Saturday, August 25, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஐதராபாத்தில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு : 50 பேர் பரிதாப பலி

Posted: 25 Aug 2007 01:55 PM CDT

ஐதராபாத் : ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளில் ஒருபாவமும் அறியாத 50 அப்பாவிகள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புக்கள் சேதமடைந்து படுகாயமடைந்தனர். முதல் குண்டுவெடிப்பு தலைமைச்செயலகம் அருகிலுள்ள லும்பின் பூங்காவில் இரவு 07.45 மணியளவில் நிகழ்ந்தது. இப்பூங்கா பகுதியில் குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர். மற்றொரு குண்டு அடுத்த 15 நிமிடம் கழித்து கோகுல் சாட் பந்தரில் இரவு 08.15 மணியளவில் வெடித்தது. பயங்கரவாதிகள் சமீபகாலங்களில் தென் மாநிலங்களைக் குறிவைக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக கர்நாடாகாவில் பெங்களூரூவையும், ஆந்திராவில் ஐதராபாத்தையும் தீவிரவாதிகள் இலக்காகக் கொண்டு தாக்கி வருகின்றனர். இவ்விரு நகரங்களும் விஞ்ஞான, தொழில்நுட்ப துறைகளில் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இவ்வளர்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர்.சம்பவ இடத்தினை நாளை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பார்வையிடுகிறார்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தனது கடும் கண்டன வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார்.


- - தினமலர்

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்

Posted: 25 Aug 2007 11:01 AM CDT

அமீரகத்தில் பொதுமன்னிப்பு பெற்ற 45,000 இந்திய தொழிலாளர்கள்


ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் சட்ட விரோதமாக இருந்து வந்த 45,000 இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரக அலுவலகங்கள் அவசர சான்றிதழ் வழங்கியுள்ளதாக இந்திய வெளிநாடு வாழ் இந்திய நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தொலைபேசி மூலம் கல்ப் நியூஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இதுவரை 28,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தாயகம் திரும்பி விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்க சிறப்பு விமான சேவை ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

பொதுமன்னிப்பு பெற்ற தொழிலாளர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அதனைத் தொடர்ந்து கேரளா,தமிழ்நாடு ஆகியவை.

http://www.gulfnews.com/nation/Immigration_and_Visas/10148918.html
Special flights to take home amnesty seekers

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை

Posted: 25 Aug 2007 10:44 AM CDT

ஷார்ஜாவில் இந்திய தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை


ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் என்றழைக்கப்படும் ஷார்ஜாவில் அமையப்பற்றுள்ள குவைத்தி மருத்துவமனையில் கையில் படுகாயமடைந்த இந்திய கட்டுமானத் தொழிலாளருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரம் செய்யப்பட்டதாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சகர் அல் முல்லா தெரிவித்தார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விரல் அசைவுகள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பிசியோதெரபி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Rare surgery at Sharjah hospital

http://www.khaleejtimes.com/DisplayArticleNew.asp?xfile=data/theuae/2007/August/theuae_August690.xml§ion=theuae&col=

ஹைதராபாத்: அடுத்தடுத்து இரு குண்டு வெடிப்புகள்.

Posted: 25 Aug 2007 10:23 AM CDT

சற்றுமுன் ஹைதராபாத் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருகுண்டுவெடிப்புகளில் ஐவர் கொல்லப்பட்டும், பன்னிருவருக்கும் மேலானோர் காயமடைந்துமிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மாநிலத்தலைமையகம் அருகிலுள்ள லும்பினி பூங்காவில் முதல் குண்டும், 15 நிமிடங்களில் கோகுல்சாட்பந்தர் என்னுமிடத்தில் அடுத்த குண்டும் வெடித்ததாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது

அமெரிக்க டென்னிஸ்: இரட்டையர் இறுதிகளில் சானியா, மகேஷ் பூபதி .

Posted: 25 Aug 2007 10:00 AM CDT

அமெரிக்காவில் உள்ள நியூ ஹெவன் நகரில் பைலட் பென் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா இதில் ஒற்றையர் ஆட்டத்தில் தோற்றாலும் இரட்டையர் போட்டியில் இத்தாலியை சேர்ந்த மரியா சாண்டன் ஜெலோவுடன் இணைந்து விளையாடி வென்று வருகிறார்.

இன்று நடந்த அரை இறுதியில் சானியா ஜோடி 2-6, 6-3, 10-5 என்ற கணக்கில் ஸ்டுபாஸ்- பெஸ்சக் ஜோடியை வென்றது. இறுதிப்போட்டியில் சானியா இணை கியூபர்-சாராபிளாக் ஜோடியை எதிர் கொள்கிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் மகேஷ்பூபதி (இந்தியா) ஜிமோன்விக் (செர்பியா) ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இணை 7-5, 7-6(7-2) என்ற நேர் செட்கணக்கில் பிஷர்- புரோடராக் ஜோடியை வென்றது.

மாலைமலர்

BCCI, ICL இடையே போட்டி ஆட்டங்கள் - லாலு யோசனை.

Posted: 25 Aug 2007 08:28 AM CDT

மத்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), இந்திய கிரிக்கெட் குழுமம் (ICL) ஆகியவற்றுக்கிடையே ஆரோக்கியமான போட்டி ஆட்டங்கள் வைக்கலாம் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் யோசனை தெரிவித்துள்ளார்.

ICL என்றில்லாமல் யார் கேட்டாலும், இரயில்வேயின் விளையாட்டு மைதானங்களை, அவர்கள் உரிய வாடகை தரும்பட்சத்தில் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் அவர்.

மேலும் " BCCI, ICL என்றில்லாமல், சிறப்பாக ஆடும் வீரர்களே நாட்டின் கிரிக்கெட் வீரர்களாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்றார் லாலு.

பி/டி/ஐ/ செய்திக்குறிப்பு

மத்திய அரசியல்: வலுவிழந்த புயல்

Posted: 25 Aug 2007 08:21 AM CDT

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சித்தலைவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தனர். "ஒப்பந்தத்தை அப்படியே கிடப்பில் போடாவிட்டால் நடப்பதே வேறு'' என்று மிரட்டினார்கள். இதனால் எந்த நேரத்திலும் மத்தியில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கம்யூனிஸ்டுகளின் பூச்சாண்டி மிரட்டல்களுக்கு காங்கிரஸ் கொஞ்சமும் பயப்படவில்லை. நெருக்கடியை நினைத்து அலட்டிக்கொள்ளவும் இல்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு படி மேலே சென்று, "முடிந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று சவால்விட்டார்.

இந்திய கம்யூனிஸ்டு, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்று விடலாம் என்று உறுதியாக தெரிவித்தன. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஒருமித்த கருத்து இல்லை.

பிரகாஷ்கரத், சீதாராம் யெச்சூரி, ஜோதிபாசு போன்றவர்கள் ஆதரவை வாபஸ் பெறக்கூடாது சும்மா மிரட்டி காரியத்தை சாதித்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். ஆனால் மத்திய குழு உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் காங்கிரசை ஆதரிக்கக் கூடாது என்றனர். இந்த கருத்து வேறுபாடு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எந்த முடிவும் எடுக்க முடியாமல் கடந்த 4 நாட்களாக திணறியது.

இதற்கிடையே இடது சாரிகளின் போக்கு மக்களிடம் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்தது. தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காது என்பதும் தெரிய வந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் வேறு வழி தெரியாமல் பணியத் தொடங்கி உள்ளனர்.

அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தி விடும் என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது மெல்ல தொனியை குறைத்து விட்டனர். அவர்களிடம் இருந்த கடுமை காணாமல் போய்விட்டது.

நேற்று முன்தினம் வரை கம்யூனிஸ்டுகள் பேச்சில் கம்பீரம் தெரிந்தது. எங்களுக்கு தெரியாமல் எதுவும் பேசக்கூடாது.

வியன்னா மாநாட்டில் இந்திய பிரதிநிதியை கண்காணிப்போம். மத்திய அரசை இஷ்டத்துக்கு செயல்பட அனுமதிக்க முடியாது. எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சுருதி நேற்று திடீரென மாறியது. இடது சாரிகளை கழற்றி விட்டுவிட காங்கிரஸ் நேற்று தயாரானதும், கம்யூனிஸ்டுகள் கொஞ்சம் ஆடி போய்விட்டனர். தேர்தலை சந்திக்கலாமா வேண்டாமா என்று நேற்றிரவு சோனியா ஆலோசித்ததும் இடதுசாரிகள் "கப்-சிப்'' என ஒடுங்கி விட்டனர்.

நேற்றிரவு கம்யூனிஸ்டு தலைவர்களிடம் நிருபர்கள் பேசியபோது, "மத்திய அரசுக்கு நெருக்கடியா? அப்படி எதுவும் இல்லையே'' என்றனர். அவர்களது பதில், "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' என்று சொல்லும் ரீதியில் இருந்தது.

சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டவர்கள் போல மாறி விட்ட கம்ïனிஸ்டு தலைவர்களுடன் அடுத்த வாரம் சோனியா பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. அப்போது அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராய கமிட்டி நியமிக்க முடிவு செய்வார்கள். இதை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகள் அமைதியாகி விடுவார்கள் என்று தெரிகிறது.

திடீர் பூதமாக கிளம்பிய அணுசக்தி சர்ச்சையால் மன்மோகன்சிங்தான் ஒரு வலுவான பிரதமர் என்பதை நிரூபித்துள்ளார். அதோடு அடிக்கடி பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு "செக்'' வைத்துள்ளார்.

அதே சமயத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கிளறி விட்டதால் பிரகாஷ்காரத் போன்ற மூத்த தலைவர்களுக்கு மத்திய குழுவில் கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. இதனால் பதவியை காப்பாற்றி கொள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் தற்போது போராடி கொண்டிருக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

குடும்பச்சண்டையால் கேபிள் நிறுவனமா? - ஜெ. தாக்கு!

Posted: 25 Aug 2007 08:12 AM CDT

தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்ப சண்டையால்தான் தமிழக அரசு கேபிள் நிறுவனம் துவக்கியுள்ளது என அ. தி. மு.க., பொதுசெயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
" 2006 ல் மக்கள் நலனுக்காக கொண்டு வந்தபோது இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என அப்போதைய மத்தியஅமைச்சர் தயாநிதியும் , கருணாநிதியும் கவர்னரை சந்தித்து இந்த சட்டத்தை நிறைவேற்றக்கூடாது என வற்புறுத்தினர். ஆனால் தயாநிதி மற்றும் கருணாநிதி மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பின்னர் தமிழக அரசு கேபிள் டிவி., நிறுவனத்தை ஏற்படுத்துகிறது"
என்று அவர் கூறியுள்ளார்.

தினமலர்

வினாத்தாளையும் விட்டுவைக்காத விளம்பரங்கள்.

Posted: 25 Aug 2007 07:59 AM CDT

பள்ளி மாணவர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் கேள்வித் தாளில் துணிக்கடை, தீம் பார்க் ஆகியவற்றின் விளம்பரங்கள் அச்சிடப்பட்டது கேரளாவில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் சயின்ஸ் கேள்வித்தாளில் பல நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு அரசு பள்ளிகளில் வினியோகிக்கப்பட்டது. இது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏழாம் வகுப்பு வரை உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அங்கீகரிக் கப்படவில்லை. எனவே, இப்பாடத்தில் நடத்தப்படும் தேர்வும் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று பள்ளிகள் கருதுகின்றன. ஆனால், தேர்வு நேரத்தில் இதற்கான கேள்வித் தாளில் கல்வித் துறையே விளம்பரங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வினியோகிப்பது தான் கொடுமை. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்வில் தான் இந்த அத்துமீறல் நடந்துள்ளது. சில பள்ளிகள் இத்தகைய கேள்வித்தாள்களை வாங்க மறுத்து விட்டன. சில பள்ளிகள் ஆசிரியர்களே தயாரித்த கேள்வித்தாள்களை உபயோகப்படுத்தின. கல்வி அமைச்சரின் உத்தரவின் பேரில் இது நடந்ததா அல்லது அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவா என்பது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது.

தினமலர்

இந்தியா: 16 வயதுக்குக் கீழ் கை பேசி வேண்டாம் - அறிவுறுத்தல்

Posted: 25 Aug 2007 07:51 AM CDT

அலை பேசிகளிலிருந்து வெளியாகும் மின் காந்த கதிர்வீச்சு, காதில் உள்ள மென்மையான திசுக்களை வெப்பமடைய செய்யும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 16 வயதுக்கு உட்பட்டவர்களை அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்த இந்திய தொலைத்தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.

அலைபேசிகளிலிருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இதை தடுக்க எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொ.தொ. துறையின் தொலை தொடர்பு பொறியியல் வல்லுனர் மையம் சில வழிகாட்டு குறிப்புகளை தயார் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மொபைல் போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு, மனிதர்களின் காதில் உள்ள திசுக்களை வெப்பமடைய செய்து விடும். இது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். 16 வயதுக்கு உட்பட்டவர்களின் திசுக்கள் மிகவும் மென்மையானவை. அவர்கள் மொபைல் போனை பயன்படுத்தினால் பிரச்னை ஏற்படும். எனவே, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் மொபைல் போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தொலை தொடர்பு நிறுவனங்கள் வலியுறுத்த வேண்டும்.இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமான டவர்களை அமைத்து, அவற்றில் ஆன்டனாக்களை அதிக அளவில் பொருத்தி வருகின்றனர். இதனாலும் மின்காந்த கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்படும். எனவே, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகே இதுபோன்ற டவர்களை ஏற்படுத்த கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
.இவ்வாறு டெலிகாம் துறை கூறியுள்ளது.டெலிகாம் துறையின் இந்த நடவடிக்கை குறித்து தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியதாவது:
அறிவியல் ஆதாரம் இல்லாமல் இது போன்ற அறிவுரைகளை வெளிப்படுத்துவதால் இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு பெரிதும் பாதிக்கப்படும். ரேடியோ கதிர்வீச்சு அலைகள் மற்றும் மொபைல் தொடர்பு ரேடியோ கதிர்வீச்சு அலைகள் குறித்து பல ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ள அளவுக்கும் குறைவான கதிர்வீச்சு அலைகளால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்றே அந்த ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியுள்ளன.

இவ்வாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

இது குறித்து இந்திய தொ.தொடர்புத் துறையிடம் கேட்ட போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த முன்னெச்சரிக்கை அறிவுரை ஏற்று பல வகையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளன. எனவே, இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர்

இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

Posted: 25 Aug 2007 06:54 AM CDT

தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

சல்மான்கான் கைது: ஜோத்பூர் விமானநிலையத்தில்

Posted: 25 Aug 2007 03:16 AM CDT

1998இல் நடந்த சிங்காரா மான் வேட்டை வழக்கில் தனது பிணைமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் காவலர்களிடம் சரண் அடைவதற்காக ஜோத்பூர் வந்த இந்தி நடிகர் சல்மான்கானை விமானநிலையத்திலேயே கைது செய்தனர்.

முன்னதாக தனது குடும்பத்தினருடனும் வழக்கறிஞருடனும் காலை 1130 மணி ஜோத்பூர் விமானத்தில் புறப்படவிருந்த சல்மான் நிருபர்களிடம் பேசும்போது தன்மீது பிணையில் எடுக்கமுடியாத கைது ஆணை பிறப்பிக்கபட்டிருப்பதால் தனது சட்ட ஆலோசகர்கள் சரண் அடையுமாறு அறிவுறுத்திருக்கிறார்கள் எனக் கூறினார். ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனாக நானே அங்கு சென்று சரண் அடைவேன் என்றும் மேலும் கூறினார்.


Salman Khan arrested at Jodhpur airport-Politics/Nation-News-The Economic Times

Friday, August 24, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

Posted: 24 Aug 2007 04:22 PM CDT

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில்...

visit satrumun.com

எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு

Posted: 24 Aug 2007 03:38 PM CDT

தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர். தினமணி Leptospirosis claims 34 lives in Gujarat NDTV.com:...

visit satrumun.com

வெற்றியின் வாயிலில் இந்தியா

Posted: 24 Aug 2007 03:24 PM CDT

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர்...

visit satrumun.com

பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது

Posted: 24 Aug 2007 11:14 AM CDT

2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக...

visit satrumun.com

பூவுலகில் பூதவுடலை விட்டுப் பிரியும் அனுபவம்

Posted: 24 Aug 2007 10:57 AM CDT

மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது. மரிக்கும் தறுவாயில் நிகழ்வதாக சொல்லப்பட்ட தரிசனங்களுக்கு விஞ்ஞானம் இதன் மூலம் விடை அளித்து, அனைவரையும் மாய பிம்பங்கள் மூலம் அனுபவிக்கவும் (PSYCHOLOGY: Out-of-Body Experiences Enter the...

visit satrumun.com

இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'

Posted: 24 Aug 2007 10:50 AM CDT

இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை...

visit satrumun.com

அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் - நாஞ்சில் சம்பத்

Posted: 24 Aug 2007 08:08 AM CDT

நாசரேத், ஆக. 24- வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பது பா.ம.க. வின் வழக்கம். அதனால், டாக்டர் ராமதாஸ் விரைவில் எங்கள் அணிக்கு வந்து விடுவார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ம.தி.மு.க.வின் 14-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது....

visit satrumun.com

சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி

Posted: 24 Aug 2007 06:26 AM CDT

சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல்...

visit satrumun.com

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி

Posted: 24 Aug 2007 02:42 AM CDT

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி காங்-அதிமுக தொண்டர்கள் அடிதடி கொடுப்பாவி எரிப்பு-2 எம்எல்ஏக்கள் கைது ஆகஸ்ட் 24, 2007 சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் போராட்டம் நடத்தச் ெசன்ற...

visit satrumun.com

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;

Posted: 24 Aug 2007 02:38 AM CDT

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது; 17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு! ஆகஸ்ட் 24, 2007 திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித்...

visit satrumun.com

ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

Posted: 24 Aug 2007 01:49 AM CDT

பிரதமர் மன்மோகன்சிங்கைஅவதூறாக பேசிய ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருவர்உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று கைதுசெய்யப்பட்டனர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அறிக்கைவெளியிட்டஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் குடியேற வேண்டும்...

visit satrumun.com

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2007 01:40 AM CDT

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக்...

visit satrumun.com

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்

Posted: 24 Aug 2007 01:20 AM CDT

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு...

visit satrumun.com