப் பணியாற்ற வகை செய்யும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

டாக்டர் படிப்பின் ஒருபகுதியாக கிராமங்களில் கட்டாயப்பணி எம்.எஸ்.என் தமிழ்

Links for 2007-05-09 [del.icio.us]

Posted: 10 May 2007 12:00 AM CDT

கொல்கொத்தாவில் இரயிலோட்டம் நிறுத்தம்

Posted: 05 May 2007 06:08 AM CDT

மஜிஸ்ட்ரேட் ஒருவரை வாகனாரையில் ஏற்றாததைக் குறித்த எழுந்த சர்ச்சையில் சம்பந்தப் பட்ட வாகனஓட்டி(Motorman)யையும் வாகனகாவலரை(Guard)யும்கைது செய்ய ஆணையிட மற்ற இரயில் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்து மாநகர இரயில் போக்குவரத்து சியால்தா டிவிஷனின் மூன்று பக்கங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. இரயில்வே மேலதிகாரிகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி The Hindu News Update Service

"பந்த்' நாளில் முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு திருப்பி வழங்கிய கட்டணம் ரூ.7.80 லட்சம்

Posted: 04 Apr 2007 09:51 AM CDT

சென்னை, ஏப். 4: தமிழகத்தில் "பந்த்' நடைபெற்ற மார்ச் 31-ம் தேதி மட்டும் ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையாக 3,905 பயணிகளுக்கு ரூ. 7 லட்சத்து 80 ஆயிரத்து 260 திருப்பி வழங்கப்பட்டது.

பந்த் நாளுக்கு முந்தைய நாளான மார்ச் 30-ம் தேதி மட்டும் முன்பதிவு ரத்து செய்த 3,148 பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத் தொகையாக ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 628 திருப்பி வழங்கப்பட்டது. இந்த இருநாள்களில் மட்டும் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் கட்டண வசூலில் ரூ. 13 லட்சத்து 62 ஆயிரத்து 888 இழப்பு ஏற்பட்டது.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை: ரயில்வே புது உத்தரவு

Posted: 04 Apr 2007 09:58 AM CDT

சென்னை, ஏப். 4: நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் - மலிங்கா சாதனை

Posted: 28 Mar 2007 04:31 PM CDT

வெற்றி பெற நான்கு ரன்கள், கையில் ஐந்து விக்கெட்டுகள் என தெம்புடன் ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவை, தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தினறடித்தார் லஸித் மலிங்கா. இதுவரை யாரும் தொடர்ந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவில் இருந்து சுதாரித்து, எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியை தடுமாறி வென்றது தென்னாப்பிரிக்கா.

முழு ஸ்கோர்கார்ட்

சற்றுமுன்: திரைப்படத்தால் விபரீதம் : பள்ளிமானவன் தீக்குளிப்பு

Posted: 22 Mar 2007 03:09 AM CDT

சேலம் நகரில் பள்ளி மாணவன் தீக்குளித்து இறந்தான். அண்மையில் வெளிவந்த ஒரு ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் சாகசம் செய்ய நினைத்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்தது.

கமலக்கண்ணன்(13) தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிறான். செவ்வாய் கிழமை வீட்டில் தனியே இருந்த அவன், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு, அலறியபடி வெள்யில் ஓடி வந்துள்ளான், அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு கமலக்கண்ணன் இறந்தான். அண்மையில் வெளியான ஆங்கிலத்திரைபடத்தில் ஒருவர் தீப்பிடித்த உடலோடு மோட்டார் சைக்கிள் ஓட்டிவரும் காட்சி இடம்பெற்றிருக்கும். இதைப்போல தானும் செய்ய வேண்டும் என்று கமலக்கண்ணன் அடிக்கடி கூறி வந்துள்ளான்.

நன்றி :-தினமணி

சற்றுமுன்:72 பேர் மரணம் - மொசாம்பிக் ஆயுதக் கிடங்கு வெடிப்பு

Posted: 23 Mar 2007 05:15 AM CDT

மொசாம்பிக்கின் ஆயுதக் கிடங்கில் நடந்த வெடிப்புகள், தீயில் 72 பேர் மரணமடைந்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகர் கூறினார்.300 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் சாவு எண்ணிக்கை உயரலாம் என்றும் மேலும் அவர் கூறினார். கிடங்கிலிருந்த இராணுவத்தினரும் அருகாமையில் அமைந்த சேரிவாசிகளும் பாதிக்கப் பட்டவர்களாகும்.

72 Die in Mozambique Weapons Depot Blast - washingtonpost.com

சற்றுமுன்: சென்னையில் தீவிபத்து

Posted: 02 Apr 2007 06:38 AM CDT

சென்னை ஏப்ரல் 2, 2007
சென்னை அண்ணாசாலையில் இருக்கும் ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மின்கசிவு ஏற்பட்டு அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மூலம் தீப்பற்றிக் கொண்டது. தியேட்டர் வளாகத்திலிருந்த உமா ஆப்செட் ப்ரின்டர்ஸின் குடோனில் தீப்பிடித்து லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்து, தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தார் வந்து தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் ஏதுவுமில்லை.

-- சற்றுமுன்னுக்காக லக்கிலுக்

தமிழ்நாடு: RDX கொண்டுசென்ற கார் வெடித்ததில் 20 பேர் பலி

Posted: 07 Apr 2007 05:22 AM CDT

விழுப்புரம் அருகே செந்தூர் கிராமம் அருகே ஆர்டிஎக்ஸ் எடுத்துச் செல்லப்படுவதாக சந்தேகிக்கப் படும் காரொன்று தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்து சிதறி அந்த இடத்தில் புளி பறித்துக் கொண்டிருந்த பத்துபேரும் அதே இடத்திலும் மருத்துவமனையில் பத்துபேருமாக இறந்தனர்். சம்பவ இடத்திற்கு விரைந்த பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 இலட்சம் கொடுக்கவும் பாதிக்கப் பட்ட வீடுகளை கட்டித்தரவும் மாநில அரசு ஆவண செய்யும் என கூறினார்.


மேல் விவரங்களுக்கு..Zee News - 20 killed as explosives-laden car blows up in TN

சேப்பலின் விமர்சனம் குறித்து சச்சின் பேட்டி

Posted: 03 Apr 2007 07:05 PM CDT

"கடந்த பதினேழு வருடங்களாக கிரிக்கெட்டுக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். சேப்பலைப் போல் , இதுவரை எந்த ஒரு கோச்சும் என் நடத்தை சரியில்லை என்று சொன்னதில்லை" -- சச்சின் ஆதங்கம்

முழு விவரங்களுக்கு

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

Posted: 10 Apr 2007 04:11 AM CDT

ரூ. 2 கோடி சந்தன கட்டைகள் கடத்தல்: துப்பாக்கியுடன் 31 பேர் கும்பல் கைது

சேலம் மாவட்டம் ஏற்காடு வசம்பாடியில் உள்ள எஸ்டேட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் 2 மினி லாரி மற்றும் டாடாசுமோ காரில் 35 பேர் கொண்ட கும்பல் வந்து காவலாளி பழனியை சரமாரியாக அடித்து உதைத்து கட்டிப்போட்ட பின்னர் குடோனில் சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக் கப்பட்டு இருந்த உயர்ரக சந்தன கட்டைகளை2 லாரிகளில் ஏற்றி கடத்தினர்.

தகவல் அறிந்து சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திர சேகரன் தலைமையில் இன்ஸ் பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணி, மாவட்ட வன அலுவலர் பாரதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளை அடிக்கப்பட்ட சந்தன மரக்கட்டைகளுடன் வந்த 2 மினி லாரிகளையும் மடக்கினர். அதை பின்தொடர்ந்து வந்தடாடாசுமோ காரையும் சுற்றி வளைத்தனர். கொள்ளை கும்பலை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் தப்பி சென்றுவிட்டனர்.

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

Posted: 29 Mar 2007 03:02 AM CDT

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி

Posted: 30 Mar 2007 05:55 PM CDT


புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- தினமலர்

பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர் உ.பி. தேர்தலைப் புறக்கணிப்பு

Posted: 04 May 2007 12:58 PM CDT

வாராணசி, மே 4: மறைந்த ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானின் குடும்பத்தினர், வியாழக்கிழமை நடந்த உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலை 'குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை விரைவில் நிறைவேற்றவேண்டும்' என்று கோரி புறக்கணித்தனர்.

பிஸ்மில்லா கான் மறைந்தவுடன் அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி, அவரது பெயரில் கலாசார அகாதெமி, உஸ்தாத் நினைவரங்கம் அமைக்க நிதி என பல்வேறு வாக்குறுதிகள் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டன. அவர் மறைந்து 8 மாதங்கள் ஆன பிறகும் வாக்குறுதிகளில் பல இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று பிஸ்மில்லா கானின் மகன் நய்யார் ஹுசைன் தெரிவித்தார்.

'குடும்பமே வறுமையில் வாடுகிறது. அதை சமாளிக்க எங்களுக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்றார் ஹுசைன்.

Dinamani

ச:பெண்கள் இரவில் வேலை செய்யத் தடை - கர்நாடகா சட்டம்

Posted: 10 May 2007 10:54 AM CDT

பெண்களை இரவு 8 மணிக்கு மேல் வேலை செய்யச்சொல்வதை தடைசெய்ய கர்நாடகாவில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 1961ம் ஆண்டில் இயற்றப்பட்ட கர்நாடக கடைகள் மற்றும் வியாபாரக்கூடங்கள் சட்டம் திருத்தப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் பெண்களை வேலைசெய்யச் சொல்பவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ 10,000 முதல் 20,000 வரை அபராதம் விதிக்க வகைசெய்யப்பட்டுள்ளது.

பல மகளிர் அமைப்புக்கள் இந்த திருத்தம் பெண்களை பாகுபடுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கணினித் துறைக்கு(IT/BT) இந்த சட்ட திருத்தத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bangalore: Women barred from night shift in Karnataka Bellevision, India
Karnataka notifies law banning women in night shiftsHindu, India
Karnataka notifies law banning night shift for womenTimes of India, India

இதுகுறித்த விமர்சனக் கட்டுரை
Is there a dark side to the Night Work Ban? indiainteracts.com

ச:கடவுள்களின் ஆபாசப் படம் வரைந்த மாணவர் கைது

Posted: 10 May 2007 11:15 AM CDT

வதோதராவில் எம் எஸ் பல்கலைக்கழகத்தில் நுட்பக் கலை பயின்றுவரும் மாணவர் சந்திரமோகன் இந்து மற்றும் கிறீத்துவக் கடவுள்களின் படங்களை ஆபாசமாக வரைந்ததற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜகவினர் பல்கலைக்கழக வளாக்கத்தில் புகுந்து காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்த படங்களை சேதப்படுத்தினர். மேலும் போலீசில் வழக்கு பதிவு செய்தனர்.

சர்ச்சைக்குரிய படங்கள் பொதுமக்களின் பார்வையில் வைக்கப்படவில்லை என்றும் ஆசிரியர்களின் பார்வைக்கே வைக்கப்பட்டிருந்தன என்றும் பல்கலையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Student held for painting gods in 'obscene postures'Times of India, India
Art college exhibition attacked by VHPNDTV.com, India
Hindu brigade damage paintings in VadodaraNDTV.com, India
Artist arrested for 'obscene' paintingsTimes Now.tv, India

''This was an internal assessment of the students. The teachers evaluate their works and are not open to the general public. We will inquire how the outsiders came in,'' said Shivji Panikar, Dean, Faculty of Fine Arts.

''They are playing with the sentiments of the Hindu community by showing such obscene paintings of our Gods and Goddesses,'' said Neeraj Jain, Leader, BJP.

பாப் உல்மர் கொலை: முஷ்டாக் அஹ்மத் விஷம் கலந்த மதுபோத்தல்களை கொடுத்தார் ?

Posted: 10 May 2007 10:21 AM CDT

பாப் உல்மர் கொலைவழக்கில் புதுத் திருப்பமாக பாக்கிஸ்தான் தொலைக்காட்சியொன்று தன்னிடம் கொடுக்கப்பட்ட நஞ்சு கலந்த இரண்டு சாம்பேன் மது போத்தல்களை அணியின் பௌலிங் கோச்சான முஷ்டாக் அஹ்மது உல்மருக்கு கைமாற்றியதாக கூறியது.

இதுபற்றிய செய்தி துணுக்கு: MSN INDIA - Champagne bottles passed on to Woolmer by Ahmed: TV channel

Wednesday, May 9, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ச: தினகரன் பத்திரிக்கை தாக்குதல்- சன் செய்திகள் வீடியோ

Posted: 09 May 2007 06:59 PM CDT

அடுத்த குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி: சோனியா, மன்மோகன் விருப்பம்

Posted: 09 May 2007 05:30 PM CDT

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி அடுத்த குடியரசுத் தலைவராக வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கான போட்டியில் பின்தங்கிய பிரணப், இந்த முறை குடியரசுத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். எனினும், இடதுசாரி கட்சிகள் சம்மதித்தால் மட்டுமே அவர் வெற்றிபெற முடியும். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, எதையும் உறுதியாகக் கூற முடியும்.

"விசா' விண்ணப்பங்களை "வடிகட்ட' அமெரிக்கத் தூதரகம் முடிவு

Posted: 09 May 2007 05:24 PM CDT

வெளிநாடுகளுக்கு ஆள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளது; அதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட பங்கு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டதால் அமெரிக்கத் தூதரகம் மட்டும் அல்ல எல்லா நாட்டுத் தூதரகங்களுமே கலவரம் அடைந்திருக்கின்றன. எனவே விசா கோரி விண்ணப்பிக்கிறவர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கத் திணறும் அளவுக்கு விண்ணப்பங்கள் பலமடங்காகப் பெருகிவிட்டன. கடந்த மாதம் விசா கோரி விண்ணப்பித்துவிட்டு தில்லியிலேயே தங்கியவர்கள் செய்த செலவு மட்டும் ரூ.95 லட்சம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர்.

Dinamani

ச:2007ல் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை

Posted: 09 May 2007 04:02 PM CDT

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இந்தியாவிலும் கால்பதிக்கவிருக்கிறது. 2007 முடிவுக்குள் டெல்லி அல்லத்து மும்பையில் முதல் இந்திய ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை துவங்கப்படும் என ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.


Starbucks to open first outlet in India by 2007-end

ச:'அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்' - ஜெயலலிதா

Posted: 09 May 2007 01:09 PM CDT

சட்ட ஒழுங்கை காக்கத் தவறியதாற்காக தி.மு.க அரசு கலைக்கப்படவேண்டும் என ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளார். மதுரையில் நடந்த தினகரன் அலுவலகத் தாக்குதலின்போது போலீஸ் பாராமுகமாயிருந்ததைக் கண்டித்த அவர் கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.

'தினகரன் எல்லாக் கட்சிகளுக்கும் பிரச்சனையை உருவாக்கிவருகிறது. முதலில் அதிமுகவிற்கு அடுத்த வாரிசு யார் என குழப்பத்தை உருவாக்கியது அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை அதன்பின் பாமகவிற்கும் இப்போது திமுகவிற்கும் பிரச்சனையை உண்டுபண்ணியிருக்கிறது. தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?' என்றிருக்கிறார் ஜெயலலிதா.

Dinakaran attack: Jayalalithaa demands dismissal of Govt.

கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச:'இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம்' - கருணாநிதி

Posted: 09 May 2007 11:48 AM CDT

தினகரன் அலுவலகத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் அதில் வாரிசு அரசியலுக்கு இஅடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கருத்துக் கணிப்புக்களின்மேல் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் இதைக்கொண்டு கட்சியில் விரிசலை ஏற்படுத்த யாரும் முயலவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No room for dynastic politics in DMK: Karunanidhi


கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

Posted: 09 May 2007 11:07 AM CDT

தமிழகத்தின் ஆளுங்கட்சியின் ஆளுமைகளாக திகழ்ந்த கருணாநிதியின் வாரிசுகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பகிரங்கமான மோதல் வெடித்திருக்கிறது. முதலாவதாக கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப் பட்ட முரசொலி மாறனின் புதல்வர்களின் எழுச்சியால் கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அதன் தொடர்ச்சியாக தயாநிதிமாறனை முன்னிலைப் படுத்தும் சன்டிவி, தினகரன் குழும ஊடகங்களின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், அடுத்து திமுக தலைவரின் மகன்களுக்குள் பிளவை உண்டாக்கும் விதமான இரண்டாவது கருத்துக் கணிப்பு இன்று பகிரங்கமான மோதலாக வெடித்து மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமானவராக அழகிரியை நேரடியாக சுட்டி சன்டிவி கடுமையாக விமர்சித்திருக்கிறது. தா. கிருட்டிணன் கொலைவழக்கிலும் அழகிரியின் தொடர்பு குறித்து இன்று முதன்முறையாக சன்டிவி விமர்சித்தது.

ஸ்டாலின் அழகிரியை விட செல்வாக்கு உள்ளவர் என்ற கணிப்புக்கான எதிர்ப்பாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் விளைவித்துள்ள சூழல் ஒரு புறம் இப்போது அத்தகைய ஒரு கருத்துக் கணிப்புக்கான அவசியம் என்ன என்பது ஒரு புறம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் ஊடகத்தன்மை மறுபுறம் என நம் முன் கேள்விகள் பல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இது பற்றி ஒரு அரசியல் அலசல், பொதுவிவாதத்தை முன்வைக்கிறோம்.

இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது.)

ச:தினகரன் தாக்குதல் 'போராடுவேன்' - மாறன் - Update

Posted: 09 May 2007 10:50 AM CDT

மதுரை. மே 9. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை மத்திய மாநில அரசுகளுடன்ன் போராடுவ்வேன் என சன் நிறுவன இயக்குனர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது காவல்துறையினர் அமைதியாக பார்த்ஹ்துக்கொண்டிருந்தனர் என தினகரன் பணியாளர்கள் கூறியுள்ளதைப்பற்றி கேட்டபோது அவர்களின் கருத்தை நம்புகிறேன் என பதிலளித்தார்.

கருத்துக்கணிப்புக்கு எதிரான அழகிரியின் கருத்துக்களைப் பற்றி கேட்டபோது அதற்கு தினகரன் பணியாளர்கள் 3 பேரைக் கொல்வது முடிவல்ல என்றார்.

Kalanidhi to fight against state, Centre till justice rendered

பத்திரிகையாளர்கள் கண்டனம்
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மெட்ராஸ் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
Journalists deplore killing of Dinakaran employees

இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK

ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை

Posted: 09 May 2007 10:40 AM CDT

வேல்ஸில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்குச் சொந்தமான சம்போ எனும் காளை மாட்டைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

மே 3ல் சுற்றுச் சூழல் அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி சம்போவுக்கு டி.பி நோய் பிடித்துள்ளதால் அதை மே 14க்குள் கொல்லவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து சம்போவின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கைகளும் கூட்டு முயற்சிகளும் தொடர்கின்றன.

சம்போவைக் கொல்வது தங்கள் மத நம்பிக்கைக்கையை காயப்படுத்தும் என இதற்காக அமைக்கப்பாட்டுள்ள குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கோவில் நிர்வாகம் சம்போவுக்கு மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் மற்ற வளர்ப்பு மிருகங்களிடமிருந்து சம்போ தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Save Shambo, Hindu groups urge UK Govt.

தீவிரவாதி என நினைத்து நடிகர் ஆர்யா வாரணாசியில் கைது

Posted: 09 May 2007 10:14 AM CDT

சென்னை, மே. 9: உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் நடித்தவர் ஆர்யா. தமிழ் பட உலகில் வளர்நது வரும் நடிகர். இவர், தற்போது பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக நீண்ட தாடி, அடர்ந்த மீசையும் வைத்துள்ளார்.

இந்த முகத்தை மறைக்க படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க தூதரகத்திற்கு விசா எடுக்கச் சென்ற போது, அவரது தோற்றம் அமெரிக்க போலீஸôருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால் அவரை தூதரகத்திலேயே வைத்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்புண்டா என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனர். தான் யார், தனது அடையாளங்கள் இவை இவை என்று சொல்லி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சினை அடங்குவதற்குள் அடுத்த பிரச்சினையில் ஆர்யா மாட்டிக் கொண்டு தப்பித்துள்ளார்.

இதே படத்திற்காக வாரணாசியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ளச் சென்ற ஆர்யாவை, அங்குள்ள போலீஸôர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதி என நினைத்து அவரை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆர்யாவை விசாரிக்க உயரதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

தான் ஒரு நடிகர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், படப்பிடப்பிற்காக வாரணாசிக்கு வந்தவன் என்றும் ஆர்யா சொன்ன பதில்களை அவரகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன், என்ன திட்டத்தோடு வந்திருக்கிற... என கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பிக்க, தகவலறிந்த படப்பிடிப்புக் குழுவினர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவரை விடுவித்துக் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

Posted: 09 May 2007 10:07 AM CDT

தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில் சென்னை தரமணி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.

கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும் சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும் மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்'' என்றார் கருணாநிதி.

Dinamani

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்

Posted: 09 May 2007 09:33 AM CDT

பெரம்பலூர், ஓசூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை தரமணியில் ரூ. 850 கோடி மதிப்பில் இரண்டாவது தகவல் தொழிநுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கி, 2009-ம் ஆண்டு துவக்கத்தில் நிறைவுபெறும் என்றார்.

சென்னை சோழிங்கநல்லூரில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்கள் இடையே உள்ள மின்னணுவியல் இடைவெளியை சரிசெய்ய பொது சேவை மையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்தங்கிய பகுதிகள் மேம்பாடு அடையும் வகையில் பெரம்பலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியையும், விரைவான முன்னேற்றத்தையும் காண முடியும் என்றார்.

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்: கருணாநிதி

ச:பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கங்கள்

Posted: 09 May 2007 09:30 AM CDT

தைவானில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கும் போட்டியில் 12 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் பெற்று இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் தைவானில் உள்ள ஹோசிங் நகரில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்தியா, சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை அள்ளியது.இளையோர், மூத்தோர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளில் மொத்தம் 68 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். இவர்களில் 45 பேர் பதக்கங்களைச் தட்டிச் சென்றனர்.

12 தங்கம், 23 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. இந்திய வீராங்கனை லட்சுமிக்கு சிறந்த ஆசிய வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கம்

ச:'8 ஆண்டுகளில் விண்வெளியில் இந்தியர்'

Posted: 09 May 2007 09:23 AM CDT

வரும் எட்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கென ரூ. 9,500 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Preparations on to send man to space: Govt.

சந்தன மரக் கடத்தலில் திமுக அமைச்சரின் உறவினர்கள்: ஜெ. புகார்

Posted: 09 May 2007 09:21 AM CDT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தலில், தி.மு.க. அமைச்சரின் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் வசுவம்பாடி தனியார் எஸ்டேட்டுக்குச் சொந்தமான சந்தன மரக் கிடங்கு உள்ளது. இது சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட "ரிசீவரின்" (வழக்கறிஞர்) பொறுப்பில் உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் காவலாளியை தாக்கி விட்டு, ரூ.2.5 கோடி அளவுக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்த மூன்று பேர் முயன்று இருக்கிறார்கள். அவர்கள் 2 லாரிகளிலும், 3 சுமோ வாகனங்களிலும் வந்துள்ளனர். அவற்றில், 2 லாரிகளையும், 1 சுமோவையும் மட்டுமே வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ் மற்றும் குட்டி ஆகியோர் 2 சுமோவில் இருந்துள்ளனர். இவர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் கந்தசாமியின் மகன்கள் என்பது தெரிய வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகளை வனத் துறையினர் வசம் ஒப்படைத்து விட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை தங்கள் வசம் ஒப்படைக்கும் படி, காவல் துறையினர் வனத் துறையினரிடம் கேட்டு இருக்கின்றனர். வனத்துறையின் சட்டப்படி பிடிபட்ட வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளது.

ஆகவே, பிடிபட்ட வாகனங்களை வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொண்டு காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை நீதிமன்றம் மூலம் மீண்டும் விடுவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காவல் துறைக்கு வழக்கை மாற்ற திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடித்து ஒரு நாள் ஆகியும், முதல் தகவல் அறிக்கை இதுவரை தயாரிக்கப்பட வில்லை. திமுக அரசின் மிரட்டலுக்குப் பயந்து, காவல் மற்றும் வனத் துறையினர் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dinamani

ச:தினகரன் தாக்குதல் கருணாநிதி வருத்தம்

Posted: 09 May 2007 09:12 AM CDT

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் இறந்த நிகழ்வைக் குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் மே 11ல் நடக்கவுள்ள கொண்டாட்டங்களை ரத்து செய்யவும் கேட்டுள்ளார்.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி கருத்துக் கணிப்பு நடத்திய 'ஜென்மங்கள்' என்னிடம் வரட்டும் தமிழகம் முழுவதும் அழைத்துச் சென்று எனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது காட்டுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

Karunanidhi upset over Dinakaran office attack
தினமலர்

உ.பி.: 7 கட்ட தேர்தலில் 46 சதவீத வாக்குப்பதிவு

Posted: 09 May 2007 09:10 AM CDT

உ.பி.யில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 46 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தொங்கு பேரவை: இந்நிலையில் உ.பி.யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அதைத் தொடர்ந்து முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

11-ல் வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றதால் அன்று பிற்பகலில் முடிவுகள் தெரிந்துவிடும்.

Dinamani

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை - அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

Posted: 09 May 2007 09:03 AM CDT

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை).

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல், ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது, சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது, திருட்டு, கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல், உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல், ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தினமணி - முழு விவரங்கள்

தில்லியில் மூன்றாவது மாடி கட்ட அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் ஆணை

Posted: 09 May 2007 08:58 AM CDT

புதுதில்லி, மே 9: தில்லி மாநகராட்சியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டாவது மாடிக்கு மேல் கட்ட இனி அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே இனி மூன்றாவது மாடிகளைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

Dinamani

இலவச கலர் டிவி திட்டத்தில் குறை இருந்தால் தூக்கு மேடைக்குப் போகத் தயார்: அதிமுகவுக்கு கருணாநிதி சவால்

Posted: 09 May 2007 08:51 AM CDT

சென்னை, மே 9:ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் குறை இருந்தால், தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

தொழில் துறை- தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது பேசிய டி.ஜெயகுமார் (அதிமுக), இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். இத்திட்டத்துக்காக ரூ.850 கோடி செலவிடப்பட்டிருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கலர் டிவிக்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார் அவர்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) பேசுகையில், கலர் டிவி திட்டம் திறந்த புத்தகமாக நடக்கிறது என்றார். இதற்காக முதல்வர் தூக்குமேடைக்குப் போக வேண்டும் என்றால், அதிமுக செய்த முறைகேடுகளுக்கு ஆயிரம் முறை தூக்கு மேடைக்குப் போக வேண்டும் என்றார்.

Dinamani

ச: தினகரன்-சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு 2 பேர் பலி. அடக்கி வாசிக்கும் தினமலர்.

Posted: 09 May 2007 04:37 AM CDT

மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல்-2 பேர் பலி. 7 பஸ்களுக்கு தீ வைப்பு

தினகரன் நடத்தும் கருத்துக் கணிப்பு காரணமாக பாமகவின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஸ்டாலினுக்கே அதிக செல்வாக்கு என்று கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதால் ஆத்திரம் கொண்டு அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப் பட்டனர். மநுரையில் தினகரன் பத்திரிகை, சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாயின.

விரிவான செய்தி இங்கே (தட்ஸ்தமிழ்)

வழக்கமாக திமுக தரப்பு பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தினமலர் இம்முறை அடக்கி வாசிக்கிறது.

தினமலர் இணைய தளத்தில் இப்போதைய செய்தி:

மதுரை தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் ; இருவர் பலி

உத்தங்குடி: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் கோபி என்ற ஊழியர் ஆவார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saturday, March 31, 2007

Satrumun Breaking News 31 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சற்றுமுன்: இன்சமாம் குமுறல் பேட்டி- இந்தியா, பாக் வீரர்கள் பரிதாபம்

Posted: 31 Mar 2007 08:41 PM CDT

"விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் விளையாட்டு வீரர்கள் பீதியுடன் வாழ வேண்டிய அவலமான நிலை இருக்கிறது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

லாகூரில் நிருபர்களிடம் நேற்று இன்சமாம் கூறியதாவது:

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பினேன். ஆனால், தோற்று விட்டோம். எனக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால், சோதனையான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பத்திரிகைகளும், டிவி சேனல்களும், பாகிஸ்தான் அணியை கிழிகிழியென்று விமர்சிப்பது அநியாயம். இரண்டு போட்டிகளில் தோற்றதால் நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை என்று ஆகிவிடுமா? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எது நடந்தாலும் அதற்கு இன்சமாம்தான் பொறுப்பு என்று பத்திரிகைகள் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உலகக்கோப்பையில் தோற்றதால் பாகிஸ்தானில் கிரிக்கெட் அழிந்துவிடாது. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். மீண்டும் வலுவான அணியாக வரலாம்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் இது புரிகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும்தான் மக்களுக்கு தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

- தினகரன்

சற்றுமுன்: ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு -வங்கி கடன்கள் வட்டி எகிறும்

Posted: 31 Mar 2007 08:28 PM CDT

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்பவருக்கு இன்றைய தேதி உண்மையிலேயே ஒரு ஏமாற்ற தினமாகத்தான் இருக்கக்கூடும். ஆம். ஒரே நேரத்தில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்) ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் சிஆர்ஆர். இதேபோல, வர்த்தகத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகை மீதான வட்டி ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்த நிதி ஆண்டில் பணவீக்க விகிதத்தை 5 முதல் 5.5 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், உணவுப் பொருட்கள், வீடு, மனை உட்பட பலவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்க விகிதம் 6.46 சதவீதமாக உள்ளது.

எனவே, அதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பதை அதிகரிக்கும் வகையில் சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போதுள்ள 6.25ல் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது இந்த மாதம் 14 முதல் 28ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துள்ள வங்கிகளை மேலும் அதிரச் செய்யும் வகையில் ரெப்போ விகிதமும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், சிஆர்ஆர் அதிகரிப்பால் வங்கிகளின் ரூ.15,500 கோடி கூடுதல் வர்த்தக தொகை ரிசர்வ் வங்கி வசமாகி விடும். எனவே, அவற்றைக் கடனாக அளிப்பதன்மூலம் கிடைக்க வாய்ப்புள்ள ரூ.1,600 கோடி வட்டியை வங்கிகள் இழக்க நேரிடும். மொத்தமாக வங்கிகளிடம் இருந்து சுமார் 17,000 கோடி ரிசர்வ் வங்கிக்கு கைமாறும்.

இதனால், கடன் அளிப்பதற்கான வங்கிகளின் நிதி வரம்பு மேலும் கட்டுப்படுத்தப்படும். அதிக வருமானம் ஈட்ட வேறுவழியின்றி வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டிகளை வங்கிகள் மீண்டும் கடுமையாக உயர்த்தத் தொடங்கி விட்டன

- தினகரன்

சற்றுமுன்: ஷேன்வார்னே தனது மனைவியுடன் மீன்டும் சேர்ந்தார்

Posted: 31 Mar 2007 08:20 PM CDT


ஷேன்வார்னே பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி பிரிந்து இருந்த அவருடைய மனைவி மீன்டும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒன்றாக இனைந்தனர்.

ஷேன்வார்னே தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறப்போகிறார்.



"மேலும் செய்திக்கு"

சற்றுமுன்: அர்ஜுன் சிங் கார் மீது பாட்டில் வீச்சு

Posted: 31 Mar 2007 08:12 PM CDT

இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் கார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதலாம் சுதந்திர போராட்டத்தின் (1857) 150வது ஆண்டு விழாவை யட்டி நேற்று கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் வந்தார். கருத்தரங்கில் அர்ஜுன்சிங் பேச தொடங்கியதும் 50 மாணவர்கள் எழுந்து அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். சமத்துவ இளைஞர்கள் என்ற அமைப்பை சேர்ந்த அவர்கள் கறுப்பு பாட்ஜ் அணிந்து இருந்தனர். "இடஒதுக்கீட்டை புகுத்தி மாணவர்களை பிரிக்காதே! அர்ஜுன்சிங்கே பதவியை ராஜினாமா செய்! என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சி முடிந்து அர்ஜுன்சிங் காரில் ஏறி புறப்பட்ட போது அதே மாணவர்கள் கார் முன் திரண்டு ரகளை செய்தனர். இந்த சம்பவம் பற்றி அர்ஜுன்சிங்கிடம் கேட்டதற்கு, இளைஞர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். அதே சமயம் நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சக்தியை இந்தியா பெற முடியும என்றார்.

தினகரன்

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

Posted: 31 Mar 2007 10:37 AM CDT

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

சற்றுமுன்: சிவாஜி பட ரிலீஸ் பற்றி டி.ஆர் கருத்து

Posted: 31 Mar 2007 10:31 AM CDT

நெல்லையில் நடைபெற்ற தனது 'லட்சிய தி.மு.க கூட்டத்தில் பேசிய விஜய டி.ராஜேந்தர் 'சிவாஜி படத்துக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு.

அந்த பட ரிலீஸ் போது திரையரங்குகளில் டிக்கட்கள் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் தன் கட்சி சார்பில் போராடுவோம் என்கிறார்.அத்துடன் காவிரி பிரச்சனையில் ராஜினி மௌனம் சாதித்ததையும் சாடுகிறார்.தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகத்தில் சொத்து வாங்கும் அவர் படத்துக்கு டிக்கெட் விலை ஏற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்கு விலக்கு அளிக்க முற்பட்டால் விடமாட்டேன் என்றும் கூறுகிறார்

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

Posted: 31 Mar 2007 10:23 AM CDT

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

Posted: 30 Mar 2007 08:11 PM CDT

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி "வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, "இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.



- தினகரன்