Wednesday, May 9, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ச: தினகரன் பத்திரிக்கை தாக்குதல்- சன் செய்திகள் வீடியோ

Posted: 09 May 2007 06:59 PM CDT

அடுத்த குடியரசு தலைவர் பிரணப் முகர்ஜி: சோனியா, மன்மோகன் விருப்பம்

Posted: 09 May 2007 05:30 PM CDT

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி அடுத்த குடியரசுத் தலைவராக வர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே 2004-ம் ஆண்டில் பிரதமர் பதவிக்கான போட்டியில் பின்தங்கிய பிரணப், இந்த முறை குடியரசுத் தலைவருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். எனினும், இடதுசாரி கட்சிகள் சம்மதித்தால் மட்டுமே அவர் வெற்றிபெற முடியும். உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, எதையும் உறுதியாகக் கூற முடியும்.

"விசா' விண்ணப்பங்களை "வடிகட்ட' அமெரிக்கத் தூதரகம் முடிவு

Posted: 09 May 2007 05:24 PM CDT

வெளிநாடுகளுக்கு ஆள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளது; அதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட பங்கு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டதால் அமெரிக்கத் தூதரகம் மட்டும் அல்ல எல்லா நாட்டுத் தூதரகங்களுமே கலவரம் அடைந்திருக்கின்றன. எனவே விசா கோரி விண்ணப்பிக்கிறவர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கத் திணறும் அளவுக்கு விண்ணப்பங்கள் பலமடங்காகப் பெருகிவிட்டன. கடந்த மாதம் விசா கோரி விண்ணப்பித்துவிட்டு தில்லியிலேயே தங்கியவர்கள் செய்த செலவு மட்டும் ரூ.95 லட்சம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர்.

Dinamani

ச:2007ல் இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை

Posted: 09 May 2007 04:02 PM CDT

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை இந்தியாவிலும் கால்பதிக்கவிருக்கிறது. 2007 முடிவுக்குள் டெல்லி அல்லத்து மும்பையில் முதல் இந்திய ஸ்டார்பக்ஸ் காப்பிக்கடை துவங்கப்படும் என ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.


Starbucks to open first outlet in India by 2007-end

ச:'அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்' - ஜெயலலிதா

Posted: 09 May 2007 01:09 PM CDT

சட்ட ஒழுங்கை காக்கத் தவறியதாற்காக தி.மு.க அரசு கலைக்கப்படவேண்டும் என ஜெயலலிதா அறிக்கைவிட்டுள்ளார். மதுரையில் நடந்த தினகரன் அலுவலகத் தாக்குதலின்போது போலீஸ் பாராமுகமாயிருந்ததைக் கண்டித்த அவர் கருணாநிதி குடும்பத்தில் பதவிக்காக சண்டை நடக்கிறது எனக் குறிப்பிட்டார்.

'தினகரன் எல்லாக் கட்சிகளுக்கும் பிரச்சனையை உருவாக்கிவருகிறது. முதலில் அதிமுகவிற்கு அடுத்த வாரிசு யார் என குழப்பத்தை உருவாக்கியது அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை அதன்பின் பாமகவிற்கும் இப்போது திமுகவிற்கும் பிரச்சனையை உண்டுபண்ணியிருக்கிறது. தனது கட்சிக்காரர்களையே காப்பாற்ற இயலாத அரசால் பொதுமக்களை எப்படிக் காப்பாற்ற இயலும்?' என்றிருக்கிறார் ஜெயலலிதா.

Dinakaran attack: Jayalalithaa demands dismissal of Govt.

கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச:'இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம்' - கருணாநிதி

Posted: 09 May 2007 11:48 AM CDT

தினகரன் அலுவலகத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றும் அதில் வாரிசு அரசியலுக்கு இஅடமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், கருத்துக் கணிப்புக்களின்மேல் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் இதைக்கொண்டு கட்சியில் விரிசலை ஏற்படுத்த யாரும் முயலவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

No room for dynastic politics in DMK: Karunanidhi


கருத்துக்களை விவாதப் பதிவில் தெரிவியுங்கள்

ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

Posted: 09 May 2007 11:07 AM CDT

தமிழகத்தின் ஆளுங்கட்சியின் ஆளுமைகளாக திகழ்ந்த கருணாநிதியின் வாரிசுகளுக்குள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பகிரங்கமான மோதல் வெடித்திருக்கிறது. முதலாவதாக கருணாநிதியின் மனசாட்சி என்று வர்ணிக்கப் பட்ட முரசொலி மாறனின் புதல்வர்களின் எழுச்சியால் கருணாநிதியின் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சலசலப்பும் அதன் தொடர்ச்சியாக தயாநிதிமாறனை முன்னிலைப் படுத்தும் சன்டிவி, தினகரன் குழும ஊடகங்களின் செய்திகள், கருத்துக் கணிப்புகள், அடுத்து திமுக தலைவரின் மகன்களுக்குள் பிளவை உண்டாக்கும் விதமான இரண்டாவது கருத்துக் கணிப்பு இன்று பகிரங்கமான மோதலாக வெடித்து மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது.

இதற்கு காரணமானவராக அழகிரியை நேரடியாக சுட்டி சன்டிவி கடுமையாக விமர்சித்திருக்கிறது. தா. கிருட்டிணன் கொலைவழக்கிலும் அழகிரியின் தொடர்பு குறித்து இன்று முதன்முறையாக சன்டிவி விமர்சித்தது.

ஸ்டாலின் அழகிரியை விட செல்வாக்கு உள்ளவர் என்ற கணிப்புக்கான எதிர்ப்பாக தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப் பட்டுள்ள தாக்குதல் விளைவித்துள்ள சூழல் ஒரு புறம் இப்போது அத்தகைய ஒரு கருத்துக் கணிப்புக்கான அவசியம் என்ன என்பது ஒரு புறம் இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் ஊடகத்தன்மை மறுபுறம் என நம் முன் கேள்விகள் பல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இது பற்றி ஒரு அரசியல் அலசல், பொதுவிவாதத்தை முன்வைக்கிறோம்.

இன்றைய அரசியல் நிகழ்வுகள் தமிழக அரசியலில் நிகழ்த்தப் போகும் தாக்கங்கள் என்னென்ன? இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன? இது அரசியல்ரீதியாக திமுகவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இவை பற்றி விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

(விவாதத்தை திசை திருப்பும் விதமான கருத்துகள் வெளியிடப் படமாட்டாது.)

ச:தினகரன் தாக்குதல் 'போராடுவேன்' - மாறன் - Update

Posted: 09 May 2007 10:50 AM CDT

மதுரை. மே 9. தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை மத்திய மாநில அரசுகளுடன்ன் போராடுவ்வேன் என சன் நிறுவன இயக்குனர் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் நடந்தபோது காவல்துறையினர் அமைதியாக பார்த்ஹ்துக்கொண்டிருந்தனர் என தினகரன் பணியாளர்கள் கூறியுள்ளதைப்பற்றி கேட்டபோது அவர்களின் கருத்தை நம்புகிறேன் என பதிலளித்தார்.

கருத்துக்கணிப்புக்கு எதிரான அழகிரியின் கருத்துக்களைப் பற்றி கேட்டபோது அதற்கு தினகரன் பணியாளர்கள் 3 பேரைக் கொல்வது முடிவல்ல என்றார்.

Kalanidhi to fight against state, Centre till justice rendered

பத்திரிகையாளர்கள் கண்டனம்
தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்றுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மெட்ராஸ் பத்திரிகையாளர் யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளது.
Journalists deplore killing of Dinakaran employees

இதனிடையே பத்திரிகைக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சம்பவம் குறித்த சரியான விபரம் தங்களுக்கு கிடைக்கவில்லை, உயிர் சேதங்கள் இருப்பின் அது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
Congress downplays incident of sibling rivalry in DMK

ச:'சம்போவைக் காப்பாத்துங்கள்' லண்டனில் இந்துக்கள் கவலை

Posted: 09 May 2007 10:40 AM CDT

வேல்ஸில் அமைந்துள்ள இந்துக் கோவிலுக்குச் சொந்தமான சம்போ எனும் காளை மாட்டைக் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற இங்கிலாந்தில் வாழும் இந்துக்கள் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

மே 3ல் சுற்றுச் சூழல் அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படி சம்போவுக்கு டி.பி நோய் பிடித்துள்ளதால் அதை மே 14க்குள் கொல்லவேண்டும் என ஆணை பிறப்பித்தது. இதை அடுத்து சம்போவின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கைகளும் கூட்டு முயற்சிகளும் தொடர்கின்றன.

சம்போவைக் கொல்வது தங்கள் மத நம்பிக்கைக்கையை காயப்படுத்தும் என இதற்காக அமைக்கப்பாட்டுள்ள குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

கோவில் நிர்வாகம் சம்போவுக்கு மருத்துவ உதவியை நாடியுள்ளதாகவும் மற்ற வளர்ப்பு மிருகங்களிடமிருந்து சம்போ தனிமைப் படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Save Shambo, Hindu groups urge UK Govt.

தீவிரவாதி என நினைத்து நடிகர் ஆர்யா வாரணாசியில் கைது

Posted: 09 May 2007 10:14 AM CDT

சென்னை, மே. 9: உள்ளம் கேட்குமே, கலாபக் காதலன், அறிந்தும் அறியாமலும் போன்ற படங்களில் நடித்தவர் ஆர்யா. தமிழ் பட உலகில் வளர்நது வரும் நடிகர். இவர், தற்போது பாலா இயக்கும் நான் கடவுள் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக நீண்ட தாடி, அடர்ந்த மீசையும் வைத்துள்ளார்.

இந்த முகத்தை மறைக்க படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்க தூதரகத்திற்கு விசா எடுக்கச் சென்ற போது, அவரது தோற்றம் அமெரிக்க போலீஸôருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. அதனால் அவரை தூதரகத்திலேயே வைத்து பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்புண்டா என்றெல்லாம் விசாரித்திருக்கின்றனர். தான் யார், தனது அடையாளங்கள் இவை இவை என்று சொல்லி ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருக்கிறார்.

இந்த பிரச்சினை அடங்குவதற்குள் அடுத்த பிரச்சினையில் ஆர்யா மாட்டிக் கொண்டு தப்பித்துள்ளார்.

இதே படத்திற்காக வாரணாசியில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படப்பிடிப்பிற்காக கலந்து கொள்ளச் சென்ற ஆர்யாவை, அங்குள்ள போலீஸôர் சுற்றி வளைத்தனர். தீவிரவாதி என நினைத்து அவரை கைது செய்து சிறையில் தள்ளினர். ஆர்யாவை விசாரிக்க உயரதிகாரிகளும் விரைந்துள்ளனர்.

தான் ஒரு நடிகர் என்றும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும், படப்பிடப்பிற்காக வாரணாசிக்கு வந்தவன் என்றும் ஆர்யா சொன்ன பதில்களை அவரகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன், என்ன திட்டத்தோடு வந்திருக்கிற... என கேள்விகளால் துளைத்தெடுக்க ஆரம்பிக்க, தகவலறிந்த படப்பிடிப்புக் குழுவினர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று தகுந்த ஆதாரங்களைக் காட்டி அவரை விடுவித்துக் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

Posted: 09 May 2007 10:07 AM CDT

தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில் சென்னை தரமணி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.

கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும் சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும் மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்'' என்றார் கருணாநிதி.

Dinamani

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்

Posted: 09 May 2007 09:33 AM CDT

பெரம்பலூர், ஓசூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை தரமணியில் ரூ. 850 கோடி மதிப்பில் இரண்டாவது தகவல் தொழிநுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் சில மாதங்களில் தொடங்கி, 2009-ம் ஆண்டு துவக்கத்தில் நிறைவுபெறும் என்றார்.

சென்னை சோழிங்கநல்லூரில் அமையவுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்கள் இடையே உள்ள மின்னணுவியல் இடைவெளியை சரிசெய்ய பொது சேவை மையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்தங்கிய பகுதிகள் மேம்பாடு அடையும் வகையில் பெரம்பலூர், ஓசூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், இதன்மூலம் பொருளாதார வளர்ச்சியையும், விரைவான முன்னேற்றத்தையும் காண முடியும் என்றார்.

3 நகரங்களில் பொருளாதார மண்டலம்: கருணாநிதி

ச:பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கங்கள்

Posted: 09 May 2007 09:30 AM CDT

தைவானில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கும் போட்டியில் 12 தங்கம் உட்பட 45 பதக்கங்கள் பெற்று இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

ஆசிய பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் தைவானில் உள்ள ஹோசிங் நகரில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற இந்தியா, சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை அள்ளியது.இளையோர், மூத்தோர் மற்றும் சப்-ஜூனியர் பிரிவுகளில் மொத்தம் 68 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். இவர்களில் 45 பேர் பதக்கங்களைச் தட்டிச் சென்றனர்.

12 தங்கம், 23 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இந்திய அணி பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. இந்திய வீராங்கனை லட்சுமிக்கு சிறந்த ஆசிய வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

பளு தூக்கும் போட்டி: இந்தியாவுக்கு 45 பதக்கம்

ச:'8 ஆண்டுகளில் விண்வெளியில் இந்தியர்'

Posted: 09 May 2007 09:23 AM CDT

வரும் எட்டு ஆண்டுகளுக்குள்ளாக இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கென ரூ. 9,500 கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Preparations on to send man to space: Govt.

சந்தன மரக் கடத்தலில் திமுக அமைச்சரின் உறவினர்கள்: ஜெ. புகார்

Posted: 09 May 2007 09:21 AM CDT

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் சந்தன மரக் கடத்தலில், தி.மு.க. அமைச்சரின் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்:

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பகுதியில் வசுவம்பாடி தனியார் எஸ்டேட்டுக்குச் சொந்தமான சந்தன மரக் கிடங்கு உள்ளது. இது சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட "ரிசீவரின்" (வழக்கறிஞர்) பொறுப்பில் உள்ளது. இந்தக் கிடங்கில் இருந்து கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் காவலாளியை தாக்கி விட்டு, ரூ.2.5 கோடி அளவுக்கு சந்தன மரக் கட்டைகளை கடத்த மூன்று பேர் முயன்று இருக்கிறார்கள். அவர்கள் 2 லாரிகளிலும், 3 சுமோ வாகனங்களிலும் வந்துள்ளனர். அவற்றில், 2 லாரிகளையும், 1 சுமோவையும் மட்டுமே வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ் மற்றும் குட்டி ஆகியோர் 2 சுமோவில் இருந்துள்ளனர். இவர்கள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் கந்தசாமியின் மகன்கள் என்பது தெரிய வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரக் கட்டைகளை வனத் துறையினர் வசம் ஒப்படைத்து விட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை தங்கள் வசம் ஒப்படைக்கும் படி, காவல் துறையினர் வனத் துறையினரிடம் கேட்டு இருக்கின்றனர். வனத்துறையின் சட்டப்படி பிடிபட்ட வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளது.

ஆகவே, பிடிபட்ட வாகனங்களை வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கிக் கொண்டு காவல் துறையினர் மூலம் வழக்குப் பதிவு செய்தால், அந்த வாகனங்களை நீதிமன்றம் மூலம் மீண்டும் விடுவித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் காவல் துறைக்கு வழக்கை மாற்ற திமுகவினர் முயற்சித்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடித்து ஒரு நாள் ஆகியும், முதல் தகவல் அறிக்கை இதுவரை தயாரிக்கப்பட வில்லை. திமுக அரசின் மிரட்டலுக்குப் பயந்து, காவல் மற்றும் வனத் துறையினர் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dinamani

ச:தினகரன் தாக்குதல் கருணாநிதி வருத்தம்

Posted: 09 May 2007 09:12 AM CDT

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு இருவர் இறந்த நிகழ்வைக் குறித்து மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும் மே 11ல் நடக்கவுள்ள கொண்டாட்டங்களை ரத்து செய்யவும் கேட்டுள்ளார்.

இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி கருத்துக் கணிப்பு நடத்திய 'ஜென்மங்கள்' என்னிடம் வரட்டும் தமிழகம் முழுவதும் அழைத்துச் சென்று எனக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது காட்டுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.

Karunanidhi upset over Dinakaran office attack
தினமலர்

உ.பி.: 7 கட்ட தேர்தலில் 46 சதவீத வாக்குப்பதிவு

Posted: 09 May 2007 09:10 AM CDT

உ.பி.யில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 46 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

தொங்கு பேரவை: இந்நிலையில் உ.பி.யில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். அதைத் தொடர்ந்து முலாயம் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

11-ல் வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் வெள்ளிக்கிழமை (மே 11) நடைபெறுகிறது. எந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடைபெற்றதால் அன்று பிற்பகலில் முடிவுகள் தெரிந்துவிடும்.

Dinamani

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை - அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

Posted: 09 May 2007 09:03 AM CDT

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை).

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல், ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது, சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது, திருட்டு, கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல், உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல், ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தினமணி - முழு விவரங்கள்

தில்லியில் மூன்றாவது மாடி கட்ட அனுமதிக்கக் கூடாது: நீதிமன்றம் ஆணை

Posted: 09 May 2007 08:58 AM CDT

புதுதில்லி, மே 9: தில்லி மாநகராட்சியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இரண்டாவது மாடிக்கு மேல் கட்ட இனி அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே இனி மூன்றாவது மாடிகளைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது.

Dinamani

இலவச கலர் டிவி திட்டத்தில் குறை இருந்தால் தூக்கு மேடைக்குப் போகத் தயார்: அதிமுகவுக்கு கருணாநிதி சவால்

Posted: 09 May 2007 08:51 AM CDT

சென்னை, மே 9:ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் குறை இருந்தால், தூக்கு மேடைக்குப் போகத் தயாராக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

தொழில் துறை- தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மானியக் கோரிக்கை மீது பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது. அப்போது பேசிய டி.ஜெயகுமார் (அதிமுக), இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தில் பெரிய முறைகேடு நடந்திருப்பதாகக் கூறினார். இத்திட்டத்துக்காக ரூ.850 கோடி செலவிடப்பட்டிருப்பதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அளவுக்கு கலர் டிவிக்கள் விநியோகிக்கப்படவில்லை என்றார் அவர்.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.) பேசுகையில், கலர் டிவி திட்டம் திறந்த புத்தகமாக நடக்கிறது என்றார். இதற்காக முதல்வர் தூக்குமேடைக்குப் போக வேண்டும் என்றால், அதிமுக செய்த முறைகேடுகளுக்கு ஆயிரம் முறை தூக்கு மேடைக்குப் போக வேண்டும் என்றார்.

Dinamani

ச: தினகரன்-சன் டிவி அலுவலகங்கள் தாக்கப்பட்டு 2 பேர் பலி. அடக்கி வாசிக்கும் தினமலர்.

Posted: 09 May 2007 04:37 AM CDT

மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் தாக்குதல்-2 பேர் பலி. 7 பஸ்களுக்கு தீ வைப்பு

தினகரன் நடத்தும் கருத்துக் கணிப்பு காரணமாக பாமகவின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்னொரு புறம் ஸ்டாலினுக்கே அதிக செல்வாக்கு என்று கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதால் ஆத்திரம் கொண்டு அழகிரி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களில் இருவர் கொல்லப் பட்டனர். மநுரையில் தினகரன் பத்திரிகை, சன் தொலைக்காட்சி அலுவலகங்கள் வன்முறை தாக்குதலுக்கு உள்ளாயின.

விரிவான செய்தி இங்கே (தட்ஸ்தமிழ்)

வழக்கமாக திமுக தரப்பு பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக வெளியிடும் தினமலர் இம்முறை அடக்கி வாசிக்கிறது.

தினமலர் இணைய தளத்தில் இப்போதைய செய்தி:

மதுரை தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் ; இருவர் பலி

உத்தங்குடி: மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தமிழ் பத்திரிக்கை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் இருவர் இறந்தனர். இதில் ஒருவர் கோபி என்ற ஊழியர் ஆவார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saturday, March 31, 2007

Satrumun Breaking News 31 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சற்றுமுன்: இன்சமாம் குமுறல் பேட்டி- இந்தியா, பாக் வீரர்கள் பரிதாபம்

Posted: 31 Mar 2007 08:41 PM CDT

"விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்தான் விளையாட்டு வீரர்கள் பீதியுடன் வாழ வேண்டிய அவலமான நிலை இருக்கிறது என்று இன்சமாம் உல் ஹக் கூறினார்.

லாகூரில் நிருபர்களிடம் நேற்று இன்சமாம் கூறியதாவது:

உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்பினேன். ஆனால், தோற்று விட்டோம். எனக்கும் அதிர்ச்சிதான். கேப்டன் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். ஆனால், சோதனையான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய பத்திரிகைகளும், டிவி சேனல்களும், பாகிஸ்தான் அணியை கிழிகிழியென்று விமர்சிப்பது அநியாயம். இரண்டு போட்டிகளில் தோற்றதால் நாங்கள் பாகிஸ்தானியர் இல்லை என்று ஆகிவிடுமா? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எது நடந்தாலும் அதற்கு இன்சமாம்தான் பொறுப்பு என்று பத்திரிகைகள் எழுதுவது வழக்கமாகிவிட்டது.

உலகக்கோப்பையில் தோற்றதால் பாகிஸ்தானில் கிரிக்கெட் அழிந்துவிடாது. திறமையான வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். மீண்டும் வலுவான அணியாக வரலாம்.

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். உலகத்தில் எல்லா நாட்டு மக்களுக்கும் இது புரிகிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மட்டும்தான் மக்களுக்கு தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை.

- தினகரன்

சற்றுமுன்: ரிசர்வ் வங்கி வட்டி அதிகரிப்பு -வங்கி கடன்கள் வட்டி எகிறும்

Posted: 31 Mar 2007 08:28 PM CDT

வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க நினைப்பவருக்கு இன்றைய தேதி உண்மையிலேயே ஒரு ஏமாற்ற தினமாகத்தான் இருக்கக்கூடும். ஆம். ஒரே நேரத்தில் வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தையும், ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சிஆர்ஆர்) ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் முதலீடு செய்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் சிஆர்ஆர். இதேபோல, வர்த்தகத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் பெறும் கடன் தொகை மீதான வட்டி ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்த நிதி ஆண்டில் பணவீக்க விகிதத்தை 5 முதல் 5.5 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், உணவுப் பொருட்கள், வீடு, மனை உட்பட பலவற்றின் விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கு அடங்காமல் உயர்ந்து வருகின்றன. இதனால் பணவீக்க விகிதம் 6.46 சதவீதமாக உள்ளது.

எனவே, அதைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பதை அதிகரிக்கும் வகையில் சிஆர்ஆர் விகிதத்தை ரிசர்வ் வங்கி இப்போதுள்ள 6.25ல் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது இந்த மாதம் 14 முதல் 28ம் தேதி வரை இரு கட்டங்களாக நடைமுறைக்கு வரும்.

இந்த நடவடிக்கையால் அதிர்ந்துள்ள வங்கிகளை மேலும் அதிரச் செய்யும் வகையில் ரெப்போ விகிதமும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ரிசர்வ் வங்கிக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி வட்டியை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

அத்துடன், சிஆர்ஆர் அதிகரிப்பால் வங்கிகளின் ரூ.15,500 கோடி கூடுதல் வர்த்தக தொகை ரிசர்வ் வங்கி வசமாகி விடும். எனவே, அவற்றைக் கடனாக அளிப்பதன்மூலம் கிடைக்க வாய்ப்புள்ள ரூ.1,600 கோடி வட்டியை வங்கிகள் இழக்க நேரிடும். மொத்தமாக வங்கிகளிடம் இருந்து சுமார் 17,000 கோடி ரிசர்வ் வங்கிக்கு கைமாறும்.

இதனால், கடன் அளிப்பதற்கான வங்கிகளின் நிதி வரம்பு மேலும் கட்டுப்படுத்தப்படும். அதிக வருமானம் ஈட்ட வேறுவழியின்றி வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டிகளை வங்கிகள் மீண்டும் கடுமையாக உயர்த்தத் தொடங்கி விட்டன

- தினகரன்

சற்றுமுன்: ஷேன்வார்னே தனது மனைவியுடன் மீன்டும் சேர்ந்தார்

Posted: 31 Mar 2007 08:20 PM CDT


ஷேன்வார்னே பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி பிரிந்து இருந்த அவருடைய மனைவி மீன்டும் அவர்களுடைய குழந்தைகளுடன் ஒன்றாக இனைந்தனர்.

ஷேன்வார்னே தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறப்போகிறார்.



"மேலும் செய்திக்கு"

சற்றுமுன்: அர்ஜுன் சிங் கார் மீது பாட்டில் வீச்சு

Posted: 31 Mar 2007 08:12 PM CDT

இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் கார் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளை செய்தனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதலாம் சுதந்திர போராட்டத்தின் (1857) 150வது ஆண்டு விழாவை யட்டி நேற்று கருத்தரங்கு நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் வந்தார். கருத்தரங்கில் அர்ஜுன்சிங் பேச தொடங்கியதும் 50 மாணவர்கள் எழுந்து அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். சமத்துவ இளைஞர்கள் என்ற அமைப்பை சேர்ந்த அவர்கள் கறுப்பு பாட்ஜ் அணிந்து இருந்தனர். "இடஒதுக்கீட்டை புகுத்தி மாணவர்களை பிரிக்காதே! அர்ஜுன்சிங்கே பதவியை ராஜினாமா செய்! என்று கோஷம் எழுப்பினர்.

நிகழ்ச்சி முடிந்து அர்ஜுன்சிங் காரில் ஏறி புறப்பட்ட போது அதே மாணவர்கள் கார் முன் திரண்டு ரகளை செய்தனர். இந்த சம்பவம் பற்றி அர்ஜுன்சிங்கிடம் கேட்டதற்கு, இளைஞர்களின் உணர்ச்சிகளை மதிக்கிறேன். அதே சமயம் நவீன இந்தியாவை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சக்தியை இந்தியா பெற முடியும என்றார்.

தினகரன்

சற்றுமுன்: கண்துடைப்பு?- கருணாநிதி கண்டனம்

Posted: 31 Mar 2007 10:37 AM CDT

முதல்-அமைச்சர் கருணா நிதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலக் கொள்கையாக இருந்து வருகிற இட ஒதுக்கீடு கொள்கைக்காக ஒரு அமைதி கிளர்ச்சியாக வேலை நிறுத்தம் செய்வதாக வேண்டுகோள் விடுத்து, அறிவிப்பு செய்துள்ளது வெறும் கண்துடைப்பு என்று ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்து, அது இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஏடுகளில் முதல் பக்கத்தை அலங்கரித்திருக்கிறது.

ஜெயலலிதாவின் வழியி லேயே அவரது சகோதரர் விடுத்துள்ள அறிக்கையிலே பொது வேலை நிறுத்தத்தை வேலை நாளில் அறிவிக்காமல் விடுமுறைநாளான சனிக் கிழமை நடத்துவது ஏமாற்று வேலை என்கிறார். சேராத இடம் தனில் சேர்ந்ததால் எப் படி பட்ட நிலைக்கு அவர் ஆளாகி விட்டார்ப சமூக நீதி உணர்வு குருதியோடு ஓடு பவர்களுக்கு எதிர்ப்பினை எவ்வளவு விரைவிலே காட்டவேண்டும் என்பதில் தான் எண்ணம் செல்லும். சனிக்கிழமைகளில் ரெயில்கள் ஒடுவதில்லையாப

நம்மை அவ மானப்படுத்தினாலும் நாட்டு நலனுக்காக மானத்தைக்கூட பெரிதுபடுத்தாமல் ஒத்துப் போவது நல்லது என்ற அடிப்படையில் நாம் அனுப் பிய அழைப்பைக்கூட லட்சி யம் செய்யாதவர்களுக்கு இந்தியாவில் உள்ள நம் மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எக்கேடு கெட்டால் என்ன- ஆதிக்க புரியினர், அமோக வாழ்வு பெற்றால் அது ஒன்றே நமக்கு சொர்க்கம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு வாழுபவர் ஒன்றுகூடி நடத்தும் சதியில் வெற்றி பெறலாம் எனக் கனவு காண்கிறார்கள்.

கண்துடைப்பாம் கண் துடைப்பு! உடன்பிறப்பே இது கண்துடைப்பு அல்ல, கண்ணீர் உடைப்பு! இந்தக் கண்ணீர் அடக்கமுடியாமல் அடித்தட்டு மக்கள் புழுக் களாய்த் தேரைகளாய் பொட் டுப்பூச்சிகளாய் மடிந்து போகாமல்-புரட்சிக்குரல் எழுப்ப எழுந்திடும் உரிமைப் போர்ப்படையின் மீது காரி உமிழ்வது போல இந்தப் பெண் மணியார் கண்துடைப்பு என் கிறாரே, இதுவும் நாம் எதிர் பார்த்தது தான் நாகத்திடம் நச்சுப்பல்லையும், இவர் போன்றோரிடம் நாச காலச் சொல்லையும் தானே எதிர் பார்க்க முடியும்


"மேலும் செய்திக்கு மாலை மலர்"

சற்றுமுன்: சிவாஜி பட ரிலீஸ் பற்றி டி.ஆர் கருத்து

Posted: 31 Mar 2007 10:31 AM CDT

நெல்லையில் நடைபெற்ற தனது 'லட்சிய தி.மு.க கூட்டத்தில் பேசிய விஜய டி.ராஜேந்தர் 'சிவாஜி படத்துக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு.

அந்த பட ரிலீஸ் போது திரையரங்குகளில் டிக்கட்கள் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டால் தன் கட்சி சார்பில் போராடுவோம் என்கிறார்.அத்துடன் காவிரி பிரச்சனையில் ராஜினி மௌனம் சாதித்ததையும் சாடுகிறார்.தமிழகத்தில் சம்பாதித்து கர்நாடகத்தில் சொத்து வாங்கும் அவர் படத்துக்கு டிக்கெட் விலை ஏற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன்.அரசாங்க கொள்கைகளில் தனி மனிதர்களுக்கு விலக்கு அளிக்க முற்பட்டால் விடமாட்டேன் என்றும் கூறுகிறார்

சற்றுமுன்: திருநங்கைகளும் மனிதர்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

Posted: 31 Mar 2007 10:23 AM CDT

தமிழக அரசு அண்மையில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைகளை அரசு மருத்துவனனைகளிலேயே செய்து கொள்ளலாம்.அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை மாநாட்டில் 'லிவிங் ஸ்மைல் வித்யாவால் வைக்கப் பட்ட கோரிக்கையும்,மதுரை உயர் நீதிமன்றத்தில்ல் 'சரவணன்' என்ற தன் பேரை லிவிங் ஸ்மைல் வித்யா' வாக மாற்ற போடப்பட்ட வழக்கும் அரசின் இந்த உத்தரவுக்கு காரணங்கள்.
தமிழக முதல்வருக்கு நன்றி சொன்ன வித்யா சொன்னவை:பாலின் மாற்று அறுவைச் சிகிச்சை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது எனப்படும்.
இதற்கு 15000 முதல் 20000வரை செலவாகும்.இந்த தொகையைச் சேமிக்கவே திருநங்கைகள் பிச்சை எடுப்பது,விபச்சாரம் போன்ற தொழில் செய்கின்றனர்.
நான் இதைச் செய்ய வேண்டி வடமாநிலங்களில் ஒருவருடம் பிச்சை எடுத்தேன்.இப்போது இந்த சிகிச்சையை இலவசமாக அரசு மருத்துவமானைகளில் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு சொல்லியிருக்கிறது.ஒரு திருநங்கை பேங்க் அக்காவுன்ட்,டிரைவிங் லைசன்ஸ்,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வாக்காளர் அட்டை ,செல்போன் இணைப்புக் கூட வாங்க முடியாத நிலை இருக்கிறது.இந்த பிரச்சனைகள் தீரவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.அரசின் தற்போதைய உத்தரவில் பாலின அறுவைசிகிச்சையோடு வாய்ஸ் தெரபி,மார்பக வளர்ச்சி சிகிச்சையும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.
மேலும் திருநங்கைகளும் மனிதர்கள் அவர்களை மதிப்போம் என்ற பிரச்சாரமும்,அவர்களின் பெற்றோருக்கு கவுன்ஸிலிங்கும் ,வீட்டைவிட்டுத் துரத்தும் பெற்றோருக்கு தண்டனையும் வழங்கப் பட வேண்டும். என்றும் கூறுகிறார் வித்யா

சற்றுமுன்: 2015ம் வருடத்துக்குள் 1.5 கோடி வேலைவாய்ப்பு

Posted: 30 Mar 2007 08:11 PM CDT

இந்தியாவில் அடுத்த 8 ஆண்டுகளில் புதிதாக 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என எத்திராஜ் மகளிர் கல்லூரி நடத்திய வேலை வாய்ப்பு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி "வேலை வாய்ப்புகளை மேம்படுத்த கலை-அறிவியல் கல்லூரிகள் இணைந்து செயலாற்றுதல்" என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.
இதில் கல்லூரியின் முதல்வர் எம். தவமணி, "இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் இந்தியாவில் 1.3 முதல் 1.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. கலைக் கல்லூரி மாணவர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.



- தினகரன்

Friday, March 30, 2007

Satrumun Breaking News 30 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கண்டிப்பான ஆசிரியைக்கு 1.4 மில்லியன் டாலர்!

Posted: 30 Mar 2007 07:42 PM CDT

அமெரிக்காவில் இருக்கும் லூசியான மாஹாணத்தை சேர்ந்த பாலா பெயின் (Paula Payne) என்ற ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியை, தன்னிடம் பயின்ற எழுபது சதவிகித மாணவர்களுக்கு மிகுந்த குறைவான மதிபெண்களை கொடுத்துள்ளார். இதை அடுத்து இந்த உயர் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் கொடுத்திருக்கும் மதிப்பெண்களை திருத்துமாறு கேட்டு மிகவும் துன்புறுத்தியுள்ளார். பாலா பெயின் அதற்கு சம்மதிக்காமல் போகவே அவரை கீழ்நிலை ஆசிரியராக மாற்றி பின்னர் தற்காலிக வேலை நீக்கமும் செய்திருக்கிரார்.


இந்த வழக்கு நீதிமன்றம் சென்று இப்பொழுது இந்த ஆசிரியருக்கு அவர் வேலை செய்துகொண்டிருந்த லூசியானா பள்ளி நிர்வாகம், 1.4 மில்லியன் டாலர்(அவரை மன ரீதியாக துன்புறுதியதற்காகவும், மற்ற சேதங்களுக்காகவும்) வழங்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளது.


மேலும் படிக்க

http://www.msnbc.msn.com/id/17874261/?GT1=9145

சற்றுமுன்: முழு அடைப்புக்கு விஜயகாந்த் ஆதரவு

Posted: 30 Mar 2007 08:06 PM CDT

உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழகத்தில் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, தே.மு.தி.க. ஆதரவு தெரிவிக்கும் என்று, அதன் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்பதை அனைவரும் அறிவோம். மத்திய அரசு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சரியான விவரத்தை, உச்ச நீதிமன்றத்துக்கு தராததால்தான், இத்தகைய விளைவு.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, தி.மு.க. கூட்டி முழு அடைப்பு சம்பந்தமாக பேசியிருக்கலாம். இருந்தாலும், சமுதாயத்தின் அடித்தள மக்களின் நலன் கருதி, இந்த முழு அடைப்புக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- தினகரன்

சற்றுமுன்:தமிழகம் முழுவதும் 2-ந் தேதி கோர்ட்டுகள் புறக்கணிப்பு :வக்கீல்கள் சங்கம் முடிவு

Posted: 30 Mar 2007 07:25 PM CDT

நேற்று காலையில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க கூட்டம், சங்க தலைவர் பால்கனகராஜ் தலைமையில், செயலாளர் ஜி.மோகனகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கண்டித்து ஏராளமான வக்கீல்கள் பேசினார்கள். இதன்பிறகு கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 29-ந் தேதி இடைக்கால தடை விதித்துள்ளது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக இயற்றிய இந்த சட்டத்திற்கு, ஓட்டு வங்கிக்காக இயற்றப்பட்ட சட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருப்பது வழக்கறிஞர்கள் சமுதாயத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

பெரும்பாலான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 2-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் இந்த நீதிமன்ற புறக்கணிப்பை கடைபிடித்து ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடப்படுகிறது.

- தினதந்தி

சற்றுமுன்: சுப்புடு உடலுக்கு கலாம் அஞ்சலி

Posted: 30 Mar 2007 05:55 PM CDT


புதுடில்லி:பரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு, டில்லியில் காலமானார். ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடக இசை விமர்சகராக புகழ் பெற்றவர் சுப்புடு என்ற சுப்ரமணியம். கர்நாடக இசையில் இந்துஸ்தானி இசை கலப்பதை கடுமையாக எதிர்த்தவர் சுப்புடு. இவரது விமர்சனங்கள் காரசாரமாகவும், தவறை சுட்டிக் காட்டுவதில் சுவையாகவும் அமைந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று முன்தினம்
இரவு 7.30 மணிக்கு தெற்கு டில்லியில் காலாமானார். அவருக்கு வயது 91. ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் சென்று சுப்புடுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 11.30 மணிக்கு சுப்புடுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை

Posted: 30 Mar 2007 02:31 PM CDT



பிரென்ஞ் கன்னியாஸ்திரி மேரி சைமன் பெரே என்பவர் ஓரிரவு பிராத்தனையின் பின் தனக்கு இருந்த நோய் குணம் அடைந்துவிட்டதாகவும் அதை வாடிகன் போப் இரண்டாம் ஜான் பாலின் மகிமை என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் செய்திக்கு.."FORBES.COM"

சற்றுமுன்: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் US $ 142.7 பில்லியன

Posted: 30 Mar 2007 08:23 AM CDT

கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 6.2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 142.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த கணக்கின்படி 135.5 பில்லியன் டாலர் (ரூ.6,27,112 கோடி) ஆக இருந்த வெளிநாட்டுக் கடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31-ல் முடிவடைந்த கணக்கின்படி 142.7 பில்லியன் டாலர் (ரூ.6,32,051) ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

"Yahoo-Tamil"

சற்றுமுன்: ஷேவாக் தந்தை ஆவேசம்

Posted: 30 Mar 2007 09:39 AM CDT

உலகக் கோப்பை தோல்விக்கு சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதே காரணம் என்று வீரேந்திர ஷேவாக்கின் தந்தை ஆவேச மாக கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தோல்விக்கு தன்னுடைய மகன் மட்டுமா காரணம் என்று கேள்வி எழுப் பிய அவர், டெண்டுல்கர், திராவிட் ஆகிய முன்னணி வீரர்கள் படுமோசமாக ஆடிய தாக கூறினார். ஷேவாக் துவக்க வீரராக ஆட அனுமதிக்கப்பட்டிருந்தால் மேலும் அதிரடியாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார் என்று அவர் தெரிவித்தார். ஷேவாக்கின் ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


"மாலைச் சுடர்"

சற்றுமுன்:பாமகவுக்கு துக்கநாள் - ராமதாஸ்

Posted: 30 Mar 2007 09:30 AM CDT

கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட் டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். தீர்ப்பு திருத்தப்படும் வரை பாமகவினருக்கு துக்கநாள்தான் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டித்து பாமக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார். கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாமக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் கறுப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றமே தலையிடாதே', "உயிர் போனாலும் இடஒதுக்கீட்டுக்கு உயிர் கொடுப்போம்', "உயிரை கொடுத்தாவது இட ஒதுக்கீட்டை காப்போம்', "விடமாட்டோம் விடமாட்டோம் இடஒதுக்கீடு பறிபோக விடமாட்டோம்' போன்ற முழக்கங்களை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எழுப்பினார்கள்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: பந்த்-கேலிக்கூத்து,கண்துடைப்பு நாடகம் : ஜெயலலிதா

Posted: 30 Mar 2007 09:18 AM CDT

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை உரிய முறையில் சந்தித்து நல்ல தீர்ப்பை பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பொது வேலை நிறுத்தம் என்பது கண்துடைப்பு நாடகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஆளும் கூட்டணி கட்சிகளே பொறுப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். நீதிமன்றத்தில் கோட்டை விட்டவர்கள் இங்கே பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்திருப்பது கேலிக்கூத்து என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

"மாலைச் சுடர்"

சற்றுமுன்: முஷாரப்பிற்கு அமெரிக்கா பாராட்டு

Posted: 30 Mar 2007 08:55 AM CDT

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அதிபர் முஷாரப் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கர்மாக் நிருபர்களிடம் கூறியதாவது:

பயங்கரவாதம் அதிபர் முஷாரப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. பயங்கரவாதத்தை நசுக்க அதிபர் முஷாரப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கண்டிப்பாக ஆதரவு தெரிவிப்போம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை முஷாரப் வழங்கியுள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம். 2001 ஆகஸ்டில் இருந்ததை விட பாகிஸ்தானில் தற்போது நிலைமை மாறியுள்ளது.இவ்வாறு சீன் மெக்கர்மாக் கூறினார்.


- தினமலர்

சற்றுமுன்: தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 30 Mar 2007 08:47 AM CDT

சந்திப்பூர் (ஒரிசா) : கடற்படை கப்பலில் இருந்து பாய்ந்து சென்று 150 கி.மீ., துõரத்தில் உள்ள எதிரி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட "தனுஷ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒரிசா சந்திப்பூர் அருகே கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

- தினமலர்

சற்றுமுன்: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க உத்தரவு!

Posted: 30 Mar 2007 08:41 AM CDT

செவ்வாய், 27 மார்ச் 2007 (10:53 ஐளுகூ)
குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரங்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குளிர்பானங்களில் பூச்சி கொல்லி மருந்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது; அவ்வாறு இருந்தால் குளிர்பானங்களை அதிக அளவில் அருந்துபவர்களின் எலும்புகள் பாதிக்கப்படும். சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். சிறு குழந்தைகளின் எடை அதிகரிக்கும் என்று பாராளுமன்றத்தின் நிபுணர் குழு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பாக 2004-ம் ஆண்டு என்.கே.கங்குலி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.குழு தனது அறிக்கையை கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் பெப்சி, கோககோலா நிறுவனங்களில் தயாரிக்கப்படும் குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்து அதிக அளவில் உள்ளதாகவும் இது மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.தக்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

தங்கள் நிறுவன குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சி கொல்லி மருந்தின் அளவு குறித்து 6 வாரத்துக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று பெப்சி, கோககோலா ஆகிய குளிர்பான நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"வெப் உலகம்"

சற்றுமுன்: நேதாஜி தொடர்பான கடிதங்களை அளிக்க உத்தரவு!

Posted: 30 Mar 2007 08:30 AM CDT

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலையாய பங்காற்றிய முக்கியத் தலைவர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் "காணாமல் போனது" தொடர்பாக ரஷ்ய அரசுடன் இந்திய அரசு நடத்திய கடிதப் போக்குவரத்து விவரங்களை அவருடைய மறைவு குறித்து ஆய்வு செய்துவரும் அமைப்பிற்கு அளிக்குமாறு அயலுறவு அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்!

மிஷன் நேதாஜி (www.missionnetaji.org) எனும் அமைப்பு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய அரசு கூறுவது போல 1945 ஆம் ஆண்டு நடந்ததாக ஜப்பானிய அரசு கூறும் விமான விபத்தில் இறந்தாரா? அல்லது அவர் தப்பிவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

"வெப் உலகம்"

சற்றுமுன்:'இட ஒதுக்கீடு :பார்லி.யை உடனடியாக கூட்டவேண்டும்'

Posted: 30 Mar 2007 08:18 AM CDT

27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது தொடர்பாக விவாதிக்க, பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இந்த தீர்மானத்தில்,உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தடை,பாராளுமன்றத்தின் உரிமையை பாதிப்பதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீர்ப்பு ,சமூக மற்றும் கல்வி ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Yahoo-Tamil"

சற்றுமுன்: நாளை தமிழகம் முழுவதும் பந்த்

Posted: 30 Mar 2007 06:31 AM CDT

நாளை முழு அடைப்பு: பஸ்-ஆட்டோ-லாரிகள் ஓடாது

சென்னை, மார்ச். 30-

உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக் கீடுஅளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.

அதோடு வரும் கல்வி யாண்டில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வராது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு இட ஒதுக்கீடு ஆதரவு அமைப் புகள், மற்றும் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. தமிழ்நாட்டில் எல்லாக் கட்சிகளும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் எதிர்ப்பை தெரிவிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகளின் அவசரக் கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்றிரவு நடந்தது. தமிழ் நாட்டில் நாளை (சனிக் கிழமை) பொது வேலை நிறுத்தம் (முழு அடைப்பு) நடத்தி இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

முழு அடைப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாது. பால் வினியோகம், மருந்து சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களில் மொத்தம் 17,500 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தும் நாளை ஓடாது. நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களும் நாளை ஓடாது.

நாளை காலை 6 மணிக்குள் விரைவு பஸ்கள் சென்றடையும் வகையில் இன்று மாலை பஸ்கள் முன்கூட்டியே புறப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை ஆகிய தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு முன் பதிவு செய்த பயணிகள் முன் கூட்டியே வந்தால் வேறு பஸ்களில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் வழக்க மாக 2600 பஸ்கள் இயக்கப் படுகின்றன. அனைத்து பஸ் களும் நாளை ஓடாது. மாலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்படும்.

டேங்கர், சரக்கு லாரிகள், எல்.பி.ஜி. லாரிகளும் இயக்கப் படவில்லை என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் பி.எஸ்.ஏ.செங்கோடன் கூறினார். அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லாரிகளை தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இயக்க மாட்டோம் என்றார்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் லாரிகள் உள்ளன. அவை அனைத்தும் நாளை ஓடாது. பகல் நேரத்தில் ஓடக்கூடிய ஆம்னி பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

நாளை பெரும்பாலான பள்ளிகளில் இறுதி தேர்வு நடைபெற உள்ளது. அவை திட்டமிட்டப்படி நடைபெறும்.

நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள முக் கிய பல்வேறு தொழிற் சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. எனவே பெரிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் நாளை இயங் காது. கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

ரெயில், விமான சேவை களும் நாளை இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்த் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாடு முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலை யங்கள் மற்றும் பஸ் டெப் போக்கள் முன்பு பாதுகாப் புக்காக போலீசார் நிறுத்தப் படுவார்கள்.

இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 86 ஆயிரம் போலீசார் உள்ளனர். இவர்களில் உத்தர பிரதேச மாநில தேர்தல் பாது காப்புக்காக 6 கம்பெனி போலீசாரும், பீகாருக்கு 6 கம்பெனி போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெளி மாநில பாதுகாப்புக் காக சென்றுள்ள இந்த 1200 போலீசார் தவிர மீதியுள்ள அனைத்து போலீசாரும் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் அனைத்து துணை கமிஷனர்கள் மேற்பார் வையில் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படு வார் கள் என்று போலீஸ் கமிஷ னர் லத்திகாசரண் தெரிவித்தார்.

===========
மாலைமலர்

Thursday, March 29, 2007

Satrumun Breaking News 29 March 2007

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சற்றுமுன்:கோவையில் ஆடம்பர குடியிருப்புகளுக்கு அமோக வரவேற்பு

Posted: 29 Mar 2007 01:46 PM CDT

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து `ஜவுளி நகரம்' கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டினைக் கண்டு வருகின்றன.

கோவையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நவீன தனி இல்லங்களுக்கான தேவைப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவிடும் பணத்திற்கு தகுந்த மதிப்பு உள்ளதால் இவற்றில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக, உயர்தர குடியிருப்புகளை நிறுவுவதில் கோவை மாநகரம் சென்னை அண்ணா நகருக்கு இணையான வளர்ச்சியைக் கண்டு வருகிறது'' என்று பிரசீடியம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஹரி ஹேம்சந்த் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, ஆபரணம், வார்ப்படம், பம்ப் செட் தொழிற்பிரிவுகள், இலகு ரக பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும், வங்கியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நல்ல தேவைப்பாடு உள்ளதாக கோவை ரியல் எஸ்டேட் துறையினர் கருத்து தெரிவித்தனர்.

- தினதந்தி, The Economic Times

சற்றுமுன்: இலங்கை கடற்படை தாக்குதல்: 4 மீனவர் பலி

Posted: 29 Mar 2007 01:34 PM CDT

இலங்கை கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 மீனவர்கள் பலியாகினர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இலங்கை கடல்எல்லையில் இந்திய மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 4 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கன்னியாகுமரிக்கு கொண்டுவரப்பட்டனர்.

இலங்கை கடற்படையினர் எவ்வித முன்எச்சரிக்கையும் விடுக்காமல், திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

"Yahoo-Tamil"

சற்றுமுன்: எஐஐஎம்எஸ் வேணுகோபாலுக்கு எதிராக ஐகோர்ட் தீர்ப்பு

Posted: 29 Mar 2007 01:20 PM CDT

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எஐஐஎம்எஸ்) இயக்குனர் வேணுகோபால் ஒரேநேரத்தில் இரு பதவிகளை வகிக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வேணுகோபால் எஐஐஎம்எஸ்-ன் இயக்குனராகவும், இருதய மருத்துவத்துறையின் பேராசிரியராகவும் ஒரே நேரத்தில் இரு பதவிகளை வகித்து வந்தார்.

இது தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுவதந்திர குமார் மற்றும் நீதிபதி எச்.ஆர்.மல்ஹோத்ரா அடங்கியோர் பெஞ்ச், கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டபின், இரு பதவிகளை வகிக்க முடியாது என்றும், பேராசிரியர் பதவியில் இருந்து வேணுகோபால் நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


"Yahoo-Tamil"

சற்றுமுன்: FTVக்கு இந்திய அரசு தடை

Posted: 29 Mar 2007 10:24 AM CDT

ஆட்சேபத்துக்குரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக F-TVயை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடைவிதித்திருக்கிறது. இந்த தடை வரும் ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதிவரை நீடிக்கும். இரண்டு மாதத்திற்கு முன்பு மற்றொரு ஆங்கில சேனலான AXNனும் இதே காரணத்திற்காக தடை செய்யப்பட்டு பின்னர் அந்த சேனல் மன்னிப்பு கேட்டபின் தடை விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

சற்றுமுன்: இரான், இங்கிலாந்து பிரச்சனை வலுக்கிறது

Posted: 29 Mar 2007 10:07 AM CDT

15 இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தான பிரச்சனை மேலும் மேலும் வலுக்கிறது.

நேற்று இங்கிலாந்து கடற்படை வீரர்கள் இரானின் கடல் எல்லைக்குள் நுழழயவில்லை என தன் பக்க ஆதாரங்களை அறிவித்தது. அதே நேரம் இரான் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணை தொலைக் காட்சி பேட்டியில் காண்பித்தது அப்போது அவர் தாங்கள் ககது செய்யப்படும்போது இரானின் கடல் எல்லைக்குள் இருந்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்தப் பேட்டிக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்தப் பெண்கைதி விடுவிக்கப் படுவார் என எதிர் பார்ப்பிருந்தது. இன்று செய்தியின்படி இரான் கைதிகளை விடுவிப்பதை தள்ளிப்போட்டுள்ளது.

இங்கிலாந்து இரானை தனிமைப்படுத்தும்படி உலக நாடுகளுக்கு இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புள்ள சுட்டிகள்

Full story: Google news
சற்றுமுன்:15 இங்கிலாந்து கடற்படை வீரர்களை ஈரான் கைதுசெய்துள்ளது
Iran delays sailor's release, UK seeks support
Iran says may not release British woman
Britons entered Iranian waters several times-Iran
Britain seeks UN condemnation of Iran
Iran says stop making 'fuss'
Pressure from London will hinder release of female sailor

ஒரகடத்தில் டிரக் தொழிற்சாலை :ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted: 29 Mar 2007 09:31 AM CDT

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதூர் அருகே ஒரகடத்தில் 60 ஏக்கர் பரப்பில் ரூ.75 கோடி முதலீட்டில் உயர்ரக டிரக்குகளை தயாரிக்கும் புதிய கனரக வாகன தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு தொழிற் சாலைகளை தொடங்க முதலமைச்சர் அனுமதி வழங்கி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். இதுவரை 10 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து உள்ளிட்ட எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.


"மாலைச் சுடர்"

சட்டசபைக்கு செல்லாதது ஏன்? ஜெயலலிதா

Posted: 29 Mar 2007 09:18 AM CDT

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட் விவாதம் குறித்து எனது கருத்தை சட்டசபையில் பேச வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் சபாநாயகர் அதற்கு நேரம் ஒதுக்கி எனது பேச்சுக்கு இடையே இடையுறு செய்யாமல் பார்த்துக் கொண்டால், முதல்-அமைச்சரின் பதிலை வாங்கி தருவதாக இருந்தால் பேசலாம்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கப்பட்டது. சபை விதிகள்படி அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதுமான நேரம் ஒதுக்கவில்லை.

நான் பேச வந்தாலும் இதுதான் நடக்கும். இடையுறு செய்வார்கள், அவ மதிப்பார்கள், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.எனவேதான் நான் சட்டசபையில் பட்ஜெட் உரையில் பேசவில்லை. அதே நேரத்தில் நான் பேச வேண்டிய கருத்துக்களை இந்த அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

- மாலை மலர்

பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ஏப். 1ல் பாராட்டு விழா

Posted: 29 Mar 2007 09:09 AM CDT


விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் வில்லியம் மோசஸ், உறுப்பினர்கள் ஜர்னெய்ல் சிங், பஷீர் அகமது ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

தொழிலதிபர் மகாலிங்கத்துக்கு பத்மபூஷன் விருது அளித்து கவுரவித்து உள்ளது. இவருக்கு பாராட்டு விழா கோவை அவிநாசி சாலை எஸ்.என்.ஆர் கலையரங்கில் ஏப்ரல் 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் மதநல்லிணக்கத்தை பேணும் விதமாக அனைத்து மதத்தினர் பங்கேற்கின்றனர். தொழில், வர்த்தகம், கல்வித்துறையினர் பலர் பங்கேற்கின்றனர்.


- மாலை முரசு

உலக ஒற்றுமைக்கு வன கிராம கோயில்களில் பொங்கல்

Posted: 29 Mar 2007 09:00 AM CDT

தொண்டாமுத்தூர், மார்ச் 29-


கோவையை அடுத்த சிறுவாணி அடிவாரம் சாடிவயல்பதி உச்சி மாரியம்மன் கோயில், முள்ளாங்காடு மாரியம்மன் கோயில்களில் பங்குனி மாதத் திருவிழா கொண்டாடப்பட்டது. சீங்கப்பதி, தொட்டப்பதி, வெள்ளப்பதி, சர்க்கார் போரேட்டி, ஜாகீர்போரேட்டி, கல்கொத்திபதி, தானிகண்டி ஆகிய வனக்கிராமங்களை சேர்ந்த மலைவாசிகள் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர்.அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது. விழாவையட்டி தினமும் மாலை மலைவாசிகளின் ஆடல், பாடல் நடனம் நடந்தது.

மழை வேண்டியும், உடல் நலன் ஆரோக்கியமாக இருக்கவும், உலக ஒற்றுமை வலியுறுத்தியும், வனவிலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. மலைவாசிகள் மஞ்சள் நீராடினர்.

திருமண மண்டபத்தை இடிக்க 5 மாத அவகாசம் வேணும்:விஜயகாந்த் மனைவி

Posted: 29 Mar 2007 08:48 AM CDT

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் நிர்வாக இயக்குனரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்க எங்களுக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை மத்திய அரசு ஆர்ஜிதம் செய்துள்ளது. இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மண்டபத்தை காலி செய்து மார்ச் 26-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோர்ட் கெடு விதித்தது. இந்த கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிக்கு எங்கள் மண்டத்தில் பலர் பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். எனவே, ஆகஸ்ட் வரை கெடுவை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் பிரேமலதா கூறியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இதில் மத்திய அரசு சார்பாக உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜராகிறார்.

- மாலை முரசு

கட்டாய தமிழ் சுமையாக இருக்காது

Posted: 29 Mar 2007 08:37 AM CDT

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் தமிழை கட்டாயமாக சொல்லி தரவேண்டும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் விடுதலை ஆஜரானார். ஒன்றாம் வகுப்பு முதல் கட்டாய தமிழ் கொண்டு வருவது மாணவர்களுக்கு சுமையாக இருக்காது. கர்நாடகாவில் 3ம் வகுப்பில் இருந்தும், மகாராஷ்டிராவில் 5ம் வகுப்பில் இருந்தும் தாய்மொழி கட்டாய பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது சரியானது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

- மாலை முரசு

கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

Posted: 29 Mar 2007 08:10 AM CDT


சினிமா மற்றும் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ வழங்கியது. மும்பையில் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சியில் விருதுடன் நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகை ரேகா.

இராமநாதபுரத்தில் 8 ராடர்கள்:முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா அமைத்தது.

Posted: 29 Mar 2007 06:54 AM CDT

கட்டுநாயக்கா விமானப் படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் முதலாவதாக நடத்திய விமானத் தாக்குதலையடுத்து வான் பரப்பை கண்காணிப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 8 ராடர்களை இந்திய விமானப் படையினர் பொருத்தியுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு: www.thinakural.com

சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

Posted: 29 Mar 2007 03:02 AM CDT

டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.

மேலதிக தகவல்களுக்கு

Links for 2007-03-28 [del.icio.us]

Posted: 29 Mar 2007 12:00 AM CDT

பள்ளிப் பேருந்து மனிலாவில் பிணை - சுபம்

Posted: 28 Mar 2007 09:11 PM CDT

மணிலாவில் 33 சிறார்களையும் இரு ஆசிரியர்களையும் பிணையாக வைத்திருந்த சம்பவம், எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்தது. ஏழை மாணவர்களுக்கு கல்வி கோரி, இதை அரங்கேற்றியதாக 56 வயது யூன் (Jun Ducat) தெரிவித்தார்.

The Standard - China's Business Newspaper: "A man who took a busload of children and teachers hostage from his day-care center in Manila Wednesday freed them after a 10-hour standoff during which he denounced corruption and demanded better lives for poor children."