Sunday, August 26, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சந்திரபாபு நாயுடு மகன் பாலகிருஷ்ணா மகளை மணந்தார்

Posted: 26 Aug 2007 06:43 PM CDT

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷின் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. தனது மாமாவும், நடிகருமான பாலகிருஷ்ணாவின் மகள் பிராமிணியை அவர் மணந்தார்.

எளிமையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, நாகேஷ்வர ராவ், ஜெயசுதா, கிருஷ்ணம் ராஜூ உள்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உள்ளூர் தொலைக்காட்சி சேனலில் திருமண நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் முதல்வர் ராஜசேகர ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரது சார்பில் சபாநாயகர் கே.ஆர். சுரேஷ் ரெட்டி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், தெலுங்கு சினிமா உலகில் நீங்கா இடம் பெற்ற, மறைந்த என்.டி. ராமராவின் மகன் ஆவார்.

தினமணி

அன்னை தெரசாவின் 97-வது பிறந்த நாள்

Posted: 26 Aug 2007 06:24 PM CDT

Nuns Mark Mother Teresa's Birthday - washingtonpost.com
கோல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை 97-வது பிறந்த நாளையொட்டி அன்னை தெரசாவின் கல்லறையில் அஞ்சலி செலுத்துகிறார் "மிஷனரி ஆப் சாரிட்டிஸ்' தலைவி சகோதரி நிர்மலா.

Japanese PM's wife visits Mother Teresa's home: "Mother Teresa's legacy lives on"

Sister Nirmala :: On September 5, it will be ten years since the death of Mother Teresa

ஜெர்மானிய பெண்ணுக்கு 53 லட்சம் நஷ்டஈடு

Posted: 26 Aug 2007 06:07 PM CDT

11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் கையை இழந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணுக்கு ரூ.53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டை சேர்ந்த குந்தா நீயுபர் (Gunda Neubauer) ,53 என்ற பெண் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். பஸ்ஸில் அவர், உதய்பூரில் இருந்து மவுண்ட் அபுவிற்கு சென்ற போது பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் நீயுபர் தனது வலது கையை இழந்தார்.

இதனால் அவர் ஜெர்மனியில் பார்த்து வந்த வேலையை இழக்க நேரிட்டது. இதனையடுத்து ரூ.11.67 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி தில்லியில் உள்ள ஜெர்மன் துதரகத்தின் மூலம் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.

இதற்கான நஷ்டஈடு தொகையை வழங்குவதற்கு பஸ்சை விபத்துக்குள்ளாக்கிய டிரைவரும், கண்டக்டரும் தான் பொறுப்பு. எனினும் அவர்களுக்கு பதிலாக பஸ் காப்பீடு செய்யப்பட்டுள்ள நிறுவனம் அந்த பெண்ணுக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. 53 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

தினமணி

The Hindu News :: German national gets Rs 53 lakhs for loss of limb in accident

பழநியில் ரோப் கார் பெட்டி அறுந்து விழுந்து 4 பேர் பலி

Posted: 26 Aug 2007 04:11 PM CDT

பழநி: பழநி மலைக்கோயிலுக்கு ரோப் காரில் சென்ற ஆவின் அதிகாரிகள் இருவர் உட்பட 4 பேர் பலியாயினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

- தினமலர்

இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு

Posted: 26 Aug 2007 12:06 PM CDT

இந்திய தடகள அணியின் மேலாளராக காவல் அதிகாரி சைலேந்திர பாபு

Webdunia


ஜப்பானில் நடைபெற உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் மேலாளராக தமிழக காவல்துறையின் தலைமை ஆய்வாளராக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

190 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் கலந்து கொள்ளும் இப்போட்டிகளில் 12 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இந்திய அணியின் மேலாளராக தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு காகித ஆலையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாகவும்ட உள்ள் சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. நமது அணியில் சில சிறந்த வீரர்களும், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் சிறப்பாக சாதித்து பதக்கங்களுடன் திரும்புவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என்று தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பு குறித்து சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்

Posted: 26 Aug 2007 12:04 PM CDT

செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம்

ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2007( 13:40 IST )
Webdunia


ஆகஸ்ட் 28ஆம் தேதி ஏற்பட உள்ள முழுச் சந்திர கிரகணம் பிற்பகல் 2.21 முதல் 5.54 வரை நிகழ்கிறது. ஆனால் அதனை 16 நிமிடங்களுக்கு மட்டுமே இந்தியாவில் காண முடியும்.

அந்த 16 நிமிடங்களும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மட்டுமேத் தெரியும்.

தமிழகம் முழுவதும் உஷார் நிலை

Posted: 26 Aug 2007 11:59 AM CDT

தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது

ஆகஸ்ட் 26, 2007

சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


wwww.thatstamil.com

RJD தலைவராக லாலு-ஆறாம் முறையாகத் தேர்வு.

Posted: 26 Aug 2007 10:20 AM CDT

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித்தலைவராக லாலு பிரசாத் யாதவ் போட்டியின்றி ஆறாம் முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இது அடுத்த இரண்டாண்டு காலத்துக்காகும்.

ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட லாலு, சுமார் 20,000 கட்சி ஊழியர்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பேசினார்.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: ஒருவர் கைது.

Posted: 26 Aug 2007 10:13 AM CDT

ஹைதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள் பின்னணியில் இருந்துள்ளதாக ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் நாக்பூரில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு உதவியதாக ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமலர்

பாலஸ்தீனத்திற்கு இந்தியா சார்பில் பள்ளிக்கூடம், மருத்துவமனை.

Posted: 26 Aug 2007 10:05 AM CDT

பாலஸ்தீனத்தில் காஸா நகரில் இந்திய அரசு சார்பில் பள்ளிக்கூடம் கட்டும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஜெருசேலம் அருகே கட்டப்படும் இந்த உயர்நிலைப்பள்ளி பகுதி தற்போது ஹமாஸ் பிரிவு நிர்வாகத்திடம் உள்ளது.

இந்திய அரசு கட்டி கொடுக்கும் மற்றொரு இருதய நோய் அறுவை சிகிச்சை மையமும் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. பள்ளிக்கூட கட்டத்திற்கு ஜவஹர்லால் நேரு பெயர் சூட்டப்படுகிறது. இந்திய தூதர் சிக்கூர்ரஹ்மான் இத்தகவலை தெரிவித்துள்ளார்

ஃபிடல் காஸ்ட்ரோ மரணமா? - சாவேஸ் மறுப்பு.

Posted: 26 Aug 2007 10:00 AM CDT

கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மரணமடைந்து விட்டதாக வந்த தகவல்கள் உண்மையல்ல என காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக, அதிபர் பதவியை தனது சகோதரர் ரவுல் காஸ்ட்டிரோவிடம் ஒப்படைத்தார். அதன்பின் அவர் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 13 ம் தேதி, காஸ்ட்ரோவின் பிறந்த நாளன்று அவர் பொது மக்களுக்கு காட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளாததால், உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்திருப்பார் என அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும், வெனிசுவேலா அதிபருமான ஹூயூகோ சாவேஸ் இந்த தகவல்களை மறுத்துள்ளார்.

தினமலர்

"நலப்பணிகளுக்கு தடையாக இராமதாஸ் இருக்கிறார்" - ஆற்காடுவீராசாமி

Posted: 26 Aug 2007 09:56 AM CDT

முதல்வர் கருணாநிதி மக்களுக்காக நற்பணிகள் செய்ய முயற்சி மேற்கொள்கிறார். அதற்கு பா.ம.க. இராமதாஸ் தடை போடுகிறார் என்று மின்சாரத் துறை அமைச்சர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சூளைமேடு பகுதியில் தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை வகித்தார். அவர் தன் தலைமையுரையில் முதல்வர் கருணாநிதி துணை நகரம் கொண்டு வரலாம் என்றார். இதனால் விளைநிலங்கள் வீணாகும் என்று இராமதாஸ் தடை போட்டார். இது போன்று விமான நிலைய விரிவாக்கம், தற்போது டைட்டானியம் தொழிற்சாலை என்று தொடர்ந்து அவர் தடை போட்டுக் கொண்டே வருகிறார் என்று இராமதாஸ் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டி பேசினார்.

நன்றி: தினமலர்

அமெரிக்க டென்னிஸ்: சானியா, மகேஷுக்கு இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி.

Posted: 26 Aug 2007 09:49 AM CDT

அமெரிக்காவில் உள்ள நியூஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா-சாண்டன் ஜிலோ (இத்தாலி) இணை வாகையர் பட்டம் பெற்றது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதிப் போட்டியில் சானியா இணை 6-1, 6-2 என்ற நேர் கணக்கில் கியூபர்-பிளாக் இணையை வென்றது. இரட்டையர் பிரிவில் சானியா பெற்ற 7-வது பட்டம் இதுவாகும்.

இந்த ஆண்டு ஸ்டான்போர்டு, சின்சினாட்டி போட்டியிலும், 2006-ம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரூவிலும், 2004-ம் ஆண்டு ஹைதராபாத்திலும் பட்டம் பெற்று இருந்தார்.

இதே போல ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி (இந்தியா)-ஜிமோன்ஜிக் (செர்பியா) இணை வாகையர் பட்டம் பெற்றது. இந்த இணை 6-3, 6-3 என்ற நேர் கணக்கில் மார்சின்- ஸ்பெஸ்டென்பர்க் (போலந்து) இணையை தோற்கடித்தது.

ரூ 2.30 கோடி கள்ள நோட்டுகள் - ஹைதராபாத்தில் பிடிபட்டன.

Posted: 26 Aug 2007 09:40 AM CDT

ஹைதராபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் துபாயை சேர்ந்த ஒபைது அலி (31) என்பவன் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை துபாய் வழியாக மும்பை கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்தில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ஒபைதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த கலியா, முகமது நஜாத், செய்யது கவுஸ்பாசா ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதம் கள்ள நோட்டுகளை அவர்கள் ஹைதராபாத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இந்த கள்ள நோட்டு கும்பல் பிடிப்பட்டது.

இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர்சிங் கூறும் போது, இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடல் வழியாக இந்தியா வந்துள்ளது என்றார்.

பிடிபட்ட ஒபைது 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளான். அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளான். தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவனில் இவனும் ஒருவன்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி:மாலைமலர்

விதர்பாவில் 8 விவசாயிகள் தற்கொலை

Posted: 26 Aug 2007 09:00 AM CDT

மகாராஷ்டிரத்தின் விதர்பா பகுதியில் மூன்று நாள்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

யாவத்மால் மாவட்டத்தில் மூன்று பேரும், அமராவதி மாவட்டத்தில் 2 பேரும், வாசிம், பந்த்ரா, புல்தானா மாவட்டங்களில் தலா ஒருவரும் கடன்தொல்லையால் தற்கொலை செய்திருப்பதாக தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

அப்பகுதியில், இந்த மாதத்தில் மட்டும் 65 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Another 8 more cotton farmers commit suicides in Vidarbha: VJAS demands Rs. 2700 per quintal as price of cotton
In Vidarbha's darkness, the first glimmer: farmer suicides down :: indianexpress.com
Zee News - 259 farmer suicides between May-July 2007: Govt

திடீர் உடல் நலக்குறைவு: நடிகை குஷ்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 26 Aug 2007 07:50 AM CDT

நடிகை குஷ்பு கலைஞர் டெலிவிஷனுக்காக "நம்ம குடும்பம்'' என்ற டி.வி. தொட ரில் நடித்து வந்தார். "வேகம்'' என்ற படத்திலும் நடித்தார். "ஜாக்பாட்'' என்ற டி.வி. நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் குஷ்புவுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி னார். உடனடியாக அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

குஷ்புவின் கணவர் சுந்தர் .சி காரைக்குடியில் "பொறுக்கி'' படப்பிடிப்பில் இருந்தார். தகவல் அறிந்ததும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவசரமாக இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று குஷ்புவை பார்த்தார்.

ஒரு வாரம் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார் என்று தெரிகிறது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட் டுள்ளன.

மாலைமலர்

திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாள்

Posted: 26 Aug 2007 07:48 AM CDT

தமிழ்தென்றல் என போற்றப்படும் திரு.வி.க.வின் 125-வது பிறந்த நாளை யொட்டி சென்னை பட்டாளம் மார்க் கெட் அருகில் உள்ள சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் மாலை அணி வித்தார்.

இதேபோல் பாரதியஜனதா சார்பில் மாநில தலைவர் இல.கணேசன், பா.ம.க. சார்பில் கட்சி தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

மாலைமலர்

ஒரிசாவில் காலரா - 48பேர் பலி

Posted: 26 Aug 2007 06:40 AM CDT

ஒரிசாவின் காலராவிற்கு 48பேர் பலியாகியுள்ளனர். ரயகடா மாவட்டத்தில் 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள செய்தித் தாள்கள் கடந்த சில வாரங்களில் 250பேர் இறந்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆயிரக் கணக்கானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10நிமடங்களுக்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சம்பட் எனும் செய்தித் தாள் தெரிவிக்கிறது. ஆனால் மருத்துவ அதிகாரி சீத்தாராம் இதை மறுத்துள்ளார். மாவட்டத்தின் 26 கிராமங்களில் 48 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் இதில் 16 கிராமங்களை அவர்கள் அணுக இயலவில்லை(inaccessible) என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மத்திய வெள்ளப் பெருக்கில் குடிநீர் ஆதாரங்கலில் காலரா கிருமிகள் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இறப்பு எண்ணிக்கையை பல்வேறு நாளிதழ்களும் பல்வேறு விதமாய் வெளியிட்டுவருகின்றன.

48 dead in Orissa cholera outbreak Hindustan Times, India
70 die as cholera breaks out in parts of Orissa Times of India, India
80 die of cholera in Orissa Hindu, India
Cholera outbreak kills 58 tribals in Orissa Reuters India, India

அறிவியல் இன்று - 26/08/2007

Posted: 25 Aug 2007 08:33 PM CDT

விண்வெளியில் தங்கும் விடுதி 2012-இல் திறக்கும்
---------------------------------------------------------
அடுத்த முறை விடுமுறையை கழிக்க எங்கு செல்லலாம்???
ஊட்டி,கொடக்கானல்,ஏற்காடு???

பேசாமல் விண்வெளிக்கு சென்றால் என்ன??
"வெறும்" 4 மில்லியன் டாலர்கள்் செலவில் விண்வெளியில் விடுமுறையை கழிக்கலாம். வெறும் 80 நிமிடங்களில் பூமியை சுற்றி வரலாம் மற்றும் நாள் ஒன்றிற்கு 15 முறை சூரியன் உதிப்பதை பார்க்கலாம்,இது போன்று பல்வேறு விஷயங்களை நீங்கள் 2012-இல் இருந்து செய்ய முடியும்.
இது பற்றிய செய்திக்கட்டுரை இதோ

பேரண்டத்தில் ஓட்டை
---------------------------------

இதயத்தில் ஓட்டை,ஓசோன் மண்டலத்தில் ஓட்டை என்று எங்கு பார்த்தாலும் குறை கண்டுபிடித்துக்கொண்டு இருந்த மனிதனுக்கு அடித்தது ஜாக்பாட். அங்கே இங்கே பார்த்துவிட்டு கடைசியில் பேரண்டத்திலேயே (Universe) ஓட்டை இருப்பதாக கண்டுபிடித்து விட்டான்.

அதுவும் கொஞ்ச நஞ்சமில்லை ,இந்த ஓட்டையின் விட்டம் ஒரு பில்லியன் ஒளி வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு ஒளி வருடமஎன்பது ஒளி ஒரு வருடம் முழுதும் பயணம் செய்தால் அடையக்கூடிய தூரம். ஏரிடனஸ் (Eridanus) எனும் நட்சத்திரத்தொகுப்பில்(Constellation) காணக்கூடிய இந்த ஓட்டை ,இருக்கக்கூடிய பகுதியில் நட்சத்திரங்கள் ,அண்டங்கள் (Galaxies), Dark matter இப்படி எதுவுமில்லாமல் வெறுமையாக இருக்கிறதாம். இதுவரை மனிதனுக்கு தெரிந்த வரை மிகப்பெரிய வெற்றிடம் இதுதான்.ஏன் இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.இது பற்றிய மேலும் செய்திகள் இங்கே

சர்க்கரையால் ஆன பேட்டரி
-------------------------------------
பேட்டரி தீர்ந்துவிட்டட்தா?? சமயலறைக்கு சென்று சிறிது சர்க்கரை எடுத்து வந்து நிறப்பிவிட்டால் போதும்!!
"என்ன உளருகிறான் இவன்" என்கிறீர்களா??

ஜப்பான் நிறுவனமான சோனி (Sony) உருவாக்கியிருக்கும் பேட்டரி உங்களிடம் இருந்தால் இப்படி செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் மாசு விளைவிக்காத இந்த விதமான பேட்டரி பற்றிய செய்தி இதோ

நன்றி:
http://www.cnn.com/2007/TECH/08/14/space.hotel.reut/index.html
http://www.reuters.com/article/scienceNews/idUSN2329057520070824
http://www.reuters.com/article/scienceNews/idUSSP22885120070824

Saturday, August 25, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 50 பேர் பரிதாப பலி

Posted: 25 Aug 2007 01:55 PM CDT

ஐதராபாத் : ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒருபாவமும் அறியாத 50 அப்பாவிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக்கள் சேதமடைந்து படுகாயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு தலைமைச்செயலகம் அருகிலுள்ள லும்பின் பூங்காவில் இரவு 07.45 மணியளவில் நிகழ்ந்தது. இப்பூங்கா பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். மற்றொரு குண்டு அடுத்த 15 நிமிடம் கழித்து கோகுல் சாட் பந்தரில் இரவு 08.15 மணியளவில் வெடித்தது. பயங்கரவாதிகள் சமீபகாலங்களில் தென் மாநிலங்களைக் குறிவைக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக கர்நாடாகாவில் பெங்களூரூவையும், ஆந்திராவில் ஐதராபாத்தையும் தீவிரவாதிகள் இலக்காகக் கொண்டு தாக்கி வருகின்றனர். இவ்விரு நகரங்களும் விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளர்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தினை நாளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பார்வையிடுகிறார்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கடும் கண்டன வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார்.


- - தினமலர்

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்

Posted: 25 Aug 2007 11:01 AM CDT

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் சட்ட விரோதமாக இருந்து வந்த 45,000 இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரக அலுவலகங்கள் அவசர சான்றிதழ் வழங்கியுள்ளதாக இந்திய வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொலைபேசி மூலம் கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுவரை 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சிறப்பு விமான சேவை ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பொதுமன்னிப்பு பெற்ற தொழிலாளர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அதனைத் தொடர்ந்து கேரளா,தமிழ்நாடு ஆகியவை.

http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148918.html
Special flights to take home amnesty seekers

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை

Posted: 25 Aug 2007 10:44 AM CDT

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை


ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் என்றழைக்கப்படும் ஷார்ஜாவில் அமையப்பற்றுள்ள குவைத்தி மருத்துவமனையில் கையில் படுகாயமடைந்த இந்திய கட்டுமானத் தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் செய்யப்பட்டதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சகர் அல் முல்லா தெரிவித்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விரல் அசைவுகள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிசியோதெரபி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Rare surgery at Sharjah hospital

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August690.xml§ion=theuae&col=

ஹைதராபாத்: அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்.

Posted: 25 Aug 2007 10:23 AM CDT

சற்றுமுன் ஹைதராபாத் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருகுண்டுவெடிப்புகளில் ஐவர் கொல்லப்பட்டும், பன்னிருவருக்கும் மேலானோர் காயமடைந்துமிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மாநிலத்தலைமையகம் அருகிலுள்ள லும்பினி பூங்காவில் முதல் குண்டும், 15 நிமிடங்களில் கோகுல்சாட்பந்தர் என்னுமிடத்தில் அடுத்த குண்டும் வெடித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது

அமெரிக்க டென்னிஸ்: இரட்டையர் இறுதிகளில் சானியா, மகேஷ் பூபதி .

Posted: 25 Aug 2007 10:00 AM CDT

அமெரிக்காவில் உள்ள நியூ ஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா இதில் ஒற்றையர் ஆட்டத்தில் தோற்றாலும் இரட்டையர் போட்டியில் இத்தாலியை சேர்ந்த மரியா சாண்டன் ஜெலோவுடன் இணைந்து விளையாடி வென்று வருகிறார்.

இன்று நடந்த அரை இறுதியில் சானியா ஜோடி 2-6, 6-3, 10-5 என்ற கணக்கில் ஸ்டுபாஸ்- பெஸ்சக் ஜோடியை வென்றது. இறுதிப்போட்டியில் சானியா இணை கியூபர்-சாராபிளாக் ஜோடியை எதிர் கொள்கிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதி (இந்தியா) ஜிமோன்விக் (செர்பியா) ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இணை 7-5, 7-6(7-2) என்ற நேர் செட்கணக்கில் பிஷர்- புரோடராக் ஜோடியை வென்றது.

மாலைமலர்

BCCI, ICL இடையே போட்டி ஆட்டங்கள் - லாலு யோசனை.

Posted: 25 Aug 2007 08:28 AM CDT

மத்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), இந்திய கிரிக்கெட் குழுமம் (ICL) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஆட்டங்கள் வைக்கலாம் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்துள்ளார்.

ICL என்றில்லாமல் யார் கேட்டாலும், இரயில்வேயின் விளையாட்டு மைதானங்களை, அவர்கள் உரிய வாடகை தரும்பட்சத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

மேலும் " BCCI, ICL என்றில்லாமல், சிறப்பாக ஆடும் வீரர்களே நாட்டின் கிரிக்கெட் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்றார் லாலு.

பி/டி/ஐ/ செய்திக்குறிப்பு

மத்திய அரசியல்: வலுவிழந்த புயல்

Posted: 25 Aug 2007 08:21 AM CDT

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சித்தலைவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். "ஒப்பந்தத்தை அப்படியே கிடப்பில் போடாவிட்டால் நடப்பதே வேறு'' என்று மிரட்டினார்கள். இதனால் எந்த நேரத்திலும் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கம்யூனிஸ்டுகளின் பூச்சாண்டி மிரட்டல்களுக்கு காங்கிரஸ் கொஞ்சமும் பயப்படவில்லை. நெருக்கடியை நினைத்து அலட்டிக்கொள்ளவும் இல்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு படி மேலே சென்று, "முடிந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று சவால்விட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடலாம் என்று உறுதியாக தெரிவித்தன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஒருமித்த கருத்து இல்லை.

பிரகாஷ்கரத், சீதாராம் யெச்சூரி, ஜோதிபாசு போன்றவர்கள் ஆதரவை வாபஸ் பெறக்கூடாது சும்மா மிரட்டி காரியத்தை சாதித்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் மத்திய குழு உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் காங்கிரசை ஆதரிக்கக் கூடாது என்றனர். இந்த கருத்து வேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எந்த முடிவும் எடுக்க முடியாமல் கடந்த 4 நாட்களாக திணறியது.

இதற்கிடையே இடது சாரிகளின் போக்கு மக்களிடம் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்தது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது என்பதும் தெரிய வந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் வேறு வழி தெரியாமல் பணியத் தொடங்கி உள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தி விடும் என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது மெல்ல தொனியை குறைத்து விட்டனர். அவர்களிடம் இருந்த கடுமை காணாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் வரை கம்யூனிஸ்டுகள் பேச்சில் கம்பீரம் தெரிந்தது. எங்களுக்கு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.

வியன்னா மாநாட்டில் இந்திய பிரதிநிதியை கண்காணிப்போம். மத்திய அரசை இஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்க முடியாது. எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சுருதி நேற்று திடீரென மாறியது. இடது சாரிகளை கழற்றி விட்டுவிட காங்கிரஸ் நேற்று தயாரானதும், கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் ஆடி போய்விட்டனர். தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்று நேற்றிரவு சோனியா ஆலோசித்ததும் இடதுசாரிகள் "கப்-சிப்'' என ஒடுங்கி விட்டனர்.

நேற்றிரவு கம்யூனிஸ்டு தலைவர்களிடம் நிருபர்கள் பேசியபோது, "மத்திய அரசுக்கு நெருக்கடியா? அப்படி எதுவும் இல்லையே'' என்றனர். அவர்களது பதில், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' என்று சொல்லும் ரீதியில் இருந்தது.

சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டவர்கள் போல மாறி விட்ட கம்ïனிஸ்டு தலைவர்களுடன் அடுத்த வாரம் சோனியா பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய கமிட்டி நியமிக்க முடிவு செய்வார்கள். இதை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அமைதியாகி விடுவார்கள் என்று தெரிகிறது.

திடீர் பூதமாக கிளம்பிய அணுசக்தி சர்ச்சையால் மன்மோகன்சிங்தான் ஒரு வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துள்ளார். அதோடு அடிக்கடி பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு "செக்'' வைத்துள்ளார்.

அதே சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கிளறி விட்டதால் பிரகாஷ்காரத் போன்ற மூத்த தலைவர்களுக்கு மத்திய குழுவில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் பதவியை காப்பாற்றி கொள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் தற்போது போராடி கொண்டிருக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

குடும்பச்சண்டையால் கேபிள் நிறுவனமா? - ஜெ. தாக்கு!

Posted: 25 Aug 2007 08:12 AM CDT

தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்ப சண்டையால்தான் தமிழக அரசு கேபிள் நிறுவனம் துவக்கியுள்ளது என அ. தி. மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
" 2006 ல் மக்கள் நலனுக்காக கொண்டு வந்தபோது இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என அப்போதைய மத்தியஅமைச்சர் தயாநிதியும் , கருணாநிதியும் கவர்னரை சந்தித்து இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என வற்புறுத்தினர். ஆனால் தயாநிதி மற்றும் கருணாநிதி மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் தமிழக அரசு கேபிள் டிவி., நிறுவனத்தை ஏற்படுத்துகிறது"
என்று அவர் கூறியுள்ளார்.

தினமலர்

வினாத்தாளையும் விட்டுவைக்காத விளம்பரங்கள்.

Posted: 25 Aug 2007 07:59 AM CDT

பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் கேள்வித் தாளில் துணிக்கடை, தீம் பார்க் ஆகியவற்றின் விளம்பரங்கள் அச்சிடப்பட்டது கேரளாவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் கேள்வித்தாளில் பல நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு அரசு பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது. இது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏழாம் வகுப்பு வரை உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அங்கீகரிக் கப்படவில்லை. எனவே, இப்பாடத்தில் நடத்தப்படும் தேர்வும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று பள்ளிகள் கருதுகின்றன. ஆனால், தேர்வு நேரத்தில் இதற்கான கேள்வித் தாளில் கல்வித் துறையே விளம்பரங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வினியோகிப்பது தான் கொடுமை. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்வில் தான் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. சில பள்ளிகள் இத்தகைய கேள்வித்தாள்களை வாங்க மறுத்து விட்டன. சில பள்ளிகள் ஆசிரியர்களே தயாரித்த கேள்வித்தாள்களை உபயோகப்படுத்தின. கல்வி அமைச்சரின் உத்தரவின் பேரில் இது நடந்ததா அல்லது அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவா என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.

தினமலர்

இந்தியா: 16 வயதுக்குக் கீழ் கை பேசி வேண்டாம் - அறிவுறுத்தல்

Posted: 25 Aug 2007 07:51 AM CDT

அலை பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்வீச்சு, காதில் உள்ள மென்மையான திசுக்களை வெப்பமடைய செய்யும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 16 வயதுக்கு உட்பட்டவர்களை அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்த இந்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

அலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொ.தொ. துறையின் தொலை தொடர்பு பொறியியல் வல்லுனர் மையம் சில வழிகாட்டு குறிப்புகளை தயார் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, மனிதர்களின் காதில் உள்ள திசுக்களை வெப்பமடைய செய்து விடும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 16 வயதுக்கு உட்பட்டவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையானவை. அவர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான டவர்களை அமைத்து, அவற்றில் ஆன்டனாக்களை அதிக அளவில் பொருத்தி வருகின்றனர். இதனாலும் மின்காந்த கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். எனவே, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே இதுபோன்ற டவர்களை ஏற்படுத்த கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
.இவ்வாறு டெலிகாம் துறை கூறியுள்ளது.டெலிகாம் துறையின் இந்த நடவடிக்கை குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியதாவது:
அறிவியல் ஆதாரம் இல்லாமல் இது போன்ற அறிவுரைகளை வெளிப்படுத்துவதால் இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு அலைகள் மற்றும் மொபைல் தொடர்பு ரேடியோ கதிர்வீச்சு அலைகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள அளவுக்கும் குறைவான கதிர்வீச்சு அலைகளால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றே அந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன.

இவ்வாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய தொ.தொடர்புத் துறையிடம் கேட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முன்னெச்சரிக்கை அறிவுரை ஏற்று பல வகையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

Posted: 25 Aug 2007 06:54 AM CDT

தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

சல்மான்கான் கைது: ஜோத்பூர் விமானநிலையத்தில்

Posted: 25 Aug 2007 03:16 AM CDT

1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.

முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.


Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times