Tuesday, May 22, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைது

Posted: 22 May 2007 04:39 PM CDT

கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தில்லியில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போதைத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் 1.5 கிராம் போதைப் பொருளை அவருடைய வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம்.

இந்த சம்பவத்தின்போது மணீந்தர் சிங் வீட்டில் போதைப் பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் சயம் சித்திக் என்பவரையும் கைது செய்தனர். போதை பொருள் விற்பனையில் தொடர்புடைய நைஜீரிய பிரஜையை காவல்துறையினர் பின்தொடர்ந்தபோது அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் அது மணீந்தர் சிங்கின் வீடு என அவர்களுக்குத் தெரிந்தது.

இடதுகை சுழற் பந்துவீச்சாளரான மணீந்தர், 35 டெஸ்ட் போட்டிகளிலும், 59 ஒருதினப் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்துவருகிறார்.

தினமணி

வறுமைக் கோட்டுக்குக் கீழே மேற்கு வங்க மாநில ஆளுநர்

Posted: 22 May 2007 04:35 PM CDT

மேற்கு வங்க மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இத் தகவலை அவரே வெளியிட்டார். அப்போது அவர், எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருப்பது தெரிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றார்:

ராய்கஞ்ச் நகரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

மத்திய அரசு உயர் அதிகாரியாகவும், பல்வேறு நாட்டு தூதரகங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது பேரனின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு, ஏழைகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதை அறிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு மாநிலத்தின் ஆளுநரான தனது பேரன் ஆளுநர் மாளிகையில் வசிக்காமல், ராய்கஞ்ச் போன்ற குக்கிராமத்தில் வசிப்பதை எண்ணி பெருமைப்பட்டிருப்பார்.

இது போன்ற செயலை நகைச்சுவை உணர்வு மிகுந்த அல்லது சமுதாயத்தில் சமதர்மம் மலர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற தவறை அதிகாரிகள் தவிர்த்திருக்கலாம் என்றார்.

உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் நகராட்சியின் 9-வது வார்டில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களில் 23-வது பெயராக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் 6 பேர் இருப்பதாகவும் அதில் உள்ளது. இது குறித்து ராய்கஞ்ச் நகர்மன்றத் தலைவர் மொஹித் சென்குப்தாவிடம் கேட்டதற்கு, பட்டியலில் இடம் பெற்றிருப்பது பிகாரில் இருந்து வந்து துணி வியாபாரம் செய்த கோபாலகிருஷ்ண காந்தி என்பவராக இருக்கலாம் என்றார்.

தினமணி

பரிசல்களில் ஓட்டை போட்ட போலீஸ்: பரிசலோட்டிகள் சாலை மறியல்

Posted: 22 May 2007 04:18 PM CDT

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பரிசல் துறை, அதனை ஒட்டியப் பகுதிகளில் பரிசலோட்டிகள் தங்கள் பரிசல்களை கவிழ்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில் பயணிகளுக்கு இடையூறாக வழித்தடத்தில் பரிசல்களை கவிழ்க்கக் கூடாது என பென்னாகரம் டிஎஸ்பி ஜெ.லட்சுமணசுவாமி திங்கள்கிழமை மாலை நேரில் வந்து எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி அப் பகுதியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பரிசல்களில் துளையிட்டு போலீசார் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பரிசலோட்டிகளின் ஜீவாதாரமான பரிசல்களை சேதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பரிசல் ஓட்டிகள், செவ்வாய்க்கிழமை காலை ஒகேனக்கல் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சேதப்படுத்திய பரிசல்களை சாலையில் போட்டு வைத்தனர்.

காலை 6 முதல் பகல் 11 மணி வரை மறியல் போராட்டம் நடைபெற்றதால் ஒகேனக்கல் பகுதிக்குள் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. பரிசலில் செல்வதற்காக ஆர்வமுடன் பரிசல் துறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி

ச:கோராக்பூரில் குண்டுவெடிப்பு

Posted: 22 May 2007 10:13 AM CDT

உத்திரப்பிரதேசம் கோராக்பூரில் மூன்று நாட்டுவெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். மேலதிக விபரங்கள் ஏதும் தெரியவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Six hurt as bomb blasts rock Gorakhpur The Hindu

ச: ஜெ மீது நடவடிக்கை - தமிழக அரசு

Posted: 22 May 2007 11:58 AM CDT

அனுமதி பெறாமல் கொடநாடு எஸ்டேட்டில் கட்டிடம் கட்டியதற்காக ஜெயலலிதாமீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோத்தகிரி பஞ்சாயத் யூனியன் தலைவர் ராஜுவின் புகாரின்பேரில் நீலகிரி கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று கலெக்டரின் ஆணைப்படி ஆய்வுசெய்ய சென்றவர்களை, வீட்டில் ஜெயலலிதா இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டது.

T. Nadu Govt. to take legal action against Jayalalithaa The Hindu

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரூ. 4700 கோடி மென்பொருள் ஏற்றுமதி

Posted: 22 May 2007 11:30 AM CDT

இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதி ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. இது 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் சுமார் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடிகளாக உயரும் என மத்திய வர்த்தகத் துறையின்கீழ் செயல்படும் 'எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி கவுன்சில்' என்ற அமைப்பின் செயல் இயக்குநர் டி.கே. சரீன் தெரிவித்தார்.

2007-ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4700 கோடி மதிப்பிலான மென்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் இது ரூ. 3430 கோடியாக இருந்தது என்றார்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மென்பொருள்களில் 65 சதவீதம் அமெரிக்காவுக்கும், 25 சதவீதம் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தினமணி


இந்தியாவுடனான வர்த்தகம் வளர்முகம்: சவூதி

சவூதி அரேபியா, 2000-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்துள்ளது. 2005-ம் ஆண்டில் இந்தியாவுடனான ஏற்றுமதி ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என சவூதி வர்த்தக அமைச்சகத்தின் செயலர் அப்துல்லா அல் அம்முதி தெரிவித்தார். இதை லண்டனைச் சேர்ந்த அராபிக் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ச: இரயில் பெட்டிகளில் இருமொழித்திட்டம் அமல் ?

Posted: 17 May 2007 08:42 AM CDT

அண்மையில் இரயில்வே அமைச்சகம் விடுத்த ஒரு சுற்றறிக்கையின்படி இரயில் பெட்டிகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் வைக்கப்படவேண்டுமென்றும் தமிழ்நாட்டில் செல்கின்ற இரயில்களில் மட்டும் தமிழிலும் எழுதப் படும் என்ற செய்தியைக் கொண்டு ஒரிசா மாநில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்படுத்தினர். ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் தனிச் சலுகை, எங்கள் ஊரிலும் ஒரியாவில் எழுதப் பட வேண்டுமெனக் கோரினர். பிற மாநில உறுப்பினர்களும் அவைநாயகரும் கூட புழக்கத்தில் இருக்கும் மூன்றுமொழி பெயர்ப்பலகைகளை கைவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் உடனேயே அந்தச் சுற்றறிக்கையை வாபஸ் வாங்குவதாக அவைக்கு உறுதி கூறினார். ஆனால் சற்று நேரத்தில் திரும்பிவந்து அந்த சுற்றறிக்கை நாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டத்தின் படியும் ஆட்சிமொழி சட்டத்தின்படியும் இயற்றப் பட்டிருப்பதால் மீட்க முடியாது என்று தெளிவுபடுத்தினார். இருப்பினும் உறுப்பினர்களின் உணர்வை மதித்து அடுத்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி சட்டதிருத்தம் முன்வைப்பதாக கூறினார்.


மேலும்..Flip-flop over 3rd language for train names

ச: தமிழக போலீஸ் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 03 Apr 2007 01:53 PM CDT

தமிழக காவல்துறை உயரதிகாரி பிரேம் குமாருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒருமாத காலம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1981 ஆம் ஆண்டு, மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் பிரேம் குமார் காவல்துறை துணை ஆய்வாளராக இருந்தபோது, அந்த ஊரில் இருவருக்கிடையிலான தனிப்பட்ட தகறாறு தொடர்பான புகார் ஒன்று அவரிடம் வந்தது. அந்த புகாரில் சம்பந்தப்பட்ட முன்னாள் ராணுவவீரரை பிரேம் குமார் பகிரங்கமாக அடித்து, கைகளை கட்டி வீதியில் அவமானப்படுத்தி அழைத்துச் சென்ற விதம் மனித உரிமை மீறல் என்று சம்பந்தப்பட்ட ராணுவ வீரர் பிரேம் குமார் மீது வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், பிரேம் குமாருக்கு ஒருமாதம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அதிகபட்ச செல்வாக்குடன் இருந்த பிரேம்குமார், தற்போதைய திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்தவர் பிரேம் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


BBC

☈ அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை

Posted: 06 Apr 2007 07:11 AM CDT

முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல என்று அலகாபாத் ஐகோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து உ.பி., அரசு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் பெஞ்ச் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தினமலர்

சங்கராச்சாரியாரை கைது செய்த எஸ்.பி.பிரேம்குமார் திடீர் டிஸ்மிஸ்

Posted: 15 Apr 2007 03:34 PM CDT

ஏப்ரல் 15, 2007

சென்னை: சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்புக்குள்ளான எஸ்.பி. பிரேமகுமார் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

21 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் நல்லகாமன் என்பவரையும் அவரது மகனையும் தாக்கி ரோட்டில் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது, ராணுவ வீரரின் மனைவியை தாக்கியது மற்றும் பெண் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது ஆகிய வழக்குகளில் சமீபத்தில் பிரேமகுமாருக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


21 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வந்த பிரேம்குமாரை நீதிமன்றத்தில் சரணடையவும், அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் நேரில் சந்தித்த பிரேம்குமார், அவரை தப்பிச் செல்லுமாறு கூறி சிக்கலில் மாட்டினார். அந்த விவகாரத்தில் பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

இப்போது நல்லகாமன் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றுள்ளார் பிரேம். இதையடுத்து அவரை பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

அரசு ஊழியர் நன்னடத்தைப் பிரிவு 3 (11)ன் கீழ் பிரேம்குமார் மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

இந்தப் பிரிவின்படி எந்த விளக்கமும் கேட்காமலேயே பதவி நீக்கம் செய்ய முடியும். தேச துரோக செயல்களுக்குத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது பிரேம் குமார் மீது இந்தப் பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

"Thatstamil"

ச: நுழைவுத் தேர்வு தேவை இல்லை. ஐகோர்ட் தீர்ப்பு

Posted: 28 Apr 2007 12:38 AM CDT

நுழைவுத்தேர்வு இல்லை! * தமிழக அரசின் சட்டம் செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு * பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது

சென்னை: "தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டம் செல்லும்' என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நுழைவுத் தேர்வு இல்லை என்று முடிவானதால் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் கவலை தீர்ந்தது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான நுழைவுத் தேர்வு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. "நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்; நகர்ப்புற மாணவர்களே பலனடைகின்றனர்' என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது நுழைவுத் தேர்வை ரத்து செய்து இரண்டு முறை தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

தி.மு.க., அரசு பதவியேற்ற உடன், நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிந்துரைக்க முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து தரப்பிலும் கருத்துக்களை கோரியது. வெவ்வேறு போர்டு தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்களை எப்படி சமன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்தது. கடைசியில் அரசுக்கு தனது அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில், நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இச்சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மாணவர் அஸ்வின்குமார் உள்ளிட்ட நால்வரும், ஆதரித்து பா.ம.க., மாணவர் அணி, திராவிட கழகம் ஆகியவையும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை முதலில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. பின்னர் இவ்வழக்கு நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு மாற்றப்பட்டது. தமிழக அரசு சார்பில் அட்வகேட்ஜெனரல் விடுதலை, கூடுதல் அட்வகேட்ஜெனரல் கண்ணதாசன், சிறப்பு அரசு பிளீடர் சேகர், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன், உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வக்கீல் சிங்காரவேலன், பா.ம.க., சார்பில் சீனியர் வக்கீல் ரவிவர்மகுமார், வக்கீல் ஜோதிமணி, தி.க., சார்பில் வக்கீல்கள் தியாகராஜன், வீரசேகரன், ஆகியோர் ஆஜராயினர். இவ்வழக்கில் கடந்த 11ம் தேதி தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்தது. பொதுவான உத்தரவை முதலில் நீதிபதி மிஸ்ரா வாசித்தார். பின்னர் நீதிபதி சம்பத்குமார் கூடுதலாக தனது உத்தரவை வாசித்தார். "நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என்றும் இதை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தனர். கட்டடக்கலை படிப்பில் சேரும் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் திறன் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், திறன் தேர்வு ரத்து பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே அதை நடத்த வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை மறுக்க முடியாது. அதை நிறைவேற்ற வேண்டும்.சமூக நீதியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று நீதிபதி சம்பத்குமார் கூறினார்.

தினமலர்

ச: கொலை வழக்கில் லாலு கட்சி எம்.பி., க்கு ஆயுள் தண்டனை

Posted: 08 May 2007 03:19 AM CDT

சிவான் : 1999ம் ஆண்டு சி.பி.ஐ.( எம் எல் ) கட்சி ஆதரவாளர் சோட்டேலால் கும்தா என்பவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லாலு கட்சி எம்.பி., சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

தினமலர்

தில்லியில் மூன்றாவது மாடி கட்ட அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் ஆணை

Posted: 09 May 2007 08:58 AM CDT

புதுதில்லி, மே 9: தில்லி மாநகராட்சியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டாவது மாடிக்கு மேல் கட்ட இனி அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே இனி மூன்றாவது மாடிகளைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

Dinamani

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை - அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

Posted: 09 May 2007 09:03 AM CDT

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை).

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல், ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது, சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது, திருட்டு, கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல், உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல், ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தினமணி - முழு விவரங்கள்

அர்ச்சகர் பள்ளிகள் இடைக்கால தடைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Posted: 16 May 2007 04:30 PM CDT

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி வழங்க தடை விதிக்கக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்' என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதற்கு உதவும் வகையில் அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற அர்ச்சகர்கள் பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆதி சைவ சிவாச்சாரியார் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்க செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Dinamalar

'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காவல்துறைக்கு மூன்று கோடி ரூபாய் செலவு

Posted: 30 Apr 2007 09:24 AM CDT

ஷில்பா ஷெட்டியினால் இந்தியாவிலும் கவனிக்கப்பட்ட 'பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சியினால் காவல்துறைக்கு ஏற்படும் செலவுகளின் விவரம் வெளியாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் £350,000 செலவாகியுள்ளது.

BBC NEWS | UK | England | Beds/Bucks/Herts | Big Brother police costs revealed

ஆசிய கிராண்ட் பிரீ: முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் பங்கேற்பு

Posted: 22 May 2007 11:13 AM CDT

ஆசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில் முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் திலிப் ரோஜர் (22) பங்கேற்கிறார். ஆறு சுற்றுகள் கொண்ட ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை திலிப் ரோஜர் பெறுகிறார்.

ஹோண்டா சிபிஆர் 600 சிசி மோட்டார் சைக்கிளில் இவர் பந்தயத்தில் பங்கேற்கிறார். இப்போட்டியின் முதல் சுற்று இந்தோனேசியாவில் ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பருவத்தில் உயர்நிலைப் போட்டிகளில் திலிப் பங்கேற்பது இதுவே முதல் தடவை.

இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கும் இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி

கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார்.

Posted: 22 May 2007 12:51 AM CDT

சென்னை நகர காவல்துறையில் புதிதாக 2வது கூடுதல் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார். சென்னை நகர ஆணையராக லத்திகா சரண் உள்ளார். இவரது பணிகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக கூடுதல் ஆணையராக ஜாங்கிட் உள்ளார். இந் நிலையில் தற்போது 2வது கூடுதல் ஆணையர் பதவியை திமுக அரசு உருவாக்கியுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை நகரில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தியபோது சுனில்குமாரை ஸ்டாலின் தள்ளி விட்டதாக சர்ச்சை கிளப்பப்பட்டது. ஸ்டாலின் மீது புகார் தருமாறு சுனில்குமாரை ஜெயலலிதா அரசு நெருக்கியது. ஆனால், ஸ்டாலின் என்னை தள்ளிவிடவில்லை என்று கூறிய சுனில்குமார், இது தொடர்பாக புகார் தரவும் மறுத்துவிட்டார். இதனால் இவரை அதிமுக அரசு ஓரங்கட்டி வைத்தது. அந்த சுனில்குமார்தான் தற்போது 2வது கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போக்குவரத்துப் பிரிவை கவனிப்பார். ஜாங்கிட் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவை கவனிப்பார். இதேபோல மத்திய சென்னை இணை ஆணையர் பதவிக்கு புதிதாக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

ச:மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி

Posted: 03 May 2007 05:35 AM CDT

ஐரோப்பிய கோப்பைக்கான அரையிறுதியில் நேற்று நடந்த இரண்டாம் சுர்று ஆட்டத்தில் ஏசி மிலன் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் குழுவை 3-0 என்ற ஆட்டக் கணக்கில் வென்று இரண்டு சுற்றிலுமாக 5-3 என்ற கணக்கில் ஆட்ட இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. முன்னதாக லிவெர்பூல் அணி இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும்...

Monday, May 21, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ச:மாதாவுக்கு வைர கிரீடம்

Posted: 21 May 2007 03:16 PM CDT

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் பொருத்தப்பட்டது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதாவுக்கு பாரம்பரிய வைர கற்களால் கலை நயமிக்க வைர கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கிரீடம் தயாரிக்கும் பணி 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இடைவிடாது ஏழு நபர்கள் கொண்ட குழுவால் இந்த மாதம் முடிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரக் கற்கள் அனைத்தும் விலை மதிப்பற்றவை. கிரீடம் பொருத்தப்பட்ட பின், தேவாலயத்தில் தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருவதாகவும், பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளதாகவும் பேராலய அதிபர் சேவியர் அடிகள் தெரிவித்தார்.

தினமலர்

ச:'பதவி விலகத் தயார்' டி. ஆர். பாலு

Posted: 21 May 2007 03:11 PM CDT

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன்று 'ராமர் சேது மனிதனால் உருவாக்கப்பட்டது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப் பட்டால் பதவி விலகத் தயார்.' என அறிக்கை விடுத்துள்ளார்.

"Some fundamental organisations have claimed that NASA had taken the picture of Ramar Sethu and said that it was a man-made structure.

"If it was scientifically proved and NASA said it was man-made, then I will quit", Baalu told reporters here.

Baalu offers to quit if Ramar Sethu proved to be man-made The Hindu

ச:கலைஞர் டி.வி உதயமாகிறது?

Posted: 21 May 2007 11:21 AM CDT

முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ராஜ் டிவி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து வெகு விரைவில் ஒரு புதிய சேனலை ஆரம்பிக்கவுள்ளன. கலைஞர் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும். கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களை கவரும் முன்னணி சேனலாக இருக்கும் என்றார்.

தாட்ஸ்தமிழ்

வெனிசுவேலாவில் தொலைக்காட்சி நிலையத்தின் உரிமம் ரத்து: மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 May 2007 10:32 AM CDT

ஆர்சிடிவி (RCTV) வெனிசுவேலாவில் இயங்கிவரும் தனியார் தொலைக்காட்சியாகும். அதிபர் ஹ்யூகோ சாவஸ் இந்த தொலைக்காட்சி நிலையத்தை மூட உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2002-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆர்சிடிவி துணை போனதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், துன்மார்க்க நெடுந்தொடர்களினால் கலாச்சாரம் சீர்கேட்டுக்கு உள்ளாவதை காரணங்காட்டி, மே 27 காலாவதியாகும் உரிமத்தை நீட்டிக்க மறுத்துள்ளார்.

ஆர்சி டிவிக்கு பதிலாக அரசே புதிய தொலைக்காட்சியைத் துவங்க இருக்கிறது.

BBC NEWS | Americas | Venezuelans rally for TV station: "Tens of thousands of Venezuelans have rallied in the streets of Caracas to protest against President Hugo Chavez's plans to close a private TV station."

ச:குருவாயூர் கோவில் மீது வழக்கு

Posted: 21 May 2007 10:05 AM CDT

மத்திய மந்திரி வயலார் ரவியின் மகன் கேரளாவின் குருவாயூர் கோவில்மீது வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். முன்னதாக வயலார் ரவியின் குடும்பம் கோவிலில் பூஜை செய்தபோது வயலார் ரவியின் மகனின் மதத்தை உறுதிசெய்ய சான்றிதழ் கேட்கப்பட்டது. ஆனால் அவர் வழங்க இயலாமல் போனது. இதனால் கோவில் நிர்வாகம் தூய்மைபடுத்தும் சடங்கொன்றை நடத்தியது.

Kerala temple ceremony may go to court NDTV

சிவாஜி தமிழ் பெயரா?

Posted: 21 May 2007 09:37 AM CDT

சற்றுமுன் சர்வே முடிவு


முந்தைய சர்வே: கல்விக்கூடங்களில் ராகிங்...

அஸ்ஸாம் குண்டு வெடிப்பு

Posted: 21 May 2007 09:03 AM CDT

அசோமில் உல்பா தீவிரவாதிகள் இன்று காலை 9.30 மணியளவில் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேற்கு அசோமின் பாங்கைகான் மாவட்டத்தில் உள்ள பக்லதான் பஜாரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து, நாசவேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைக் காலமான அசோமில் உல்பா திவீரவாதிகளின் வன்முறை மீண்டும் தலைதூக்கி உள்ளது. கடந்த வெள்ளியன்று கவுஹாத்தி பேன்ஸி பஜாரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.

MSN Tamil

குடும்பத்துடன் இணைந்த 11 மீனவர்கள்.

Posted: 21 May 2007 09:01 AM CDT

இலங்கையிலிருந்து மீண்டு தமிழகம் திரும்பிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் நேற்று தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர். அவர்களை கண்ணீர் மல்க குடும்பத்தினர் வரவேற்றனர். . . .மேலும்

கேபிள் டிவி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted: 21 May 2007 08:56 AM CDT

கோவை அருகே பேரூரில் உள்ள டிசிவி என்ற கேபிள் நிறுவனத்தின் மீது அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இந்த சம்பவத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

இதில் அலுவலகத்தில் இருந்த எலக்ரானிக்ஸ் உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன.

தாக்குதலுக்கு உள்ளான டிசிவி கேபிள் டிவி நிறுவனம், திருப்பூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சிவசாமிக்கு சொந்தமானது.

எம்.எஸ்.என்

திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்: அக்டோபர் முதல் ஒளிபரப்பு

Posted: 21 May 2007 08:48 AM CDT

திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்.

மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.

950 மார்க்குகள் எடுத்தும் மேல் படிப்புக்கு வழியில்லை - துயரத்தில் மாணவி தற்கொலை

Posted: 21 May 2007 08:10 AM CDT

மதுரை, உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியான பாலு. இவரது மனைவி முத்துப் பிள்ளை. இவர்களுக்கு கண்ணன் என்கிற மகனும், அனுராதா, செருவச் செல்வம் (18) ஆகிய மகள்களும் உள்ளனர்.

கண்ணனும், அனுராதாவும் வேலை பார்க்கின்றனர். செருவச் செல்வம் பிளஸ்டூ படித்துள்ளார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் செருவச் செல்வம் 950 மதிப்பெண்கள் பெற்றார்.

பி.எஸ்.சி நர்சிங் படிப்பு படிக்க விரும்பிய செருவச் செல்வம் அம்மாவிடம் விண்ணப்பம் வாங்க அனுமதி கேட்டார். ஆனால் குடும்ப பொருளாதாரம் திருப்திகரமாக இல்லை. இதில் நீ எப்படி மேல் படிப்பு படிக்க முடியும் என தாயார் கூறவே வேதனை அடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து விட்டார். சிகிச்சை பலனளிக்காமல் செருவச் செல்வம் இறந்தார்.

மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் :சஞ்சய் தத்துக்கு சம்மன்.

Posted: 21 May 2007 07:06 AM CDT

நடிகர் சஞ்சய்தத்
மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில், நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 18ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆயுதங்களை கடத்த உதவியதாக 5 பேருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 4 போலீசாருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு : நால்வருக்கு கடுங்காவல்.

Posted: 21 May 2007 06:44 AM CDT

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீசார் நான்கு பேருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிடி கோடே அறிவித்திருந்தார்.இவர்களது தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு, ஒவ்வொரு கட்டமாக தண்டனை வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பில், வெடிகுண்டுகள் போன்ற பயங்கர வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் பாதுகாக்க உதவிய அப்போதைய போலீஸ் கான்ஸ்டபிள்கள் அசோக் முனேஸ்வர், எஸ.ஒய் பல்சிகார், ஆர்.மாலி மற்றும் பி.மகாதிக் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ச: தேவர் சிலை- கமுதியில் மீண்டும் பதற்றம்

Posted: 21 May 2007 04:44 AM CDT

மே 21, 2007

ராமநாதபுரம்: கமுதி அருகே அனுமதியின்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ராமாநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கழுத்தறுவான் கிராம் மற்றும் இடிவிலகி கிராமத்தினர் முடிவு செய்து அங்கு கடந்த வாரம் அனுமதியின்றி மணி மண்டபம் கட்டி 9 அடி வெங்கல சிலையை நிறுவனர். அதற்கு திறப்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறை துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் போலீஸாருடன் அங்கு விரைந்து வந்து அனுமதியின்றி நிறுவிய தேவர் சிலை மணி மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு அப்பகுதியினர் அதிகாரிகளுடனும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவியது. இதனால் அங்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டனர். எனவே சில நாட்களாக அங்கு பதற்றம் குறைந்தது.

இந் நிலையில் இன்று முக்கியஸ்தர்களை வைத்து தேவர் சிலையை திறக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி :
தட்ஸ் தமிழ்

மது விலக்கை கொண்டு வருவது பற்றி கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு.

Posted: 21 May 2007 12:02 AM CDT

தமிழகத்தில் மது விலக்கை படிப்படியாக அமல் படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது பாமக தலைவர் கோ.க. மணியும் உடனிருந்தார்.முதலமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்ததாகவும், தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வருவது பற்றி அப்போது விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.மது பார்களை மூடவும், டாஸ்மாக் மதுக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்கச் செய்ய வேண்டும் என்று கருணாநிதியிடம் தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.இந்திய விமான ஆணையம் மூலமே விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாகச் சொன்ன ராமதாஸ், நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையங்களை (கிரீன் பீல்ட்) சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டார்.இதுதவிர சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்திருப்பது, நதிநீர் இணைப்பு விவகாரம், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

Sunday, May 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

நன்மங்கலத்தில் 1,000 மரங்களை வெட்ட அரசு அதிரடி முடிவு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

Posted: 20 May 2007 02:08 PM CDT

வி. கிருஷ்ணமூர்த்தி

சென்னை நன்மங்கலம் வனப்பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் உள்ள 1,000-க்கும் அதிகமான மரங்களை வெட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தை அடுத்த நன்மங்கலத்தில் சுமார் 900 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளது. இது வனத்துறையால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை, மலையை சார்ந்த வனப்பகுதியான இங்கு இந்திய கொம்பு ஆந்தை, கானான் கோழி, நாமக்கோழி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பறவைகளும், 100-க்கும் அதிகமான அரியவகை மூலிகைத் தாவரங்களும், மரங்களும் உள்ளன.

இப் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள் செயல்பட்டன. இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி கடந்த சில ஆண்டுளுக்கு முன்னர் குவாரிகள் தொடர்ந்து செயல்பட வனத்துறை தடை விதித்தது. இதன் பின்னர் இப் பகுதி காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.

மரங்களை வெட்டுவது ஏன்? நன்மங்கலம் வனப்பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையத்துக்காக இங்கு ஏற்கெனவே 9 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டன. இந் நிலையில் இங்கு மேலும் 250 ஏக்கர் நிலத்தில் இந்த நிலையத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் சரக வனத்துறையிடம் இருந்து இந்த நிலம் வனத்துறை ஆராய்ச்சி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை வெட்டிவிட்டு அந்த நிலத்தில் சோதனை அடிப்படையில் புதிய வகை மரக்கன்றுகளை பயிரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த மரங்கள் அனைத்தையும் வனத்துறையினரே வெட்ட முடியாது என்பதால் வெட்டும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் கோரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

ச: ரகசிய திட்டம்

Posted: 20 May 2007 09:46 AM CDT

சென்னை, மே 20:

சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், விமானநிலையத்தையொட்டியுள்ள பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த வீடுகளை அகற்ற முற்பட்டால், விமான போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை போட, விமான நிலைய ஊழியர்கள் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.

ஏற்கனவே ஐதராபாத், பெங்களூர் விமான நிலையங்களின் விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. ஆனால் அந்த 2 விமான நிலையங்களுக்கு முன்னதாகவே விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்ட சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணி மட்டும் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளது.


மேலும் அதிக விபரங்களுக்கு "மாலைச் சுடர்"

இசைக் கலைஞர் எல்.வைத்தியநாதன் மறைவு

Posted: 20 May 2007 04:22 AM CDT

சென்னை: பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்பாளருமான எல்.வைத்தியநாதன் மரணமடைந்தார். 65 வயதாகும் வைத்தியநாதனுக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

மேலதிக தகவல்கள் இங்கே

சற்றுமுன்: கோவை சந்திப்பு படங்கள்

Posted: 20 May 2007 12:39 AM CDT


மாண்டலின் ஆறுமுகம் அய்யாவை நேர்காணல் செய்யும் பதிவர்பாமரன்.


பட்டறையில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.




பட்டறையில் கலந்து கொண்டவர்களில் இன்னொரு பகுதி.

ச: தில்லி - உபி பஸ் போக்குவரத்து மீண்டும் துவங்கியது

Posted: 19 May 2007 09:56 PM CDT

சென்ற நவம்பரில் உபி போக்குவரத்துக் கழகம் தானாகவே தில்லி நகர வழித்தடங்களில் பஸ்கள் விட்டதையொட்டி ஏற்பட்ட பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கும் இடையே தடைபட்டிருந்த பேருந்து போக்குவரத்து உபியில் புதிய அரசு அமைந்ததும் மீண்டும் துவங்கப் பட்டுள்ளது. இருமாநில போக்குவரத்து அமைச்சர்களும் கொடியசைத்து சனியன்று பேருந்து இயக்கத்தைத் துவக்கி வைத்தனர்.


முழு விவரமறிய...Bus service resumes between Delhi-UP- Hindustan Times

ச:நைஜீரியாவில் மூன்று இந்தியர்கள் பிணை

Posted: 19 May 2007 09:43 PM CDT

சனிக்கிழமையன்று நைஜீரியாவின் எண்ணெய் நகரான போர்ட் ஹார்கோர்ட்டிலிருந்து மூன்று இந்திய எண்ணெய்வள ஊழியர்களை அவர்களது இல்லங்களிலிருந்து தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். முன்னதாக அவர்கள் இந்தோனெஷிய இந்தோராமா நிறுவனத்தில் பணிபுரியும் பத்து பேரை பிடித்துக் கொண்டனர். இராணுவத்தினரின் துப்பாக்கிச் சண்டையின் பிறகு அவர்களில் ஏழு பேரை காப்பாற்ற முடிந்தது. இந்திய அரசு நைஜீரியாவில் உள்ள தூதரகம் பேச்சுவார்த்தைகளில் பங்குகொண்டு அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யும் என அறிவித்துள்ளது.

Nigeria militants abduct 3 Indians-India-The Times of India